Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருச்சியில் சினிமா கனவால் சீரழியும் குடும்பங்கள்; நடுத்தெருவுக்கு வந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Featured Replies

திருச்சியில் சினிமா கனவால் சீரழியும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடுத்தெருவுக்கு வந்தவர்களின் நிலைமை பார்த்தும் மேலும் மேலும் அத்துறையில் பலர் ஈடுபட்டு வருவது பல குடும்பங்களில் புயலை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சிக்கும் சினிமாவுக்கும் நீண்ட பாரம்பரியம் உண்டு. தியாகராஜபாகவதர் பிறந்த ஊர் என்பதாலோ என்னவோ திருச்சி சினிமா உலகில் முக்கிய பங்காற்றி வந்தது. இப்போது முன்னணி நடிகராக உள்ள நெப்போலியனும் லால்குடியை சேர்ந்தவர் தான்.

இப்படி திருச்சியில் இருந்து சினிமா உலகுக்கு சென்று ஜொலித்தவர்களை பார்த்து இப்போது தினமும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பலர் கோடம்பாக்கத்தை நோக்கி ஓடத் தொடங்கி விட்டனர். அப்படி கோடம்பாக்கத்தின் கவர்ச்சி உலகில் மயங்கி ஓடிய பலர் அனைத்தையும் இழந்து தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள முடியாமல் நடுத்தெருவில் சுற்றுகிறார்கள் என்பதுதான் கவலையான விஷயம். சிலர் கதி என்ன ஆனதே என்று தெரியவில்லை.

கடந்த ஆண்டு திருச்சி பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒரு படத்தின் பூஜை பிரமாண்டமாக நடந்தது. பட தயாரிப்பாளரும் ஹீரோவும் திருச்சியை சேர்ந்தவர்தான். திருச்சி சுவர் முழுவதும் விளம்பரம் எழுதப்பட்டு பிரமாதப்படுத்தப்பட்டது. ஆனால் 1 வருடத்துக்கு மேல் ஆகியும் படம் பற்றி பேச்சே வரவில்லை.

அதே போன்று திருச்சியை சேர்ந்த டாக்டர் ஒருவரும் 3 படங்களில் ஹீரோவாக நடித்தார். படத்தின் ஸ்டில்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டன. ஆனால் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் படத்தை எடுக்கிறேன் என்று குடும்ப சொத்தை விற்று கோடம்பாக்கத்தாரிடம் கொட்டி எல்லாவற்றையும் இழந்தவர்கள் எண்ணிக்கை 20ஐ எட்டி உள்ளதாம். பிரசாந்தை வைத்து தயாரித்த ஒரு பிரபல தயாரிப்பளார் அந்த படத்தால் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்தார் என்பது தனிக் கதை.

இப்படி ஹீரோக்களாக ஆசைப்பட்டு தயாரிப் பாளர்களாக ஆசைப்பட்டு பணத்தை இழந்தவர்கள் மத்தியில் திருச்சியில் குடும்ப பெண்கள் சிலரும் சினிமாவில் சிம்ரன், திரிஷா, ஸ்ரேயா போல வர ஆசைப்பட்டு இப்போது கோடம்பாக்கத்தையும் சுற்றி வரத் தொடங்கியிருப்பது மேலும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் மாயமாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள திருச்சி பெண் டயானா ஜெனிபர் சினிமா ஆசை கனவால்தான் பிரச்சினையில் சிக்கினார் என்று தெரிய வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் நட்சத்திர கலை இரவு நடத்தியவர்கள் மூலம் சினிமாவுக்குள் நுழைய ஆசைப்பட்ட ஜெனிபர் டயானாவை போட்டோ சென்சார் போட்டோ சென்சார் என்று 6 முறை சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் மொய்த்ததாம்.

இப்போது டயானா எங்கு இருக்கிறார் என்று தெரியாத நிலையில் அவரை மலேசியாவுக்கு கடத்தியிருக்கலாம். பயத்தில் அலறும் அவரது தாய் மரியபுஷ்பம் தான் சந்தேகப்படும் சாதிக் என்பவரை கைது செய்து மகளை மீட்டுத்தர வேண்டும் எனக்கூறி குடும்பத்துடன் கலெக்டர் ஆபீசை முற்றுகையிட போவதாக கூறியுள்ளார். சினிமா கனவு இப்போது இதில் சம்பந்தப்பட்டவர்களை போலீஸ் கூட்டத்துக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய நிலைக்கு தள்ளி விட்டது.

சமீபத்தில் வெளியில் தெரிந்த டயானா ஜெனிபர் கடத்தல் வழக்கு சினிமா இருப்பது போல மேலும் திருச்சியில் காணாமல் போன பெண்களின் பின்னணியிலும் சினிமா தொடர்பு பட்டிருப்பதாக வழக்குளை விசாரிக்கும் திருச்சி போலீசார் கூறுகின்றனர். இதில் பல பெண்கள் சினிமா ஹீரோயின் ஆசையில் கோடம்பாக்கம் சென்று தற்போது நடன நடிகைகளாக திரையில் வந்து கலை தாகத்தை தீர்த்துக் கொள்கிறார்களாம்.

இதில் அதிர்ச்சியான இன்னொரு தகவலை ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். அதாவது நடன போட்டிக்கு ஆட்கள் தேர்வு திரைப்படத்தில் நடிகர் ஹீரோ ஹீரோயின்கள் தேவை என்ற போர்வையில் பெண்களை சிலர் தவறான பாதைக்கு சில குடும்பங்கள் கொண்டு செல்கிறார்களாம். இதன் கடைசி கட்டமாக விபசாரத்தில் தள்ளப்பட்டு அதில் இருந்து மிள முடியாமல் தவிக்கும் பெண்கள் கடைசியில் மதுவுக்கு அடிமையாகி சிரழிந்து வருகிறார்களாம்.

சினிமா என்பது மாய உலகம் அதில் பத்மினி முதல் ரேவதி நதியா..எனத் தொடர்ந்து குஷ்பு, சிம்ரன், திரிஷா, ஸ்ரேயா என ஜொலித்தவர்கள் எண்ணிக்கை ரொம்ப குறைவு. ஆனால் ஒரு படத்தோடு காணாமல் போன கதாநாயகிகளும் பூஜையோடு காணாமல் போன கதாநாயகிகளும் ஆயிரத்தை தொடும் சினிமாவில் ஹீரோயினாக ஆசைப்பட்ட அந்த படத்தின் இயக்குனரால் செக்ஸ் சித்ரவதைக்கு உள்ளாகி கடைசியில் அந்த பட இயக்குனரையே கொன்று கைதாகி இப்போது குடி போதையில் சென்னை ரோடுகளில் ஆங்காங்கே விழுந்து கிடக்கும் நடிகை(ப) சங்கீதா சினிமாவால் பெற்றோரை இழந்த பிரீத்திவர்மா என பலரும் திருச்சியில் சினிமா மோகத்தில் சென்னையை நோக்கி ஓடும் இளம் பெண்களுக்கு எடுத்துக்காட்டுக்கள் இதை உணர்ந்து கொண்டால் அவர்களுக்கும் குடும் பத்துக்கும் நல்லது என்று விபரம் தெரிந்த ஒரு விநியோகஸ்தர் கூறினார்.

paraparappu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.