Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைத்துலக சமூகத்தில் இருந்து சிறிலங்கா மேலும் தனிமைப்படுத்தப்படும்: "ரொய்ட்டர்ஸ்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 03-01-2008 23:06 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்]

சிறீலங்காவின் நடவடிக்கையால் நம்பிக்கையை இழந்துவிட்ட முதலீட்டாளர்கள்.

சிறீலங்கா அரசு ஒரு தலைப்பட்சமாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளது. இவ் அறிவிப்பானது, சிறீலங்காவில் முதலீடு மேற்கொள்ளவிருந்த வர்த்தக சமூகங்களின் நம்பிக்கையை இழக்க வைத்திருப்பதாக ரொய்ட்டஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு தலைப்பட்சமாக சிறீலங்கா அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதால் அனைத்துலக சமூகத்திலிருந்தும் தனிமைப்படுத்தப்படும் அபாயத்தை கொண்டிருப்பதாக மேலும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோர்வே நாட்டின் அனுசரணையுடன் 2002ம் ஆண்டு சிறீலங்கா தரப்புக்கும், தமிழ்த்; தரப்புக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்த போதும், 2005ம் ஆண்டு ஆரம்பப் பகுதியிலிருந்து யுத்த மீறல் சம்பவங்கள், குறிப்பாக தமிழர் தாயகப் பிரதேசத்தில் பாரிய அளவில் ஏற்பட்டுள்ளன.

’போர்நிறுத்தம் ஏற்கனவே முறிவடைந்துவிட்டது என்பது நமக்குத் தெரியும். இருந்தும் போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து தாம் அதிகாரப்பூர்வமாக விலகப்போவதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது. இவ் அறிவித்தலானது பெரியதொரு வேறுபாட்டை கொண்டுவரப்போவதில்லை’ என லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் தென் ஆசிய பிராந்தியத்திற்கான பாதுகாப்பு ஆலோசகர் ஜெனிபர் ஹார்பிசன் தெரிவித்துள்ளார்.

மேற்கு நாடுகள் சிறீலங்கா அரசைத் தனிமைப்படுத்த முயற்சிக்குமேயாயின், சிறீலங்கா அரசு ஈரான், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளுடன் நட்புறவைப் பலப்படுத்தும் எனவும் பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

சிறிலங்கா மீது மேற்குலக நாடுகள் அதிருப்தியைக் கொண்டுள்ளன. எனவே தான் சிறிலங்கா ஆசியப் பிராந்தியத்தில் தனது இராஜதந்திர நடவடிக்கைகயை தற்போது அதிகரித்துள்ளது. எனினும் போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து அரசு ஒரு தலைப்பட்சமாக வெளியேறியது அரசை மேலும் தனிமைப்படுத்தும் என "ரொய்ட்டர்ஸ்" செய்தி நிறுவனத்திற்கு எழுதிய ஆய்வுப்பத்தியில் பீற்றர் ஆப்ஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பந்தத்திலிருந்து விலகியமை அரசாங்கத்தினை தனிமைப்படுத்தும் ராய்ட்டர் செய்தி சேவை ஆய்வு

1/4/2008 10:20:55 PM

- யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து இலங்கை விலகிக்கொண்டமை அரசாங்கத்தினை மேலும் தனிமைப்படுத்தும் என்று ராய்ட்டர் செய்தி சேவை வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வின் விபரம் வருமாறு: ஏற்கனவே நெருக்கடியில் இருந்த போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து ஒரு தலைப்பட்சமாக சிறிலங்கா வெளியேறியது. அதனை அனைத்துலக சமூகத்தில் இருந்து அதிகளவில் தனிமைப்படுத்தலாம். எனினும் அது முதலீடுகளிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தாலாம்.

இரு தசாப்தங்களாக நடைபெற்று வந்த இனப்போரை நோர்வேயின் அனுசரணையுடன் 2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு கொண்டு வந்திருந்தது. ஆனால் 2005 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலும் 2006 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் அது முறிவடைந்தது. தமிழ் மக்கள் வாழும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட போர், சிறிலங்காவின் தலைநகரில் ஏற்பட்ட குண்டுவெடிப்புக்கள் அதற்கான காரணங்கள்.

எனினும் கடந்த புதன்கிழமை அரசு ஒரு தலைப்பட்சமாக வெளியேறுவதாக அறிவிக்கும் வரையிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் காகிதத்தில் மட்டுமே இருந்தது. போர் நிறுத்தம் முடிந்துவிட்டது என்பது எமக்கு முன்னரே தெரியும் என பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட தென்னாசியப் பிராந்திய ஆபத்து கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் ஜெனிபர் ஹர்பிசன் தெரிவித்துள்ளார். இது மிகவும் விசித்திரமானது. எனினும் பெரும் வேறுபாடுகளை அது ஏற்படுத்தப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளரும் , அமைதிப்பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான சு.ப. தமிழ்ச்செல்வன் சிறிலங்கா அரசின் வான் தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர், மஹிந்த அரசு பேச்சுக்களின் மூலம் தீர்வைக்காணும் என்பதில் தான் நம்பிக்கை கொள்ளவில்லை என விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்களின் தனிநாட்டுக்கான தனது கோரிக்கையைத்தான் புதுப்பிக்கப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். போர் நிறுத்த உடன்பாடானது அதிகாரபூர்வமாக முறிந்துபோவது மோதல்களை மேலும் அதிகரிக்கச் செய்யலாம் என ஆய்வாளர்களும், இராஜதந்திரிகளும், தெரிவித்துள்ளனர். 2006 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உக்கிரமடைந்த போரில் 5000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இது போரில் உயிரிழந்தோரின் தொகையை 70,000 ஆக உயர்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு கொழும்பு பங்குச்சந்தை 6.7 விகித இழப்பை சந்தித்துள்ளது. அனைத்துலக சமூகத்தின் நம்பிக்கையீனமே இதற்கான காரணம். ஏற்கனவே வீழ்ச்சி அடைந்து வரும் அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்காவின் ரூபாயும் ஒரு விகிதமும் வீழ்ச்சி கண்டுள்ளது.

ஆனால் 26 பில்லியன் டொலர் பொருளாதாரத்தின் 2008 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7 விகிதமாக இருக்கும் என மத்திய வங்கி தெரிவித்து வருகின்றது. கடந்த ஒக்டோபர் மாதம் அரசு ஐரோப்பிய பிணை மூலம் 500 மில்லியன் டொலர்களை பெற்று தன்னை வலுப்படுத்த முயற்சித்திருந்தது.

போரானது தென்னிலங்கையின் செயற்பாடுகளில் சிறிதளவான பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நான் எண்ணவில்லை. ஆனால் தற்போதைய நிலையே எதிர்காலத்தில் தொடரலாம் என புரோகெரேஜ் எக்ஸ்ரோட்டிக்ஐ சேர்ந்த வியூகவியலாளர் ஸ்ருவாட் கிளவர்கவுஸ் தெரிவித்துள்ளார்.

யுத்தநிறுத்த ஒப்பந்தம் முழு இலங்கைக்குமானது. யுத்தமும் முழு இலங்கைக்குமானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.