Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் தெற்கு நோக்கி நகர்வு

Featured Replies

முன்னர் கிழக்கு மாகாணத்தில் புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து பிரதேசங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர விமான தாக்குதல் மற்றும் இராணுவத்தினரின் மல்ரிபரல் பீரங்கிகள் உட்பட கனரக ஆயுதங்கள் மூலமான தாக்குதல்களால் புலிகளின் பல்வேறு முகாம்கள் முற்றிலும் நாசமாக்கப்பட்டதுடன் பெருந்தொகையான புலிகள் இயக்கத்தினரும் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலிருந்து தப்பியோடிய புலிகளில் ஒரு பகுதியினர் வன்னிக்குச் சென்றனர். அதேவேளை, வன்னிக்குத் தப்பிச்செல்ல முடியாத புலிகள் இயக்கத்தினர் கிழக்கு மாகாணத்தை அண்டியுள்ள எல்லைப்பிரதேசங்களிலுள்ள காடுகளுக்குத் தப்பியோடினர். இவ்வாறே பின்னர் மன்னார்ப் பிரதேசங்களிலுள்ள புலிகள் இயக்க முகாம்கள் மீது படையினர் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக அப்பகுதிகளிலிருந்தும் புலிகள் இயக்கத்தினர் எல்லைப் பிரதேசத்திலுள்ள காடுகளுக்கு தப்பியோடியுள்ளனர்.

இவ்வாறு தப்பியோடிய புலிகள் மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்ட எல்லைப்பகுதிகளிலுள்ள காட்டுப்பிரதேசங்களில் சிறு குழுக்களாகப் பரந்து எல்லைப் பிரதேசத்திலுள்ள கிராமங்களிலும் பிரதான வீதிகளிலும் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தெற்கே திசமகாராம, யால மற்றும் ஏனைய பிரதேசங்கள் வரை நகர்ந்து மறைந்திருந்து சிங்களக் கிராமங்கள் மீதும், மற்றும் பொதுமக்களும் இராணுவத்தினரும் பயணம் செய்யும் வாகனங்கள் மீதும் கடந்தகாலங்களில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விமானப் படையினரும் இராணுவத்தினரும் மேற்கொண்டுவரும் வான் மற்றும் தரைவழித் தாக்குதல்கள் காரணமாக கிழக்கு மாகாணம் மற்றும் மன்னார் மாவட்ட எல்லைப் பிரதேசங்களிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லமுடியாத நிலையில் புலிகள் இயக்கத்தினர் தற்போது மேற்படி எல்லைப் பகுதிகளிலிருந்து தெற்கு நோக்கி நகர்ந்துவருகின்றனர். இதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணம் மற்றும் மன்னாருக்குத் தெற்கே எல்லைகளுக்கு அப்பால் அரச படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள முக்கிய நகரங்களிலும் புலிகள் இயக்கத்தினர் இரகசியமாகச் செயற்படுகின்றனர். இவ்வாறான நகரங்களில் புத்தளம் நகரில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பது இரகசியமான விடயமல்ல. இந்தவகையில் மன்னார் மாவட்டத்திலிருந்து தெற்கே நகர்ந்துகொண்டிருக்கும் புலிகள் தமது பயங்கரவாதச் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தும் நகரங்களில் புத்தளமே முக்கிய நகரமாக இருப்பதாக பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதற்குச் சாட்சிகளாக புத்தளம் பகுதியில் புலிகளின் செயற்பாடுகள் சம்பந்தமாக நிகழ்ந்த அண்மைக்காலச் சம்பவங்களில் கடந்த டிசம்பரில் புத்தளம் கொட்டவெஹெர பிரதேசத்தில் வீதித் தடைப்பகுதியில் சோதனைச் சாவடியில் வைத்துப் பெருந்தொகையான அதிசக்தி வாய்ந்த குண்டுப்பொருட்கள் கண்டுபிடித்துக் கைப்பற்றப்பட்டதும், புத்தளம் நகரை அண்டிய ஏரிப்பகுதியில் நீரின் கீழ் மறைத்துவைக்கப்பட்டிருந்த தற்கொலைக் குண்டுதாரிகளின் உடைகள் கைப்பற்றப்பட்டதும், கல்பிட்டி பிரதேசத்தில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர்க் குண்டுகள் கைப்பற்றப்பட்டதும் முக்கியமானவையாகும்.

இவற்றில் தற்கொலைக் தாக்குதலுக்கான உடைகள் அப்பகுதியிலுள்ள உப்பளத்தில் வேலை செய்வோர் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்கள் வேலை முடிந்து வீடு திரும்புமுன் ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற வேளையில் நீருக்கு அடியில் மேற்படி தற்கொலைக் குண்டு உடைகள் அடங்கிய பொதியைக் கண்டுபொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து அந்தப் பொதி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. அடுத்து, மேற்படி வெடி குண்டுப் பொருட்கள் கொட்டவெஹெர வீதித் தடை முகாமில் வைத்து லொறி ஒன்றைச் சோதனையிட்டபோது வெடிப்பொருட்கள் இரகசியமான முறையில் லொறியில் மறைத்துவைக்கப்பட்டிருந்தது. பொலிஸ் உத்தியோகத்தரால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட கிளைமோர்க் குண்டுகள் பொதுமக்கள் தரப்பிலிருந்து கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து கல்பிட்டி பிரதேசத்திலுள்ள குறிப்பிட்ட பகுதியில் படையினரால் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டன.இ

தெற்கில் இவ்வளவு விடயம் நடக்கும்போது 10 முனைகளில் வடக்கில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டதற்கு என்ன அர்த்தம்.

தெற்கில் ஊடுருவி தாக்கும் புலிகளை தடுக்கும் திராணியற்ற இலங்கை அரசு தமக்கு தாமே சொல்லி கொள்ளும் சமாதானம் கிழக்கில் தாக்குதலால் தெற்குக்கு புலிகள் தப்பி வருகின்றனர் என

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.