Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

படைப்பலப் பரீட்சை இறுதியில் முட்டுக்கட்டையிலே முடியும்.

Featured Replies

விடுதலைப் புலிகளிடம் இருந்து வடபகுதியை இவ்வருட இறுதிக்குள் முற்றாக விடுவித்து கைப்பற்றுவோம் என இலங்கையின் அரசியல் தலைவர்ர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள போதிலும், கள யாதார்த்தங்கள் இதற்கேற்றால் போல அமைந்திருக்கவில்லையென தெரிவிக்கும் இராணுவ ஆய்வாளர்கள், இரு தரப்புகளில் ஒன்று வெற்றி பெறுவதற்குப் பதிலாக இந்தப் படைப்பலப் பரீட்சை இறுதியில் இராணுவ முட்டுக்கடைடை நிலையையே எட்டலாம் என எதிர்வு கூறியுள்ளது.

'இராணுவ முட்டுக்கட்டையை நோக்கி இலங்கை நகருகின்றதோ...!' என்ற தலைப்பில் இந்தோ - ஆசிய செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பயங்கரவாதப் பிரச்சினையை தமக்குப் பின்னர் புதிய இராணுவ தளபதிக்கு விட்டுச் செல்லமாட்டார் என இராணுவத் தளபதி சரத் தெரிவித்ததுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுதலைப் புலிகளின் தலைவரைத் தாங்கள் கொல்லப் போகின்றனர் எனச் சபதம் செய்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் கோட்டைகள் மிக வேகமாக வீழ்கின்றன எனத் தெரிவித்துள்ள மஹிந்த, ஒன்றரை மாவட்டங்களே புலிகளின் கையில் எஞ்சியுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கு கைப்பற்றபட்டமையும், அவர்களது கப்பல்கள் அழிக்கபட்டடமையும் குறிப்பிடத்தக்க சாதனைகளே. தென்பகுதியல் மக்களின் மனோநிலையை உயாத்த இவை உதவின.

என்னும் 2007 நடுப்பகுதிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்தால் குறிப்பிடத்தக்க வெற்றி எதனையும் பெற முடியவில்லை. இதன் காரணமாக நீண்டகால முட்டுக்கட்டை நிலை உருவாகலாம் என்ற அச்சம் இராணுவ ஆய்வாளர்கள் மத்தியில் காணப்படுகின்றது.

இது கடைசியல் பொதுமக்கள் மத்தியில் அதிருப்பதியையும் உருவாக்கலாம்.

மன்னாரில் இராணுவ நடவடிக்ககைள் செப்.23 ல் ஆரம்பமாகின் 16 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விடத்தல் தீவைக் கைப்பற்றுவதே இதன் நோக்கம். எனினும் நான்கு மாத மோதலின் பின்னர் எட்டு கிலோமீற்றரே கைப்படற்றபட்டுள்ளது. அது குறிப்பட்ட பிரதேசத்தின் மிகக் குறைந்தளவு பகுதியேயென இராணுவ நிபுணர் ஒருவர் இந்தோ-ஆசிய செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

வடக்கில் மன்னார் முதல் மணலாறு, நாகர் கோவில் போன்ற இடங்கள் வரை நீளும் பாரிய பிரதேசத்தில் இராணுவத்தினர் முடக்கப்பட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் முதலாவது, இரண்டாவது பாதுகாப்பு நிலைகளை தகர்த்து முன்னேறுவதற்குப் படையினர் முயல்கின்றனர். சிறப்புப் படைப் பிரிவுகளும், ஆயுதங்களும் இதற்கமைய பயன்படுத்தப்படுகின்றன. எனினும் படையினர் புலிகளின் கடும் எதிர்ப்பைச் சந்திக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகமாகவுள்ளன. விடுதலைப்புலிகள் அதிகளவில் கொல்லபட்டுள்ளனர். எனினும் அதனால் அவர்களது மனவுறுதி பாதிக்கப்படவில்லை என இராணுவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ்.குடாநாடடில் ஐம்பதினாயிரம் படையினர் நிலை கொண்டுள்ள போதிலும் இவர்கள் ஆணையிறவை கைப்பற்ற, வன்னி மீதான புலிகளின் பிடியை நெருக்குலுக்கு உள்ளாக்குவதற்கு பயன்படுத்தப்படவில்லை.

விடுதலைப் புலிகள் தம் மீதான ஆழுத்தத்தை குறைப்பதற்கும் அரச படையினரின் கவனத்தைச் திசை திருப்புதற்கும் மணலாற்றில் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். பலாலி தளத்தின் மீது ஷெல் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர்.

கெப்பிற்றிகொலாவை முதல் மணலாறு வரையிலும், புத்தளம் முதல் யாலவரையிலும், கொழும்பு முதல் கஞ்சிகுடிச்சாறு வரையிலும் அவர்கள் கிளைமோர் மற்றும் தற்கொலைக் குண்டு தாக்குதல்களை மேற் கொண்டுள்ளனர்.

கிழக்கிலிருந்த விடுதலைப் புலிகள் விரட்டப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் திங்கட் கிழமை அம்பாறையின் பக்மிட்டிய இராணுவ முகாமை அவர்கள் சிறிது நேரம் கைப்பற்றித் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றனர்.

வடபகுதியை இவ்வருடம் இறுதிக்குள் கைப்பற்றும் திட்டம் காரணமாக ஆயிரக்கணக்கான படையினர் வடக்கில் முடக்கபட்டுள்ள அதே வேளை, தென்பகுதியிலும் அதிகளவு படையினருக்கான தேவை அதிகரித்துள்ளது.

யாழில் நிலைகொண்டுள்ள ஐம்பதினாயிரம் படையினருக்கு மேலதிகமாக கிழக்கில் புதிதாக கைப்பற்றிய இரண்டாயிரம் சதுர கிலோமீற்றர் பிரதேசத்தைப் பாதுகாக்க ஒரு லட்சம் படையினரும், யாலவிற்கு நாலாயிரம் பேரும் தேவையென சுட்டிக் காட்டியுள்ள முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீப் மார்ஷல் ஹரி குணதிலக, கொழும்பிற்கும் ஒரு லட்சம் படையினர் தேவை யென்பதை கருத்தில் கொள்ளும் போது ஒட்டு மொத்தமாக இரண்டரை லட்சம் படையினராவது தேவைப்படலாம் என்றும் குறிப்பட்டுள்ளார்.

2007 இற்கான பாதுகாப்பு செலவினம் 13 ஆயிரத்து 900 கோடி ரூபா என தெரிவிக்கபட்டது. எனினும் உண்மையான செலவினம் இதனை விட 20 வீதம் அதிகமா இருக்கும். இவ்வருடம் இது 16 ஆயிரத்து 600 கோடி ரூபாவைத் தாண்டலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பல மேற்குலக நாடுகள் இலங்கைக்கான நிதியுதவிகளை நிறுத்தியுள்ள சூழ்நிலையிலேயே இது நடைபெறுவதாக அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

நன்றி சுடர் ஒளி

மேலதிகமாக இரண்டரை இலட்சம் படையினருக்கு எங்கே போவது? மக்களின் அதிருப்தி படைச் சேர்க்கையை சிதறடித்துவிடும். மீணிடும் ஒப்பந்தம்தான். இனி யார்காலில் விழுந்து இன்னுமொன்றைச் செய்வது?

3 லச்சமாக்குங்கோ.... எத்தினையாலும் விடுதலை வேட்கை... லேசானதில்லை... அதுசரி விடுதலை வேண்டினிறவருக்குத்தான் அது டிரியும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.