Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் தீவிரவாத நடவடிக்கைகள் அனைத்தும் ஒன்றரை மாவட்டத்துக்குள் முடக்கப்பட்டுள்ளன அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தீவிரவாத நடவடிக்கைகள் அனைத்தும் ஒன்றரை மாவட்டத்துக்குள் முடக்கப்பட்டுள்ளன அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறுகிறார்

2/10/2008 10:26:45 PM

வீரகேசரி நாளேடு - புலிகளின் தீவிரவாத நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது ஒன்றரை மாவட்டத்துக்குள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களின் நடவடிக்கைகள் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அதனை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். புலித்தீவிரவாதிகள் தமது தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அவை அரசின் முக்கிய பிரமுகர்களை இலக்குவைப்பதா அல்லது பொதுமக்களை இலக்குவைப்பதா? என்ற பாகுபாட்டுக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. தீவிரவாதிகள் பலவீனமடையும்போது தம்மைத்

தாமே பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தில் இவ்வாறான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகின்றார்கள் என்றே கூறவேண்டும். ஏனெனில் ஸ்திரமான நிலையில் உள்ள ஒரு தீவிரவாத அமைப்பானது தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் கும்பலுக்கு எதிராக மட்டுமே தமது நடவடிக்கைகளையும் கட்டவிழ்த்து விடுவதுதான் வழக்கம் என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல சிங்கள வார இதழுக்கு வழங்கிய பேட்டியியொன்றில் தெரிவித்துள்ளார்.

அப்பேட்டியின் விபரம் வருமாறு

கேள்வி விடுதலைப் புலிகளால் தற்போது நாட்டின் பல பாகங்களிலும் பாரிய தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தால் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பொது மக்களுக்கு அவ்வாறானதொரு பாதுகாப்பு இல்லை. இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலும் ஒரு கட்டுப்பாடு உண்டு. ஆனால் தீவிரவாதிகள் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள அரச பிரமுகர்கள் என்றோ அல்லது பொதுமக்கள் என்றோ வேறுபாடு பார்ப்பதாகத் தெரியவில்லை. தீவிரவாதிகள் பலவீனமடையும் போது அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களால் பொது மக்கள் இலக்கு வைக்கப்படுவதற்கான காரணம் எமது படையினர் வடக்கில் அவர்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் படையெடுப்புக்களே ஆகும். இந்த நாடு கடந்த சில வருடகாலங்களாகவே தீவிரவாதத்துக்கு அடிபணிந்து செயற்பட்டது.

இதுவரை காலமும் இந்த நாட்டின் தலைவராக யார் இருக்க வேண்டும் என்று தீர்மானம் எடுப்பதில் பிரபாகரனே முன்னின்றார். ஆனால் தற்போது நாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஏற்ப செயற்படுபவராவார். இதனால்தான் இவரது கால கட்டத்தில் நாம் பெற்ற வெற்றிகள் பல என்றே கூற வேண்டும். விடுதலைப் புலிகளிடமிருந்து மீண்டு வெற்றிப் பாதையை நோக்கி பயணிக்கும் காலம் நெருங்கிவிட்டது. தற்போது புலிகளின் தீவிரவாத நடவடிக்கைகள் அனைத்தும் ஒன்றரை மாவட்டத்குள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களின் நடவடிக்கைகள் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அதனை நாம் ஏற்றுத் தான் ஆகவேண்டும்.

கேள்வி போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருக்கும் வரையில் விடுதலைப் புலிகளின் இலக்கு பொதுமக்களாக இருக்கவில்லை. ஆனால் அந்த நிலைமை தற்போது இல்லை. போர் நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டமையே இதற்குக் காரணம் என்று கருதுகிறோம். இது குறித்த உங்களது கருத்து என்ன? பதில் போர் நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டதனாலேயே பொது மக்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து அல்ல. போர் நிறுத்த உடன்படிக்கை என்பது புலிகள் பலவீனமடையும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பயன்படுத்தப்பட்ட ஒரு கருவி என்பதே எமது கருத்தாகும்.

கேள்வி விடுதலைப் புலிகளால் தெற்குப் பகுதிகளில் பாரிய தாக்குக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் போதிலும் அரசாங்கம் அவ்வியக்கத்துக்கு தடை விதிக்காமலிருப்பதற்கு என்ன காரணம்?

பதில் போர் நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்படுவதற்கான காரணம் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட அழுத்தங்களாகும் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை. போர் நிறுத்த உடன்படிக்கையோ அல்லது புலிகளுக்கு தடை விதிப்பது என்பதோ ஏனோ தானோவென்று எடுக்கப்படும் முடிவுகள் அல்ல. அவை சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு எடுக்கப்படவேண்டும். புலிகளுக்கான தடை விதிக்க வேண்டும் எனும் ஒரு சூழ்நிலை ஏற்படுமாயின் அவ்வாறானதொரு முடிவு நிச்சயம் எடுக்கப்படும்.

கேள்வி கடந்த பல வருடங்களாக தொடர்ந்து போர் நடத்தியும் புலிகளை தோற்கடிக்க முடியாமல் போயுள்ளது. உண்மையில் போரின் மூலம் புலிகளை தோற்கடிக்க முடியுமென நீங்கள் நினைக்கின்றீர்களா? பதில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு சார்பாக குரல் கொடுப்பவர்கள் பிரபாகரனை மா பெரும் வீரர் என்று புகழ்பவர்கள் கூட இந்த நாட்டுக்குள்ளேயே வசித்தும் வருகின்றனர். இது இந்த நாட்டுக்கு கிடைத்த சாபக்கேடு என்றே கூற வேண்டும்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை அடியோடு அழிக்கும் சக்தி படையினருக்கு உண்டு என்று நான் நினைக்கின்றேன். அதற்கு ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்கள் உதவியாக இருக்கின்றன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். கேள்வி கிழக்கை கைப்பற்றியதாக அரசு தெரிவிக்கின்றது. ஆனால் கிழக்கில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு அன்றாடம் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. உண்மையில் கிழக்கு கைப்பற்றப்பட்டிருந்தால் இவ்வாறான அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்படாதல்லவா?

பதில் தேர்தல் என்பது நாட்டின் எப்பகுதியில் இடம்பெற்றாலும் பிரச்சினைகள் எழுவதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுதான் தற்போது கிழக்கில் நடைபெறவுள்ள தேர்தலிலும் எழுந்துள்ளது. இதுவே நடந்துகொண்டும் இருக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு எமது அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். (நன்றி லங்காதீப வார ஏடு)

இந்தப் பரிட்சையில் ரம்புக்வெல ஏனோ தானோவென பதிலளித்ததால் இவருக்கு

0 % மதிப்பெண் வழங்குகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தீவிரவாத நடவடிக்கைகள் அனைத்தும் ஒன்றரை மாவட்டத்துக்குள் முடக்கப்பட்டுள்ளன அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறுகிறார்

[sunday February 10 2008 07:09:32 PM GMT] [யாழினி]

புலிகளின் தீவிரவாத நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது ஒன்றரை மாவட்டத்துக்குள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களின் நடவடிக்கைகள் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

அதனை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். புலித்தீவிரவாதிகள் தமது தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அவை அரசின் முக்கிய பிரமுகர்களை இலக்குவைப்பதா அல்லது பொதுமக்களை இலக்குவைப்பதா? என்ற பாகுபாட்டுக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. தீவிரவாதிகள் பலவீனமடையும்போது தம்மைத்

தாமே பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தில் இவ்வாறான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகின்றார்கள் என்றே கூறவேண்டும்.

ஏனெனில் ஸ்திரமான நிலையில் உள்ள ஒரு தீவிரவாத அமைப்பானது தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் கும்பலுக்கு எதிராக மட்டுமே தமது நடவடிக்கைகளையும் கட்டவிழ்த்து விடுவதுதான் வழக்கம் என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல சிங்கள வார இதழுக்கு வழங்கிய பேட்டியியொன்றில் தெரிவித்துள்ளார்.

அப்பேட்டியின் விபரம் வருமாறு

கேள்வி விடுதலைப் புலிகளால் தற்போது நாட்டின் பல பாகங்களிலும் பாரிய தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தால் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பொது மக்களுக்கு அவ்வாறானதொரு பாதுகாப்பு இல்லை. இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலும் ஒரு கட்டுப்பாடு உண்டு. ஆனால் தீவிரவாதிகள் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள அரச பிரமுகர்கள் என்றோ அல்லது பொதுமக்கள் என்றோ வேறுபாடு பார்ப்பதாகத் தெரியவில்லை. தீவிரவாதிகள் பலவீனமடையும் போது அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களால் பொது மக்கள் இலக்கு வைக்கப்படுவதற்கான காரணம் எமது படையினர் வடக்கில் அவர்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் படையெடுப்புக்களே ஆகும். இந்த நாடு கடந்த சில வருடகாலங்களாகவே தீவிரவாதத்துக்கு அடிபணிந்து செயற்பட்டது.

இதுவரை காலமும் இந்த நாட்டின் தலைவராக யார் இருக்க வேண்டும் என்று தீர்மானம் எடுப்பதில் பிரபாகரனே முன்னின்றார். ஆனால் தற்போது நாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஏற்ப செயற்படுபவராவார். இதனால்தான் இவரது கால கட்டத்தில் நாம் பெற்ற வெற்றிகள் பல என்றே கூற வேண்டும். விடுதலைப் புலிகளிடமிருந்து மீண்டு வெற்றிப் பாதையை நோக்கி பயணிக்கும் காலம் நெருங்கிவிட்டது. தற்போது புலிகளின் தீவிரவாத நடவடிக்கைகள் அனைத்தும் ஒன்றரை மாவட்டத்குள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களின் நடவடிக்கைகள் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அதனை நாம் ஏற்றுத் தான் ஆகவேண்டும்.

கேள்வி போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருக்கும் வரையில் விடுதலைப் புலிகளின் இலக்கு பொதுமக்களாக இருக்கவில்லை. ஆனால் அந்த நிலைமை தற்போது இல்லை. போர் நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டமையே இதற்குக் காரணம் என்று கருதுகிறோம். இது குறித்த உங்களது கருத்து என்ன? பதில் போர் நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டதனாலேயே பொது மக்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து அல்ல. போர் நிறுத்த உடன்படிக்கை என்பது புலிகள் பலவீனமடையும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பயன்படுத்தப்பட்ட ஒரு கருவி என்பதே எமது கருத்தாகும்.

கேள்வி விடுதலைப் புலிகளால் தெற்குப் பகுதிகளில் பாரிய தாக்குக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் போதிலும் அரசாங்கம் அவ்வியக்கத்துக்கு தடை விதிக்காமலிருப்பதற்கு என்ன காரணம்?

பதில் போர் நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்படுவதற்கான காரணம் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட அழுத்தங்களாகும் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை. போர் நிறுத்த உடன்படிக்கையோ அல்லது புலிகளுக்கு தடை விதிப்பது என்பதோ ஏனோ தானோவென்று எடுக்கப்படும் முடிவுகள் அல்ல. அவை சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு எடுக்கப்படவேண்டும். புலிகளுக்கான தடை விதிக்க வேண்டும் எனும் ஒரு சூழ்நிலை ஏற்படுமாயின் அவ்வாறானதொரு முடிவு நிச்சயம் எடுக்கப்படும்.

கேள்வி கடந்த பல வருடங்களாக தொடர்ந்து போர் நடத்தியும் புலிகளை தோற்கடிக்க முடியாமல் போயுள்ளது. உண்மையில் போரின் மூலம் புலிகளை தோற்கடிக்க முடியுமென நீங்கள் நினைக்கின்றீர்களா? பதில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு சார்பாக குரல் கொடுப்பவர்கள் பிரபாகரனை மா பெரும் வீரர் என்று புகழ்பவர்கள் கூட இந்த நாட்டுக்குள்ளேயே வசித்தும் வருகின்றனர். இது இந்த நாட்டுக்கு கிடைத்த சாபக்கேடு என்றே கூற வேண்டும்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை அடியோடு அழிக்கும் சக்தி படையினருக்கு உண்டு என்று நான் நினைக்கின்றேன். அதற்கு ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்கள் உதவியாக இருக்கின்றன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். கேள்வி கிழக்கை கைப்பற்றியதாக அரசு தெரிவிக்கின்றது. ஆனால் கிழக்கில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு அன்றாடம் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. உண்மையில் கிழக்கு கைப்பற்றப்பட்டிருந்தால் இவ்வாறான அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்படாதல்லவா?

பதில் தேர்தல் என்பது நாட்டின் எப்பகுதியில் இடம்பெற்றாலும் பிரச்சினைகள் எழுவதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுதான் தற்போது கிழக்கில் நடைபெறவுள்ள தேர்தலிலும் எழுந்துள்ளது. இதுவே நடந்துகொண்டும் இருக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு எமது அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

tamilwin.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.