Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழ விடுதலைக்கான பாதையை சாள்ஸ் போட்டுச் சென்றுள்ளான் - ச.பொட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைக்கான பாதையை சாள்ஸ் போட்டுச் சென்றுள்ளான் - ச.பொட்டு

விடுதலைப் பேராட்ட வரலாற்றில் பல வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியவர் கேணல் சாள்ஸ் என தமிழீழ புலனாய்வுப் பொறுப்பாளர் ச.பொட்டு அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு உரையாற்றும் போது...

சாள்ஸ் இன்று எம்மை விட்டு மறைந்துவிட்டார் நிலையில் தமிழீழத்திற்கான வரலாற்றிலே, சாள்ஸ் எவ்வாறு நினைவு கூரப்படுவார். அல்லது எவ்வாறு நினைவு கூரப்படுவதற்கு பொருத்தமானவனாவான், தமிழீழம் எவ்வாறு அவனை நினைவு கொள்ளும் என்ற எண்ணம், கேள்வி என்முன்னே எழுந்து நிற்கிறது. எனது மனதில் எழுகிறது.

வாழும் காலத்தில் செய்திகளாக கூறப்படுவோர் உண்டு. வாழும் காலத்தில் கூட அல்லாமல், விழுந்த பின் கூட செய்திகளாக்கக்கூட முடியாத மறைமுக செயற்பாட்டு அணிகளில் இருந்தவர்களின் சாதனைகள், அந்த சாதனைகளின் முன்னாலும் அந்த சாதனைகளின் பின்னாலும் இருந்தோரினுடைய உழைப்புகள், அந்த சாதனைக்கு முன்னும் பின்னுமான நின்றோரின் அர்ப்பணிப்புகள் என பல்வேறு நிகழ்வுகள் சம்பவங்கள், நினைவுகள் என் மனக்கண் முன்னே விரிகின்றன.

இந்த நேரத்தில் எனக்கு ஒரு போரியல் அறிஞனின் மேற்கோள் நினைவுக்கு வருகின்றது. ''சாவைச் சந்தித்து, போர்க்களத்தில் முன்னிலையில் நிற்பவர்கள் அல்ல வீரர்கள். போர்க்களத்தின் பின்னே நின்று, அந்த போர்க்களத்தின் அழுத்தத்தை சுமப்பவர்களே வீரர்கள்''

இந்த புலனாய்வு நகர்வுகளின் அழுத்தங்களின் தாங்கு சக்தியாக நின்ற ஒரு மாவீரனாக நான் சாள்சைப் பார்க்கின்றேன். அவன் போர்க்களத்தில் தன் உயிரைக் கொடுக்க நின்ற அந்த வீரத்திற்கு மேலாக, அவன் தயாராக நின்றான்.

ஆனால் அதற்கும் மேலாக அந்த போர்க் களத்திற்கு மேலாக நின்று போர்க்களத்தின் அழுத்தத்தின் தாங்கு சக்தியாக நின்றது, அதற்காக உழைத்த உழைப்பினால் அவன் நினைவுகூரப்பட வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.

சில நடவடிக்கைகள், மிகக் கடினமான சூழலில் சில காலநிர்பந்தத்தில் செய்ய வேண்டிய வேளைகளில், அந்த நடவடிக்கைகளுக்காக எமது பொருட்பட்டியலில் சாள்சுக்கான ஒரு ''பனடோல்'' பெட்டியும் இருக்கும்.

எங்காவது, யாராவது பிரச்சினையை ஏற்படுத்திவிட்டு வருவார்கள். உடனடியாக மாற்று ஏற்பாட்டுக்காக அடுத்த திட்டத்தைப் போடவேண்டி இருக்கும். சாள்ஸ் எனக்குச் சொல்லுவார். ''எனக்கு நடவடிக்கை நேரத்தில் தலையிடிக்குப் பனடோல் போட்டுமே தலை மொட்டையாகப் போகப்போகுது என்று''

ஒரு அதீதமான துணிவும், அதிலும் மேலாக அசாத்தியமான தன்னம்பிக்கையும், சாள்சின் அடையாளங்காக இருக்க வேண்டும். அதுவே தமிழீழ வரலாற்றில் அடையாளமாகப் பதிவு பெறும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

இங்கு கூறியவர்களின் கருத்துக்கள் ஊடாக சாள்சின் வரலாறு தவறாகிவிடக் கூடாது என்ற ஆதங்கத்தினால் சில விடயங்களை கூற வேண்டி வருகின்றது. இன்று வரை சாள்ஸ் பற்றி சரியான தகவல்கள் எதிரிக்குக் கிடைக்காமலும், சாள்சினுடைய அடையாளங்கள் மட்டுமல்லாமல், அவனது பின்னணி சார்ந்ததுமான தகவல்கள் எதிரிக்கு வராதும் இருந்த காரணமாகவே நான் நினைக்கின்றேன். 2000ம் ஆண்டு காலம் வரையிலான காலம் இருந்தது.

நான் நினைக்கின்றேன் 99ம் ஆண்டு அல்லது 2000ம் ஆண்டு காலப் பகுதியிலே கொழும்புக்கு அடுத்த சுற்று போவோமா என என்னிடம் கேட்டான்.

சாஸ்சின் அறிமுகத்தை நினைத்துப் பார்க்கின்றேன். போர்க்களத்தின் ஊடாக எமது தோழர்கள் அடையாளம் காணப்படவேண்டும் என்று. இந்திய இராணுவ போர்க்காலத்திலே, எனக்கு நெருக்கடியான போர்க்களத்து சூழலிலே தான் எனக்கு அறிமுகமானவன். அப்பொழுது எனது மெய்ப்பாதுகாவலராக தலைவர் அவர்களால் தரப்பட்ட கிளி என்ற போராளியினால் சாள்ஸ் எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

நான் சாள்சை நேரடியாக அறிந்து அறியாததை விட கிளியின் ஊடாகவே அந்த அறிமுகத்தைப் பெற்றேன். தொழில் சார்ந்தும் அறிவு சார்ந்ததுமான அந்த அறிமுகத்தில், எனது யாழ் மாவட்ட வேலைகளுக்கு அப்பால் சில எதிர்பார்ப்புகளுடன் கொழும்பு அனுப்பியிருந்தேன்.

வரையறுக்கப்படாத பணி தரப்பாடாத போதிலும், சாள்சினுடைய ஆரம்பகால கொழும்புப் பயணமானது கொழும்புப் பரீட்சையத்தை ஏற்படுத்தியிருந்தது.

எங்களிடம் புலனாய்வுத் தகமைகள் என்று இருந்ததெல்லாம் பத்திரிகைகளை வாசித்துக் கொள்வதன் ஊடாக கிடைத்த செய்திகளும் அதற்கும் மேலாக ஆக்கிரமிப்பாளர்களை எமது தீவிரமான நடவடிக்கைகள் மூலமாகவே வெல்ல முடியும் என்ற தலைவரது வலிகாட்டலும் தான்.

இந்திய இராணுவம் எம்மை ஆக்கிரமித்த காலத்திலே நாம் சந்தித்த நெருக்கடியானது, இன்று உள்ள இளைய சந்ததியினருக்குத் தெரியாது. அவர்கள் அன்று பிறந்தே இருந்திருக்க மாட்டார்கள். அப்போது தலைவர் அவர்கள் என்னிடம் புலனாய்வுப் பொறுப்பைத் தந்து சில வேலைகளைத் தந்திருந்தார்.

அந்த வேலைகளை நோக்கி நாங்கள் நகர்ந்துகொண்டிருந்தோம்.எங

  • கருத்துக்கள உறவுகள்

அந்த புலனாய்வு அறிக்கையானது, அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்தினா அவர்களும், அவரது நம்பிக்கையான படைத் தளபதிகளும், தீட்டும் திட்டம் பற்றியதும், அது பற்றிய உண்மை நிலைகளை உள்ளடக்கியதுமான ஆதாரங்களை உள்ளடக்கிய புலனாய்வு அறிக்கை. இப்போதும் அது இரகசியம் என்பதால் நான் அதை வரையறுத்தே கூறவேண்டியவனாக இருக்கின்றேன்.

அம்மானின் இந்தக் கூற்றுக்களை ஒட்டி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சிங்கள மாணவன் சொன்னான்..

எல்லாத் தலைவர்களையும் விட ரஞ்சன் விஜேரட்னா (பிரேமதான அரசின் காலத்து பாதுகாப்பு அமைச்சர்) தான் தலைவரை மிகவும் நெருங்கி ஆபத்தைக் காவிச் சென்றவர் என்றும்... சில தலையீடுகளால்.. அவரால் அதைச் பூர்த்தி முடியவில்லை என்றும்..! நான் இதை அப்போ நம்பவில்லை. ரஞ்சன் முழுச் சிங்கள பேரினவாதி மட்டுமன்றி மிக தந்திரமான பேர்வழிகளில் ஒருவர்..! :lol:

எவ்வளவோ சாதனைகளுக்குப் பொறுப்பான ஒரு தளபதியை இழந்துவிட்டோம்..! வீரவணக்கங்கள் சாள்ஸ்..!

Edited by nedukkalapoovan

கடந்த சமாதாண காலம் புலனாய்வுக்கு சாதமாக இருந்து இருக்கும்(?) ஆனால் இனி வரும் காலம் அப்படி இருக்காது ஆனாலும் பாதுகாப்பில் ஓட்டைகளை கண்டறிவதில் சார்ள்ஸ் அண்ணாவை போல் பல போராளிகளை உருவாக்கி இருப்பார்.

எனது வீரவணக்கம்........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.