Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழின அழிப்பு நடவடிக்கையின் புத்தாண்டு பரிசே மகேஸ்வரனின் படுகொலை - ச. சந்திரநேரு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 03-01-2008 22:45 மணி தமிழீழம் [தாயகன்]

தமிழின அழிப்பு நடவடிக்கையின் புத்தாண்டு பரிசே மகேஸ்வரனின் படுகொலை - ச. சந்திரநேரு.

மிகக் கொடூரமாக இந்து ஆலயம் ஒன்றில் வைத்து நண்பர் மகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டது ஆழ்ந்த வேதனையினையும் அதிர்ச்சியினையும் அளித்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ச. சந்திரநேரு தனது அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எனது அரசியல் வாழ்வில் நான் சந்தித்த ஓர் இனிமையான நண்பன் மகேஸ்வரனாவார். அவர் புனிதத் திருத்தலம் ஒன்றில் படுகொலை செய்யப்பட்டமையானது, அத்திருத்தலத்தின் புனிதத் தன்மைக்கு மாசு கற்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்து மக்களின் உணர்வுகளுக்கும் சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது.

நண்பர் மகேஸ்வரன் தாம் கொண்ட இலட்சியத்தில் தீராத வேட்கை கொண்டு பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் மிகத் தீவிரமாகவும், ஆக்ரோசத்துடனும் சொற் போர் நடத்துவதில் வல்லவர். அது மாத்திரமல்ல அவர் ஒரு சிறந்த இந்து பக்தர். கடவுள் மீது அபார நம்பிக்கை கொண்டவர். திருநீற்றுப் பூச்சுடனும், மலர்ந்த முகத்துடனும் இவர் பாராளுமன்ற கதிரையில் வீற்றிருந்து எல்லோரிடமும் சகோதர வாஞ்சையுடன் அன்பாக பழகும் உணர்வு கொண்ட ஓர் சிறந்த ஜனநாயகவாதியினை இன்று இழந்து நிற்கின்றோம்.

இம் மிலேச்சத்தனமான நடவடிக்கை இவ் வருடத்தில் படுகொலைகள் ஆரம்பிப்பதற்கான ஓர் பாதை திறப்பினை கட்டியம் கூறி நிற்கின்றது. கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திரநேரு, ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் மற்றும் தமிழ் பத்திரிகையாளர்கள் போன்றவர்களின் படுகொலைகள் தொடர்பில் இது கால வரையிலும் காத்திரமான நடவடிக்கைகள் அரசினால் எடுக்கப்படவில்லை. கொலையாளிகளும் சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தப்படவில்லை. இதே நிலைமைதான் மகேஸ்வரன் கொலை விசாரணையிலும் தொடரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

சந்தோசமாகவும், சுபீட்சமாகவும் சமாதானம் வேண்டி மலர வேண்டிய இப்புத்தாண்டு மகேஸ்வரனின் படுகொலை மூலம் இரத்தக் கறை படிந்த அரசியலின் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கு வித்திட்டுள்ளது. மிலேச்சத்தனமான இத்தாக்குல் மூலம் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்;பு கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கெதிராக அரங்ககேறி வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களின்போது அச்சமின்றி ஓங்கி ஒலித்த ஓர் ஜனநாயக பிரியரின் குரல்வளை நசுக்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் ஆகும். அநாகரிகமான முறையில் நிகழ்த்தப்பட்ட இப்படுகொலை புனிதமான நாளொன்றில், இடமொன்றில் மேற்;கொள்ளப்பட்டது மனித விழுமியங்களையும் கலாச்சாரப் பண்புகளையும் மதிக்கும் எந்தவொரு சமூகத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படமுடியாது. இப்படுகொலை ஜனநாயகத்திற்கும், தனி மனித கருத்;துச் சுதந்திரத்திற்கும் விடுக்கப்பட்ட சவால்.

பாராhளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் அவரால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் சிலருக்கு ஏற்புடையதற்றதாக இருந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொருவரும் தத்தமது கருத்துக்களை கூறுகின்ற உரிமை அவர்களுக்கு உண்டு.. ஒருவரது கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர ஆயுதங்களால் எதிர்கொள்ளக்கூடாது. ஆனால் துரதிஸ்டவசமாக கருத்துக்களை ஆயுதங்களைக் கொண்டே அழித்து வரும் மரபு தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. எனவே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை தடுக்கும் நோக்குடன் காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இனியும் தாமதிக்கக்கூடாது.

பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத விழுமியங்கள் குழி தோண்டி புதைக்கப்பட்டு வருவதனையே இத்தகைய படுகொலைகள் பறைசாற்றி நிற்கின்றது. சமூக சேவையாளனும், முற்போக்கு சிந்தனையாளருமாகிய மகேஸ்வரனின் மறைவு தமிழின சமூகத்திற்கு ஏற்பட்ட மற்றுமொரு பாரிய இழப்பாகும்.

மகேஸ்வரனை பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், உற்றார் உறவினர்;களுக்கும், அவரது நண்பர்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்;பில் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ச. சந்திரநேரு.

பாராளுமன்ற உறுப்பினர்

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

தமிழ் தேசிய கூட்டமைப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.