Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வுத் திட்டம் எதுவுமின்றி பயங்கரவாதத்தை தோற்கடிக்க கங்கணம் கட்டி நின்றால் நாடு மேலும் கொடுக்கவேண்டிய விலைதான் என்ன...?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வுத் திட்டம் எதுவுமின்றி பயங்கரவாதத்தை தோற்கடிக்க கங்கணம் கட்டி நின்றால் நாடு மேலும் கொடுக்கவேண்டிய விலைதான் என்ன...?

[06 - February - 2008]

வ. திருநாவுக்கரசு

இலங்கை இன்று மிக இக்கட்டானதும் இருள் சூழ்ந்ததுமான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. நாடெங்கிலும் மனித உயிர்கள் அழிக்கப்படுவதும் மரண ஓலங்களும் நாளாந்த நிகழ்வுகளாகியுள்ளன. நாடு 443 வருடங்களாக சுரண்டல் நிறைந்த அந்நிய ஆதிக்கத்திலிருந்து 1948 இல் சுதந்திரம் அடைந்ததாயினும், அன்று முதல் நாட்டில் நல்லாட்சி நிலவாமல் படிப்படியாகச் சீரழிக்கப்பட்டு வந்துள்ளதன் ஒட்டுமொத்த அறுவடையாகவே இன்றைய துர்ப்பாக்கிய நிலையினை நோக்க வேண்டும். மாறாக, இவையெல்லாம் ஒருபுறமிருக்கையில், மறுபுறத்தில் 60 ஆவது சுதந்திர தினம் படை அணிவகுப்பு மற்றும் யுத்தமயமான சாகஸங்கள் உள்ளிட்டு நேற்று முன்தினம் காலி முகத்திடலில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வைபவத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆற்றிய தனதுரையில் குறிப்பிட்டிருந்த சில அம்சங்களைப் பார்ப்போம்.

(அ) கிழக்கைப் போல் வடக்கையும் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டு அங்குள்ள மக்களுக்கு அரசியல் தீர்வையும் அரசியல் சுதந்திரத்தையும் பெற்றுக்கொடுப்போம்;

(ஆ) சுதந்திரம் பெற்று ஆறு தசாப்தங்கள் கடந்துவிட்டாலும் அதன் மூன்று தசாப்தங்கள் மிகவும் பரிதாபமான சாபக்கேடான பயங்கரவாதத்துடனும் கோரமான அனுபவங்களுடனும் வாழ வேண்டிய நிலை இலங்கை மக்களுக்கு ஏற்பட்டது.

(இ) நாட்டைப்பற்றிக் குறைகூறிக் கொண்டிருப்பதும் இழந்த சந்தர்ப்பங்கள் பற்றி பெருமூச்சு விட்டுக் கொண்டு இருப்பதும் நாட்டுக்குச் செய்யும் துரோகமாகவும், காட்டிக் கொடுக்கும் தன்மை யாகவும் கருதவேண்டிய காலம் வந்துவிட்டது. சிங்கப்பூர் போன்ற முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதிலும் அர்த்தமில்லை.

(ஈ) சரித்திரத்தில் ஒருநாளும் பெற்றுக்கொள்ளாத வெற்றிகளை அரச படையினர் பெற்றுக்கொண்டிருக்கின்றனர். அதேபோல் சரித்திரத்தில் ஒருநாளும் பெறாத தோல்வியை இன்று பயங்கரவாதம் தழுவிக் கொண்டிருக்கின்றது.

(உ) ஒற்றையாட்சியின் கீழ் செயற்படுத்தக்கூடிய தீர்வை இன்றைய அரசியலமைப்பின் ஊடாக வழங்குவோம். மாறாக பரீட்சார்த்தமான தீர்வுகளெதுவும் தேவையில்லை.

தமிழ் பேசும் மக்களுக்கு இற்றைவரை அரசியல் தீர்வோ அரசியல் சுதந்திரமோ கிட்டவில்லை என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதற்காக 3 தசாப்தங்களாக மேற்கொண்ட சமாதான முயற்சிகள் கண்மூடித்தனமாக புறந்தள்ளப்பட்டதன் காரணமாகவே பயங்கரவாதம் எனப்படும் ஆயுதப்போராட்டம் வெடித்தது என்பது ஒத்துக்கொள்ளப்படவில்லை. நாடு பின்தங்கியுள்ள நிலையில் அதனையிட்டு ஆழ்ந்து சிந்தித்து சுயவிமர்சனம் செய்து முன்னேறிய நாடுகள் போல் எமது நாடும் முன்னேற்றம் கண்டு சர்வதேச சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமென்று பேசும் சுதந்திரம் எந்தவொரு பிரஜைக்கும் உண்டு. அது தான் தேசப்பற்று. நம்பகத்தன்மையான அரசியல் தீர்வுத் திட்டம் எதுவுமின்றி பயங்கரவாதத்தை முற்றாகத் தோற்கடிக்க வேண்டுமென கங்கணக் கட்டி நின்றால் அதற்கு நாடு மேலும் கொடுக்க வேண்டிய விலைதான் என்ன என்பது ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியதொன்றாகும். சுதந்திரம் என்பதை நாளுக்கு நாள் அர்த்தபுஷ்டியாக்கிக்கொள்ள வேண்டுமென தான் நம்புவதாக ஜனாதிபதி தனதுரையில் கூறியுள்ளார்.

அதற்கு, தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தபுஷ்டியான அரசியல் தீர்வு அவசியமாகும். மாறாக, 13 ஆவது திருத்தம் முழுமையான அமுலாக்கம் பற்றி இன்று பேசப்படுவது உதவப்போவதில்லை என்பதை நாம் மிக ஆணித்தரமாகக் கூறிவைக்க விரும்புகிறோம்.

ஹன்டி பேரின்பநாயகம் - பூர்ண சுவராஜ்

இலங்கைக்கு முழுமையான சுதந்திரம் (பூர்ணசுவராஜ்) வேண்டுமென்று அன்று யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹன்டி பேரின்பநாயகம் தான் முதலில் பிரேரித்தவர் என்பதையும் ஜனாதிபதி ராஜபக்ஷ தனதுரையில் குறிப்பிட்டுள்ளார். பெரிதும் வரவேற்புக்குரியதாகும். ஏனென்றால் அன்று யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலானதொரு அற்புதமான பாலமாக விளங்கியது. குறிப்பாக, சிங்கள- தமிழ் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதிலும் இனவாதம், என்ற பேச்சுக்கே இடமிருக்கக்கூடாது என்பதிலும் மிக கண்டிப்பாகவும் ஒப்பற்ற அர்ப்பணிப்புடனும் ஹன்டி செயற்பட்டவர் என்று கூறினால் அது கிஞ்சித்தும் மிகையல்ல. தெற்கிலிருந்து பி.டி.ஈ.எஸ். குலரத்ன போன்ற தலைசிறந்த கல்விமான்களும் என்.எம். பெரேரா, எஸ்.ஏ. விக்ரமசிங்க மற்றும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க போன்ற அரசியல் தலைவர்களும் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸின் அமர்வுகளில் பங்குபற்றி உரையாற்றியிருந்தனர். 1920 களில் நிகழ்ந்த அந்த மகத்தான வரலாற்றினை இன்று தென்னிலங்கையில் பிரசாரப்படுத்துவதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் பெரிதும் விரும்புகிறோம்.

கொல்வின் ஆர்.டி.சில்வா 1948 இல் கூறியவை

1948 பெப்ரவரியில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த போது கொல்வின் ஆர்.டி.சில்வா "சுதந்திரம் போலியானதா உண்மையானதா?" எனும் தலைப்பில் வரைந்திருந்த கட்டுரையில் வெளியிட்டிருந்ததொரு கருத்தினை மீட்டுப்பார்ப்பது இச்சந்தர்ப்பத்தில் சாலப்பொருத்தமானதாயிருக்கும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.