Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதுடில்லி நிர்வாகத்தை ஏமாற்றவும் மஹிந்தரின் அரசு திடசங்கற்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2008-01-27

புதுடில்லி நிர்வாகத்தை ஏமாற்றவும் மஹிந்தரின் அரசு திடசங்கற்பம்

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழு அள வில் நடைமுறைப்படுத்தும்படி சர்வகட்சி பிரதிநிதி கள் குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிபார்சு செய்திருக்கின்றது.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான இடைக்கால நடவ டிக்கையாக அதனைச் செய்யும்படி அது வேண்டியி ருக்கின்றது.

இத்தகைய வேண்டுகோளுக்கான காய்நகர்த்தல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சூழ்ச்சித் திட்ட தந் திர வேலை எனக் கடுமையாகச் சாடியிருக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

இந்தக் காய் நகர்த்தலுக்கு ஆதரவு தெரிவிப்பது போல இந்தியா கருத்து வெளியிட்டிருப்பது குறித்தும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆழ்ந்த கவலையும் வருத்தமும் தெரிவித்திருக்கின்றது.

இருபது வருடங்களாக அரசமைப்பிலும் சட்டத்தி லும் இருக்கின்ற ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு வேறு யாரும் சிபார்சு செய்யத் தேவையில்லை. நினைத்தால் தாமே தம்பாட்டில் அதனை அவர் நடைமுறைப்படுத்தலாம்.

ஆனால் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் அதிகாரப் பகிர்வுக்கு எ?80;ச் செய்யலாம் என்று ஆராய்ந்து கொண்டிருந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவை அத்திசையில் நகர விடாமல் தடுத்து இடையில் இக்கட்டுத்தடை போட்டு பதின்மூன்றாவது திருத்தத்தோடு கட்டிப்போட்டுவிட்டார் ஜனாதிபதி மஹிந்தர்.

இப்போது இடைக்கால நடவடிக்கையாக அரச மைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை முழு அள வில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் இனப்பிரச் சினைத் தீர்வுக்கான திசையில் ஆரோக்கியமாக நகர முடியும் என்றும் அவர் கதை விடுகின்றார்.

ஆனால் இது காலத்தை இழுத்தடித்து சர்வ தேசத்தை ஏமாற்றும் சூழ்ச்சித் தந்திரோபாயம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

மஹிந்தர் அரசின் இந்த நகர்வுகளைப் பெயரளவிலே னும் வரவேற்றுள்ள இந்தியா கொழும்பின் இந்த நகர்த் தலுக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் பௌத்த சிங் களப் பேரினவாதச் சூழ்ச்சித் திட்டத்தைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது அல்லது புரிந்துகொள்ளாமல் இருப்பது போலக் காட்டிக் கொள்வது வேதனைக் குரியது.

ஒரு லட்சம் துருப்புகளை இலங்கையில் நிலை நிறுத்தி தன்னுடைய கண் அசைவில் இயங்கும் பொம்மை மாகாண அரசு ஒன்றை வடக்கு , கிழக்கில் நிறுவி, தானே முன்னின்று நெம்பு போட்டுத் தள்ளியும், இந்த அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் சட்டமாக் கப்பட்ட அதிகாரப் பரவலாக்கலை இங்கு நடைமுறைப் படுத்துவதை இந்தியாவினால் சாத்தியப்படுத்தவே முடியவில்லை.

சுமார் ஒன்றரை வருட காலம் புதுடில்லி அரசின் பிற்புல ஆதரவுடன் கொழும்போடு இழுபறிப்பட்டு, இயலாமல் போகவே வேறு வழியின்றி ஆதங்கத்தில் விசனத்தில் "தனித் தமிழீழப் பிரகடனம்' செய்துவிட் டுத் தலைமறைவாக வேண்டிய நிலை புதுடில்லியின் பொம்மை மாகாண ஆட்சிக்கு ஏற்பட்டது.

அப்போது கொழும்பில் ஜெயவர்த்தனா அரசு நாடாளுமன்றில் மூன்றில் இரு பங்கு அறுதிப் பெரும் பான்மையுடன் மிக வலிமையாக இருந்தது. ஜனாதிபதி ஜெயவர்த்தனா முழுப் பலத்தோடும், வலுவோடும் இருந்தார். பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளின் சூழ்நிலைக் கைதியாக, அச்சக்திகளின் தாளத்துக்கு ஆடுபவராக அவர் இருக்கவில்லை. அந்த ஜெயவர்த் தனாவைக் கொண்டு, அரசமைப்பில் பதின்மூன்றா வது திருத்தத்தைச் செய்யப் பண்ணி அதைச் சட்ட மாக்க வைத்த இந்தியாவினால் அதை நடைமுறைப் படுத்த வைக்க முடியவில்லை.

அதுவும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான துருப் புகளைக் கொண்டு இலங்கையின் ஒரு பகுதியை ஆக்கிரமிக்க வைத்து முழு அழுத்ததைப் பிரயோகித் தும் அதைச் செய்ய முடியவில்லை.

அப்படியிருக்க

சிறுபான்மையினருக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்வது என்றாலே சீறிப்பாய்கின்ற பௌத்த சிங்க ளப் பேரினவாத சக்திகளிடம் அரசியலில் சூழ்நிலைக் கைதியாகச் சிக்கி, அந்தச் சக்திகளை நம்பி தமது அரசின் ஆட்சியைக் கொண்டு இழுக்கும் ராஜபக்ஷ நிர்வாகம், இப்போது அந்தச் சட்ட ரீதியான அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தப் போகிறது என்று அறி வித்ததும் அதை இந்தியா நம்புவதும், நல்ல நட வடிக்கை என வரவேற்பதும் புரியவே முடியாத விட யங்களாக இருக்கின்றன.

அரசமைப்பின் பதின் மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் மஹிந்த அரசு நடத்தப்போகின்ற நாடகத்தில் ஏமாறப் போகும் முதல் கதாபாத்திரம் இந்தியாதான் போலும்.

அத்தகைய ஏமாற்றுதலுக்கு தானே முதல் இலக்கு என்பதை அந்தக் காய்நகர்த்தலை பகிரங்கமாக வர வேற்று விழுந்தடித்த அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் பாரதமே உறுதிப்படுத்தியிருக்கிறது.

அதிகாரப் பகிர்வை விரைந்து மேற்கொள்ளும்படி சர்வதேச சமூகம் ஜனாதிபதி மகிந்தருக்குக் கடும் அழுத் தம் கொடுத்து வருகையில், அதனைத் திசை திருப்பி காலத்தை இழுத்தடித்தது. சர்வதேசத்தின் கவனத்தை வேறு பக்கம் தள்ளி விடுவதற்காகவே இந்தக் காய் நகர்த்தலை முன்னெடுக்கின்றார் மஹிந்தர். அது புது டில்லிக்குப் புரியாமல் இருப்பது இலங்கையின் சிறு பான்மை இன மக்களின் துரதிஷ்டமின்றி வேறில்லை.

http://www.uthayan.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தமிழ் கட்டுரையாளர்களுக்கு வேற வேலை இல்லை. அங்கே மகிந்தவின் ஆமிகார தளபதி எல்லோரையும் போட்டு தள்ள போறதா பேட்டி கொடுக்கிறார். :mellow:

அடசி இந்த தமிழ் பத்திரிகை காரங்க தான் ஆமிகார தளபதி குண்டு வெடிப்பில் அகப்பட்டபின் இயங்க முடியாமல் இருப்பார் பேச முடியாமல் கஸ்டப்படுவார் என்றும் எழுதினவை. ஆனால் அந்த ஆள் இரும்பு கட்டை போல கதைக்குது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.