Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத் தீர்வை மட்டுமே விட்டு வைத்திருக்கும் மகிந்த: "த வோல் ஸ்றீற் ஜேர்னல்"

Featured Replies

இராணுவத் தீர்வை மட்டுமே விட்டு வைத்திருக்கும் மகிந்த: "த வோல் ஸ்றீற் ஜேர்னல்"

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தற்போது இராணுவத்தீர்வை மட்டுமே விட்டு வைத்திருப்பதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "த வோல் ஸ்றீற் ஜேர்னல்" ஊடகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்காவில் இனப்போர் கடந்த இரு தசாப்தங்களாக நடைபெற்று வருகின்ற போதும் அரசு அதிகாரபூர்வமாக போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறியதனைத் தொடர்ந்து போரை வென்று விடுவோம் என அறைகூவல் விடுத்து வருகின்றது.

மகிந்த அரசு வடபகுதியில் பெரும் சமரையும் ஆரம்பிக்கவுள்ளது. ஆனால் பல வழிகளில் இது ஆபத்தான விளையாட்டு. இதுவரை நடைபெற்ற மோதல்களில் 70,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த இரு வருடங்களில் மட்டும் 5,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரம் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அதேவேளை கொழும்பில் வெடித்த குண்டு, போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து அரசை வெளியேறத் தூண்டியிருந்தது.

சிறுபான்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் நம்பிக்கையுடன் பேச்சுகளில் கலந்து கொள்வதில்லை என்பது மகிந்தவின் வாதம். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் அவர்களைத் தடை செய்துள்ளதுடன், நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் மீதும் கடுமையாக போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன.

தமிழ் மக்களின் மனங்களை வெல்வதில் மகிந்த அரசு வெற்றியடையவில்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொழும்பில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து அரசு பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்களை கொழும்பில் கைது செய்து நகரை விட்டு வெளியேற்றியிருந்தது. கடந்த வாரம் நடபெற்ற தாக்குதலைத் தொடர்ந்தும் 200 தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனிடையே கடந்த வாரம் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர், யாழ். குடாநாட்டில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களில் அரசிற்கு உள்ள தொடர்பை பகிரங்கமாக அறிவிக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.

போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் எப்போதும் மகிந்த காட்டிய அக்கறை மிகவும் பலவீனமானவை. விடுதலைப் புலிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவே அவர் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவர் தேர்தலின் போதும் தெரிவித்திருந்தார்.

அரசியல் தீர்வு முயற்சிகளில் அரசு காட்டி வரும் அக்கறைகள் மிகவும் குறைவானவை. பெரும்பான்மை சிங்கள மக்களால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுப்பதற்கான சட்டங்களும் குறிப்பிடப்படவில்லை. இதற்கு மகிந்தவின் பலவீனமான அரசியல் கூட்டணியே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. அவரது ஆட்சி, ஜே.வி.பியின் ஆதரவில் பெருமளவில் தங்கியுள்ளது.

மகிந்த அரசு, தற்போது விட்டு வைத்திருப்பது இராணுவத்தீர்வு ஒன்றைத்தான். எனினும் எந்த வழிகளிலும் அதனை உறுதிப்படுத்த முடியாது. விடுதலைப் புலிகளின் பலமான கோட்டையான வடபகுதியில் இராணுவம் தாக்குதலை நடத்தி வருகின்றது. படைத்தரப்பால் கிழக்கில் பெற்ற வெற்றிகளைக்கூட உறுதிப்படுத்த முடியவில்லை.

கொழும்பில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற குண்டு தாக்குதலில் தேசிய கட்டுமானத்துறை அமைச்சர் கொல்லப்பட்டிருந்தார்.

சிறிலங்காவில் சாதாரண பொதுமக்களே பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். கொழும்பில் நடைபெறும் தாக்குதல்கள் உல்லாசப்பயணத்துறையை பாதித்து வருகின்றது. முதலீடுகளும் வீழ்ச்சி கண்டு வருகின்றன. பங்குச்சந்தையும் உறுதியாக இல்லை. போர் நிறுத்த காலத்தில் மனித உரிமைகளை கண்காணித்து வந்த போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

விடுதலைப் புலிகளை முறியடிக்கும் வரையிலும் அரசியல் தீர்வைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை என மகிந்த கடந்த வாரம் தெரிவித்திருந்தார். அது உண்மையானால், அவர் வடபகுதிக்கு போரை நகர்த்த வேண்டும். ஆனால் ஒரு அரசியல் தீர்வை முன்வைக்காது போரை வெல்ல முடியாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.puthinam.com/

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தற்போது இராணுவத்தீர்வை மட்டுமே விட்டு வைத்திருப்பதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "த வோல் ஸ்றீற் ஜேர்னல்" ஊடகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.