Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆயுதக் குழுவை ஆளுங்கட்சியாக காட்டி மட்டக்களப்பு மாநகர சபையின் அதிகாரத்தை கைப்பற்ற அரசு முயற்சி'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதக் குழுவை ஆளுங்கட்சியாக காட்டி மட்டக்களப்பு மாநகர சபையின் அதிகாரத்தை கைப்பற்ற அரசு முயற்சி'

[27 - February - 2008]

மட்டக்களப்பு மாநகர சபையை கைப்பற்றிவிட்டதாக உலகுக்கு காட்ட வேண்டிய தேவையொன்று இருப்பதாலேயே ஆயுதக் குழுவை ஆளும் கட்சியாகச் காட்டி மட்டக்களப்பு மாநகர சபையை வென்றெடுக்க அரசாங்கம் போலி நாடகமொன்றை அரங்கேற்றி வருவதாக ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மஞ்சந்தொடுவாய் மஸ்யிதுல் ஹிலூரி பள்ளி வாசலுக்கருகில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

"மட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தல் முழு நாடுமே பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு உள்ளூராட்சி சபையாகும். ஏனெனில், இச்சபையின் ஆட்சியை இந்நாட்டின் ஆளும் கட்சி கைப்பற்றலாம் என்ற அதீத ஆசையோடு களம் இறங்கியிருப்பதே இதற்குக் காரணமாகும். ஆனால், ஆளும் கட்சியின் வெற்றிலைச் சின்னத்தில் ஆளுங்கட்சியில் யாரும் போட்டியிடவில்லை. வேறு ஒரு ஆயுதக் குழுவை சேர்ந்தவர்களே இருக்கிறார்கள். ஆனால், இவர்களை ஆளும் கட்சி என்று சர்வதேச சமூகத்துக்கு காட்டி மட்டக்களப்பு மாநகர சபையை வென்று விட்டதாகவும் காட்ட வேண்டிய தேவை அரசுக்கு இருக்கிறது. இப்படியான போலி நாடகமொன்றை அரங்கேற்றுவதே இதன் உள்நோக்கம்.

தன்னுடைய வேட்பாளர்களை வெற்றிலையில் போட்டியிட வைத்திருக்கின்ற ஆயுதக் குழுவின் தலைமைக்கு மாகாணத்தின் அதிகாரத்தைக் கொடுப்பது என்ற இரகசிய உடன்படிக்கையும் இருப்பதாகப் பேசப்படுகிறது. ஆனால், இருதரப்பும் இதனை மறுத்து வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் போட்டியிட முடியாத அளவுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் ஆயுத மயப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால், நாம் பயப்படாமல் களம் இறங்கியிருக்கிறோம். எமக்கு ஆசனங்கள் வேண்டும் என்பதை விடவும் அந்த ஆசனங்களை அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து பெறுவது எமது கௌரவத்துக்கு அழகல்ல.

ஆரயம்பற்றுப் பிரதேசம் மஞ்சந்தொடுவாய், பூநொச்சிமுனைப் பிரதேசங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையோரக் கிராமங்கள். இங்குள்ள முஸ்லிம்களின் பாதுகாப்பு என்பது பெரிய கிராமங்களில் உள்ள பிரச்சினைகளை விடவும் ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு பிரதானமானது. இம்மாவட்டத்தில் உள்ள 2600 சதுர கி.மீற்றர் பரப்பில் முஸ்லிம்களின் வாழ்விடப் பரப்பளவு சுமார் 30 கி.மீற்றர் மட்டுமே. இரண்டு வீத நிலப்பரப்புக்கு தான் 25 வீதமான முஸ்லிம்கள் சொந்தம் கொண்டாடுகின்றனர். அந்தளவுக்கு முஸ்லிம்களுடைய வாழ்விடங்கள் குறுக்கப்பட்டிருக்கிறது.

இன்று நாட்டிலுள்ள ஒவ்வொரு வெளிநாட்டுத் தூதரகமும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் எங்கெங்கு நடக்கின்றன என்று அவதானித்து வருகின்றன. குறிப்பாக கிழக்கு விடுவிக்கப்பட்ட பிறகு இயல்பு வாழ்க்கை மீண்டும் எவ்வாறு ஏற்படுத்தப்படுகிறது என்று அவதானிக்கின்றன. நோர்வேயின் யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டார்கள் என்பதற்காக சர்வதேச சமூகம் இப்பிரச்சினையை முழுமையாகக் கைவிட்டதாக இல்லை.

முஸ்லிம்கள் இழந்த அத்தனை காணிகளையும் உடைமைகளையும் நாம் ஆவணப்படுத்தியிருக்கிறோம். இவை வடக்கு முஸ்லிம்கள் இழந்தவை, கிழக்கு முஸ்லிம்கள் இழந்தவை என வெவ்வேறு தொகுதிகளாக உள்ளன. ஒரு நிரந்தரத் தீர்வு வரும் போது இவற்றை மீளப் பெற்றுக் கொள்ளவும் மீளக் குடியேறுவதற்கு உள்ள உரிமைகளை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் முன்னேற்பாடுகளை செய்து இருக்கிறோம்.

கிழக்கு விடுவிக்கப்பட்டு விட்டதாக அரசு கூறுகிறது. செங்கலடியில் இருந்து பதுளை வீதிவரை முழுக்க விடுவித்து விட்டதாகக் கூறினாலும், யாரும் ஒழுங்காக போக்குவரத்து செய்ய முடியாதிருக்கிறது. யாரும் இழந்த தமது வயற் காணிகளுக்குப் போய் விவசாயம் செய்ய முடியாதிருக்கிறது. இந்த நிலையில் அவசர அவசரமாக இருக்கின்ற ஒரு சில பிரதேசங்களையும் இணைத்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்கள பெரும்பான்மையை கூட்டும் முயற்சிகள் தான் கூட நடக்கின்றன. மங்களகமவில் உள்ள சிங்கள மக்களை அம்பாறையுடன் இணைத்து விடுவதில் தான் அரசுக்கு கூடுதல் கவனம் இருக்கிறது.

ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை, முஸ்லிம்களின் உரிமைக்காகத் தைரியமாகப் பேசினால் இதை ஜீரணித்துக் கொள்ள முடியாத ஒரு அரசுடன் தான் 11 மாதகாலம் நாம் மல்லுக் கட்டினோம். இருக்கின்ற பாதுகாப்புக் கெடுபிடிகளையெல்லாம் கூட்டுவதன் மூலம் ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை அடக்கிவிடலாம் என்பது தான் இந்த அரசின் கனவாக இருக்கிறது.

நாங்கள் இந்த சலசலப்புக்கு அஞ்சி ஓடுகிறவர்கள் அல்லர் என்பதை நாம் இந்த உள்ளூராட்சித் தேர்தலில் நிரூபிக்கப் போகிறோம். பள்ளி வாசல் சம்மேளனத்தை அழைத்து வந்து வேட்பாளர் பிச்சை கேட்டு இன்று அமைச்சராக இருப்பவர் முஸ்லிம் காங்கிரஸின் அடையாளத்தை முழுமையாக அழித்து விடலாம் என்று ஓடித் திரிகிறார். ஆனால், இந்தத் தேர்தலோடு அவருடைய அந்தஸ்த்து என்ன என்பதை இந்த அரசாங்கம் புரிந்து கொள்ளும்.

இந்த மாவட்டத்தின் இதயமாகக் கணிக்கப்படுவது மட்டக்களப்பு மாநகர சபையாகும். இதன் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழும் தமிழ் மக்களின் சுய கௌரவத்துடன் சம்பந்தப்பட்ட தேர்தலாகவே இந்தத் தேர்தல் அமைந்திருக்கிறது. இங்கு முஸ்லிம்கள் சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே. இவர்கள் இங்குள்ள ஆட்சியை தீர்மானிக்க முடியாது. ஆனால், நாம் தேர்தலில் குதித்திருப்பது எமது வேட்பாளர்களை தெரிவு செய்யும் உரிமையை அடகு வைக்க முடியாது என்பதற்காகவே. நீண்ட பாரம்பரியம் கொண்ட சகோதர தமிழ் மக்களுக்கு சுயமான விருப்பத்தோடு வேட்பாளர்களை தெரிவு செய்யக் கூடிய வாய்ப்பு இந்தத் தேர்தலில் இருக்கிறதா என்று கேட்டால் நேரடியாக யாரும் பதில் சொல்ல முடியாத நிலை காணப்படுகிறது. எதிர்க்கிறவர்கள் சொல்லப் பயப்படுகிறார்கள். இந்த அரசு இயல்பு வாழ்க்கை இங்கு வந்து விட்டதாகக் கூறுகிறது. மட்டக்களப்பு மாநகர சபையில் ஆட்சி அமைந்துவிட்டால் அந்த ஆட்சியின் அதிகாரத்தில் அமர்பவர்கள் அச்சுறுத்தப்பட்ட சூழலில், அவர்களே உயிருக்கு அஞ்சி அங்குமிங்கும் அலைந்து திரியும் நிலையில் ஒரு நீதி நேர்மையான நிர்வாகத்தை கொண்டு நடத்துவது இலகுவான காரியமல்ல.

இத்தேர்தலில் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச்சின்னத்திலேயே போட்டியிடுகிறது. ஆனால் பெரியளவு ஆசனங்களை எதிர்பார்த்து போட்டியிடவில்லை. ஆட்சியில் அமர முடியும் என்ற எதிர்பார்ப்பும் சாத்தியமும் இல்லாத நிலையில் நாம் போட்டியிடுவதன் நோக்கம் எமக்குரிய ஆசனங்களை யாரும் அபகரித்துவிடக் கூடாது என்பதற்காகவே.

அடுத்த கட்டமாக நடக்கவிருக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கு இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் எப்படி வாக்களிக்கப்போகிறார்கள், எத்தனை வீதமான தமிழ் மக்கள் சுயமாக வாக்களிக்கப் போகிறார்கள் என்பதையெல்லாம் சர்வதேச சமூகம் ஏனைய கட்சிகளும் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், பலவித முயற்சிகளையும் சூழ்ச்சிகளையும் அரங்கேற்றுவதற்கு இந்த அரசாங்கம் பல எத்தனங்களைச் செய்யலாம். எனவே ஆர்வத்தோடு வாக்குச் சாவடிகளுக்கு போவதும் அங்கு தேர்தல் மோசடிகள் ஏற்படாமல் உஷாராக இருப்பதும், மொத்தமாக மரச்சின்னத்திற்கு வாக்கு அளிப்பதும் முஸ்லிம்களுக்கு முக்கியமானது.

http://www.thinakkural.com/news/2008/2/27/...s_page46580.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.