Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெனிவாவிலும், நியூயோர்க்கிலும் அரசு எதிர்கொள்ளும் நெருக்கடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவிலும், நியூயோர்க்கிலும் அரசு எதிர்கொள்ளும் நெருக்கடி

கடந்த வாரம் நாட்டு மக்களுக்கு சுதந்திரதின உரையாற் றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது தலைமையிலான அரசுடன் மேற்குலக நாடுகள் சுமுகமான உறவைப் பேணு கின்றன என்றும், இலங்கை இனப்பிரச்சினை விவகாரத் தைக் கையாளும் விடயம் தொடர்பாக இலங்கை அரச நிர்வாகத்தின் மீது மேற்குலகுக்கு பெரிய அதிருப்தி ஏதும் இல்லை என்ற சாரப்படவும் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்தக் கருத்தின் உண்மைத் தன்மை ஆய்வுக்கும் பரிசீல னைக்கும் உரியது.

எது, எப்படியென்றாலும், இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை ஒட்டி, அரசு தனது படைகளையும் அவற்றின் கீழ் ஒட்டுக்குழுக்களாகச் செயற்படும் துணைப் படைகளையும் இயக்கும் விதம் குறித்த விடயம் சர்வதேச மட்டத்தில் பெரும் சிரத்தையையும், விசனத்தையும் ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது.

அண்மைக் காலமாகவே ஐ.நா. மனித உரிமைகள் கவுன் ஸிலின் கூட்டங்களில் இலங்கையின் நிலைமை குறிப்பாக அதில் அரசுத் தரப்பின் பங்களிப்பு குறித்த விடயம் அதிகள வில் அலசப்பட்டு வருவதையும் அவதானிக்கலாம்.

கடந்த வருடம் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் மூன்று கூட்டத் தொடர்களிலுமே இலங்கை விடயம் பெரிய விவகாரமாக ஆராயப்பட்டு அடுத்தடுத்த கூட்டங்களுக்கு அவ்விவகாரம் ஒத்திப் போடப்பட்டு வருவதும் கவனிக் கத்தக்கது.

"தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனமாதிரி' ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் இலங்கையில் மனித உரிமை மீறல் போக்குக் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வந்துள்ள போதிலும், அது தொடர்பாக தண்டனை நடவ டிக்கை ஏதும் எடுக்கப்படாமல் விவகாரத்தை அடுத்த கூட் டத் தொடருக்கு ஒத்திவைக்கும் முடிவே எட்டப்பட்டு வந்தது.

இப்போது நிலைமை முற்றும் கட்டத்தில், ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டம் அடுத்த மாதம் மூன்றாம் திகதி ஜெனிவாவில் நடைபெறவிருக்கின்றது.

அங்கு இலங்கைக்கு அரசுக்கு எதிராக இறுக்கமான தீர்மானம் ஏதும் எடுக்கப்படாமல் தடுப்பதற்காக தனது உயர்மட்டக் குழாம் ஒன்றைத் தயாராக அனுப்ப அரசு முடிவு எடுத்திருப்பதாகத் தெரிகின்றது.

இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, சட்டமா அதிபர் ஸி.ஆர். டி. சில்வா போன்றோரைக் கொண்ட உயர் குழு அங்கு செல்கின்றது.

ஏற்கனவே, இலங்கையில் இடம்பெறும் மோசமான மனித உரிமை மீறல்களுக்காக ஆள்கடத்தல்கள், கப்பம் கோரல் கள், சட்டவிரோதப் படுகொலைகள், சித்திரவதை நடவடிக் கைகள் போன்றவற்றுக்காக கவுன்ஸிலின் கூட்டத்தில் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து இலங்கைக்கு எதிரா கத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றவும், விடயத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபையிடம் பாரப்படுத்தச் செய்யவும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சில தரப்புகள் ஒற்றைக் காலில் நிற்கின்றன.

கடந்த வருடம் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் மூன்று கூட்டத் தொடர்களின்போதும் இத்தகைய முயற் சிக்காக அமர்வுக்கு வெளியேயான பிரசார நடவடிக்கை களில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் முழுமூச்சாக ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

எனினும், மனித உரிமை மீறல் விடயங்களுக்காக இலங்கை போன்று மோசமான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள கீழைத்தேச நாடுகள் பல இந்தக் கவுன்ஸிலில் கணிசமான உறுப்புரிமையைப் பெற்றிருப்பதால், அவற்றின் ஆதரவை இவ்விடயத்தில் தன்னுடன் ஒரே அணியில் உள்ளவை என்ற கருத்து நிலைப்பாட்டைப் பயன்படுத்தி பெற்றுக்கொண்டு, அதன் மூலம் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலில் தனக்கு எதிரான மேற்கு நாடுகளின் நடவடிக்கைக்கு இலங்கையால் முட்டுக்கட்டை போட முடிந்தது.

இத்தகைய தடுப்பு எத்தனங்கள் எத்தனை காலத்துக்குப் பலன்கொடுக்கும், இலங்கையைக் காப்பாற்றும் என்பது கேள்விக்குறியே.

இந்தப் பின்புலத்தில் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் செயலணிக் குழுவும் எதிர்வரும் 21 ஆம் திகதி அடுத்த வாரத்தில் நியூயோர்க் கில் கூடி இலங்கை விவகாரம் குறித்து ஆராய விருக்கின்றது.

கருணா குழு சிறுவர்களைப் படைக்குச் சேர்ப்பது தொடர் பான விடயமும், அதன் பின்னணியில் அரசு செயற்படுவது சம்பந்தமான அம்சமும் இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

இவ்விவகாரம் தொடர்பாக

ஆயுதப் பிணக்குகளில் சிக்கிய சிறுவர்கள் குறித்து ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியான அலன் றொக் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு சமர்ப்பித்த விரிவான அறிக் கையே மேற்படி கூட்டத்தில் பரிசீலிக்கப்படவிருக்கின்றத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.