Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கான உதவியை நிறுத்திவிட்டதாக எந்தவொரு நாடும் இதுவரை அறிவிக்கவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான உதவியை நிறுத்திவிட்டதாக எந்தவொரு நாடும் இதுவரை அறிவிக்கவில்லை

[15 - February - 2008]

* போலிப் பிரசாரம் இடம்பெறுவதாக அரசு விசனம்

-ரொஷான் நாகலிங்கம்-

சர்வதேச நிதியுதவி நிறுத்தப்பட்டுவிட்டதாக போலிப் பிரசாரம் இடம்பெறுவதாகவும் எந்தவொரு நாடும் உதவியை நிறுத்திவிட்டதாகவோ அல்லது குறைத்துவிட்டதாகவோ இலங்கைக்கு நேரடியாக இதுவரை அறிவிக்கவில்லையெனவும் அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இதனைத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது;

ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு அளிக்கும் நிதியுதவி குறைக்கப்பட்டதாக ஜப்பானின் சமாதானத் தூதுவர் யசூசி அகாஷியால் தெரிவிக்கப்பட்டதாக சில ஊடகங்கள் தமது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றன.

அதேவேளை, வெளிநாட்டு அரசாங்கங்கள் இலங்கைக்கு அளிக்கும் நிதியுதவியை நிறுத்தியதாக சிலர் தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இதுவரை எந்தவொரு நாடும் எமது அரசுக்கு நிறுத்தப்பட்டதாகவோ குறைக்கப்பட்டதாகவோ நேரடியாகக் கூறவில்லை.

குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறான எந்தவொரு குறைப்பை மேற்கொண்டதாக எமக்குத் தெரிவிக்கவில்லை. எமது அரசாங்கம் முன்னெடுக்கும் தீர்வுத்திட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில் இந்தியா எமக்கு உதவியளித்து வருகின்றது.

எமக்குக் கிடைக்கப்பெறும் நிதியுதவிக்கு அப்பால் வெளிநாட்டு உறவுகளை அரசு வலுப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையில் சுற்றுலா நடவடிக்கைகளை பாலஸ்தீனம் முதல் தடவையாக முன்னெடுப்பதற்கு நாட்டம் கொண்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக தற்போது ஒரு குழுவினர் இங்கு வருகை தந்துள்ளனர்.

கிழக்கில் சுதந்திரமான தேர்தல்

கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி தேர்தல் ஜனநாயக ரீதியிலும் சுதந்திரமாகவும் இடம்பெறக்கூடிய சூழல் நிலவுகின்றது. தெற்கில் தேர்தல் வன்முறையுடன் ஒப்பிடும்போது அங்கு மிகவும் குறைவாகவுள்ளது. ஓரிரு சம்பவங்கள் அதுவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையே இடம்பெற்றுள்ளது.

இதனால் மக்கள் ஜனநாயகமாகவும் சுதந்திரமாகவும் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான சூழல் அங்கு நிலவுகின்ற நிலையில் தேவையற்ற விதத்தில் அங்கு தேர்தலுக்கான சூழ்நிலை இல்லையெனக் கூறுகின்றனர்.

கிரியெல்லவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ஷ்ரீபதியின் அகால மரணத்தையிட்டு எமது கட்சியும் ஜனாதிபதியும் கவலையடைந்துள்ளதுடன், அவரது குடும்ப உறவினர்களுக்கு அரசாங்கம் தனது மனவருத்தத்தை தெரிவிக்கின்றது.

இந்த மரணம் குறித்து சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஷ்ரீபதி பயணம் செய்த கார் மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் பாதையை விட்டு விலகி 10 அடி பள்ளத்தில் வீழ்ந்து மரத்துடன் மோதியுள்ளது. இதில் பயணம் செய்த மூவரும் பலியானதுடன், மற்றொருவர் ஒரு நிமிடம் வாக்குமூலம் அளித்து மரணமடைந்தார்.

இது குறித்து பொலிஸார் விபத்து இடம்பெற்ற இடத்துக்கருகிலுள்ளவர்களிடம

இதை வாசிச்சா விசர்தான் வரும்... உந்த அரசாங்கத்தை தவிர மிச்ச எல்லாருமே சேர்ந்துதான் உந்த சீரழிவுக்கு காரணம் போலகிடக்கு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.