Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சிறீலங்கா அரசின் அணுகுமுறைகளை தமிழர்கள் இராசதந்திரம் தோற்கடிக்க வேண்டும்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனோகரன் எழுதிய "சிறீலங்கா அரசின் அணுகுமுறைகளை தமிழர்கள் இராசதந்திரம் தோற்கடிக்க வேண்டும்"

சிறீலங்கா அரசாங்கம் இன ஒதுக்கலைக் கை விடவேண்டும் என்று ஐ.நா வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லுாயிஸ் ஆர்பர் தெரிவித்திருக்கிறார். அத்துடன் போர் நிறுத்தத்திலிருந்து அரசாங்கம் விலகியபின்னர் தொடரும் மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றமாகவே கருதப்படும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். லுாயிஸ் ஆர்பரின் இந்தக்கருத்துகள் முக்கியமானவை. இலங்கை தொடர்பில் அண்மையில் சர்வதேச அபிப்பிராயங்கள் படுமோசமாகவே இருக்கின்றன. அதிலும் ஐ.நா அமைப்பின் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் தொடர்ந்து சிறீலங்கா அரசாங்கத்தை விமர்சித்தும் கண்டித்தும் வருகின்றனர்.

அதன் உச்ச நிலையில் இப்போது லுாயிஸ் ஆர்பரின் கருத்தும் அமைகிறது. இலங்கையில் இன ஒதுக்கல்தான் நடக்கிறது என்பதை முதல் தடவையாக ஐ.நா பிரதிநிதியருவர் பகிரங்கமாகவே தெரிவித்திருக்கிறார். இந்த வகையில் இந்தக்கருத்து மிகவும் முக்கியமான கவனத்தைப் பெறுகிறது. சிறீலங்கா அரசாங்கம் இன ஒதுக்கலையே மேற்கொள்கிறது என்பதை இப் போது சர்வதேசரீதியாக நிரூபணமாக்கியிருக்கிறார் லுாயிஸ் ஆர்பர். இதன்படியே அதாவது, இனரீதியாகவே அரசாங்கம் நடந்து கொள்வதாகவும் அதனால்தான் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் மதிப்பிட்டிருக்கிறார்.

ஆகையால் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்களாகக் கருதப்படும் என்று அவர் சொல்லவேண்டி வந்தது. ஐ.நா முதல் தடவையாக இந்த அறிவிப்பைச் செய்துள்ளது என்பது தமிழர்களின் நிலையைப் பொறுத்து ஒருபடி மேல் என்றே சொல்ல வேண்டும். அதாவது சிறீலங்கா அரசாங்கத்தின் விடாப்பிடியான நிலைப்பாடுகளும் முரண் நிலைகளும் சர்வதேச அபிப்பிராயமெதையும் பொருட்படுத்தாத தன்மையும் அதனைத் தனிமைப்படுத்தியிருக்கிறது. இந்தத் தனிமைப்படுத்தல் என்பது அரசியல் ரீதியானதோ, பொருளாதார ரீதியானதோ, படை உதவி சார்ந்ததோ இல்லை.

பதிலாக கருத்து நிலையிலானது. அரசாங்கம் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை என்பதையும், அது வருங்காலத்தில் பாரிய சிக்கல்களையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தும் என்பதையும் இந்த கருத்துகள் முன்னோட் டமாகச் சொல்கின்றன. அதாவது இப்போது இவ்வாறு சொல்லப்படும் கருத்துகளை சிறீலங்கா அரசாங்கம் பொருட்படுத்தாது விட்டால் அடுத்த கட்டத்தில் சர்வதேசம் திரட்சி பெற்று அதற்கெதிரான நடவடிக்கைகளுக்கு போகும் என்பதே இதன் பொருளாகும். அப்படிப் போகும்போது, இப்போது தொடருகின்ற அரசியல், பொருளாதார, இராணுவ உதவிகளை சிறீலங்கா வெளியுலகிலிருந்து இழக்க வேண்டிவரும் என்பதாகும். ஆனால் அப்படியொரு நிலைமைக்கு சிறீலங்கா அரசாங்கத்தைத் தள்ள வேண்டுமானால் தமிழர்களின் பரப்புரைகளும் இராஜதந்திர முயற்சிகளும் அதிகரிக்க வேண் டும்.

சிறீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களும், ஊடக சுதந்திரமின்மையும்தான் அநேகமாக வெளியுலகின் கவனத்தை ஈர்ததிருக்கின்றன. இந்த மனித உரிமை மீறல் களையும் ஊடக சுதந்திர மறுப்பையும் வெளியுலகுக்குக் கொண்டு போனதில் உள்ளூர் மனித உரிமை அமைப்பு களுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் பங்குண்டு. அத்துடன் ஊடகங்களும் இதில் பெரும்பங்கினை ஆற்றியிருக்கின்றன. ஆனால், இதன் தொடர்ச்சியாக சிறீலங்கா அரசாங்கத்தின் இன ஒதுக்கல் நடவடிக்கைகளை வெளியுலகத்துக்கு கொண்டு போக வேண்டிய பொறுப்பு இப்போது தமிழர் தரப்புக்கு அதிகமுள்ளது. அரசாங்கத்தின் எடுத்தெறியும் போக்கினாலும், தொடர்ச்சியான போர் முனைப்பினாலும் காலம் கனிந்து தமிழர் தரப்புக்கு வாய்த்திருக்கிறது.

எனவே, வாய்த்திருக்கிற காலத்தை அவர்கள் பயன்படுத்தாமல் விடமுடியுமா? லுாயிஸ் ஆர்பருடைய கருத்தை ஒத்ததாகவே, சர்வ தேச மன்னிப்புச்சபையும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகமும் சிறீலங்கா அரசுடன் மோதி வருகின்றன. இந்த அமைப்புகளின் இந்த நிலைப்பாட்டை தொடர்ந்து இதே நிலைமையில் வளர்த்து வரவேண்டிய பொறுப்பை தமிழர்கள் சரியாகக் கையாள வேண்டும். இனரீதியாக அரசாங்கம் நடந்து கொள்கிறது என்பதற்கு ஏராளம் உதாரணங்களுண்டு. அரசாங்கத்தின் படையிலேயே சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களே முழுமையாக இருக்கின்றனர் என்பது இதில் முக்கியமானது.

இனரீதியான இராணுவ ஒடுக்குமுறைக்கு இந்த விதமமான படையமைப்பே முதற்காரணமாகும். அத்துடன் தமிழர்களின் நிலம், பொருளாதாரம், அரசியலுரிமைகள், தொடர்பாடல், கல்வி, பண்பாடு என சகலதும் இனரீதியாகவே புறக்கணிக்கப்படுகிறது என்பதையும் தமிழர்கள் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்த வேண்டும். இதுவரையிலும் சிறீலங்காவில் என்ன நடக்கிறது என்பதை வெளியுலகம் அறியாமலா இருக்கிறது என்று யாரும் கேட்கலாம். அப்படிக் கேட்டுவிட்டு இந்த விசயங் களைப்பற்றிய விவரங்களையும் உண்மை நிலையையும் வெளியுலகத்துக்கு தெரியப்படுத்தும் நடவடிக்கையை யாரும் கைவிடவும் நேரலாம்.

ஆனால், அப்படியாயின் அது முழுத்தவறாகும். வெளித்தரப்புகள் எப்போதும் ஒரேவிதமாக நடந்து கொள்வதில்லை. அவை தமது தேவை நலன் என்பவற்றின் அடிப்படையிலேயே எந்தப் பிரச்சினையையும் பார்க்கின்றன. அதன்படியே அவற்றின் பார்வையும் அணுகுமுறையும் நடவடிக்கைகளும் அமைகின்றன. எனவே, நாமும் தவிர்க்க முடியாமல் எமக்கு வாய்க்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் உயரிய பெறுமானங்களைப் பெறமுடியும். இன்றைய உலக யதார்த்தத்தின்படி சந்தையைப் பகிர்வதற்கான ஏற்பாடுகள்தான் அரசியலையே தீர்மானிக்கின்றன என்பதைப்புரிந்து கொண்டே, அரசியல் நடவடிக்கை களை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இலங்கையில் நடக்கின்ற மனிதஉரிமை மீறல்களைப் பற்றி பல சர்வதேச பொது அமைப்புகளும் கண்டித்தும் வலியுறுத்தியும் வருகின்றபோதும் இன்னும் பல நாடுகள் சிறீலங்கா அரசாங்கத்துக்கு தாராளமாக நிதியுதவியையும் ஆயுத உதவிகளையும் செய்கின்றனவே என்று கேட்கலாம். இதுதான் இராஜதந்திரம். இன்றைய உலக ஒழுங்கில் சந்தைப் பகிர்வுக்கேற்ற விதத்தில்தான் எல்லாத் தீர்மானங்களும் மேற்கொள்ளப் படுகின்றன. அதன்படியே அரசியல் உறவுகளும் பகைமையும் கூட நிர்ணயமமாகின்றன. இதன்படி இப்போது இந்தியா, சீனா, அமெரிக்கா என்ற முக்கோணத்தில் சிறீலங்கா அரசாங்கம் தன்னைக் கேந்திர மையப்படுத்தி காரியங்களைச் சாதிக்கிறது.

இதற்கான இராஜதந்திரத்தை சிறீலங்கா அரசும் சிங்களத் தரப்பும் நுட்பமாக மேற்கொள்கின்றன. அதுவும் போரிலும் இராஜதந்திரத்திலும் சமகவனத்தை சிங்களத் தரப்பு செய்துகொண்டிருக்கிறது. இதை நிச்சயமாக தமிழர்கள் கவனிப்பது அவசியம். இப்போது புலம்பெயர் தமிழர்கள் உலகின் பல நாடுகளிலும் செறிந்து வாழ்கின்றனர். அப்படி அவர்கள் வாழும் சந்தர்ப்பத்தில் அவர்களது நாடுகளில் செறிவான பரப்புரையை சிறீலங்கா அரசுக்கு எதிராக ஆதாரபூர்வமாகவும் நுட்பமாகவும் வெளியுலகைக் கவரக்கூடியதாகவும் செய்ய வேண்டும். இது வெறும் பரப்புரை அல்ல. புத்திபூர்வமான வெளிப்பாட்டு முறை. அறிவுபூர்வமான இராஜதந்திரம்.

சர்வதேச ரீதியான பொது அமைப்புகளுடன் நாம் இணையக்கூடியவாறான எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் அவர்களை எங்களின் நிலைப்பாட்டுடன் இணைய வைக்கக்கூடிய விதத்திலான அணுகுமுறையிலும் நமது பரப்புரையும் தொடர்பாடலும் நிகழுமாக இருந்தால் சிறீலங்கா அரசை விரைவில் நாம் தனிமைப்படுத்தி விடலாம். அப்படி தனிமைப்படுத்தினால் அரசாங்கத்தின் பலத்திலும் உறுதிப் பாட்டிலும் பெரும் பாதிப்பேற்படும். அது தமிழர்களின் போராட்டத்தை வெற்றியை நோக்கிக் கொண்டு செல்லும். இத்தகைய உபாயத்தை கையாண்டு வெற்றிபெறுவது இப்போது தமிழர்களின் கட்டாயமாகியுள்ளது.

உலகம் முழுவதும் சிறீலங்காவின் போர் முனைப்பையும் மனித உரிமை மீறல்களையும் கண்டித்து வரும்போது இந்தியா மட்டும் இன்னும் அதைப்பற்றி எதுவுமே கூறாமல் பயங்கர வாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான உரிமை சிறீலங்கா அரசுக்குண்டு சொல்லியிருப்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் நிலைப்பாட்டில் இந்தளவுக்கு சடுதியான மாற்றத்தை கொண்டு வரத்தக்க முறையில் இப்போது சிறீலங்கா அரசாங்கம் தனது தந்திரோபாயத்தை வகுத்திருக்கிறது. இதன்படியே அது இந்தியாவை அனுசரித்துப் போகும் நிலைப்பாட்டை தான் எடுத்திருப்பதாகக் காட்டிக்கொள்கிறது. இந்த மாதத்தில் முன்வைக்கவுள்ளதாக அரசாங்கம் சொல்லும் இனப்பிரச்சினைத் தீர்வு யோசனைகளும் சிறீ லங்கா - இந்திய உடன்படிக்கையில் சிபாரிசு செய்து வலியுறுத்திய தீர்வை அடியற்றியே வைக்கவுள்ளதாக கூறுகிறது சிறீலங்கா.

இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்றப்போவதாக ஒரு பாவனையை ஏற்படுத்திக்கொண்டு அதனை தனது கைக்குள் போட்டுவிட்டு தமிழர்களின் மீது பெரும்போரைச் செய்வதே அரசாங்கத்தின் தந்திரோபாயமாகும். அதற்கு இலகுவில் இந்தியா பலியாகிவிட்டதுதான் மிகவும் வருத்தத்துக்குரியது. இந்தியாவையம் இப்போது நாம் கோபிக்கத் தேவை யில்லை. தன்னைச் சிறீலங்கா எப்படியெல்லாம் தனது நலனுக்காக பயன்படுத்திக் கொண்டது என்பதை இந்தியா உணருகின்ற காலமும் விரைவில் வரும்.

நாம் எப் போதும் இந்தியாவுடன் நல்லுறவைக் கொள்ளத்தயார் என்பதை தெளிவாக இந்தியா உணரக்கூடிய விதத்தில் சொல்வோம். பொதுவாக காலம் தமிழர்களின் பக்கமாகக் கனிந்திருக்கிறது என்றேபடுகிறது. அதை அதற்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்வது எமது கைகளிலும் சிந்தனையிலும்தான் தங்கியிருக்கிறது. தொடக்கப்புள்ளியை லுாயிஸ் ஆர்பர் போட்டிருக்கிறார். அடுத்தபுள்ளிகளைப் போட்டு அதை ஒரு கோலமாக்குவது நம் முன்னாலுள்ள பெரும் பணியாகும்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=8&

எப்போதும் போலவே நல்லாத்தான் எழுதியிருக்கு ஆனா முடிக்குபோதுதான் தமிழர்கள் செய்யவேணு செய்யவேணுமெண்டில்லாம என்ன செய்ய வேணுமெடும் சொல்லுங்கோ...

அல்லது செய்யிறாக்களையாது காட்டி இணைய சொல்லலாம் தானே? ஏதோ எனக்குப்பட்டதை சொன்னேன்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.