Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினரின் கெடுபிடியால் மட்டு.மக்கள் பல்வேறுபட்ட துன்பங்கள் அனுபவிக்கின்றார்கள். மட்டு எம்.பி ஜெயானந்தமூர்த்தி

Featured Replies

மட்டு மாவட்டத்தில் படையினரால் மேற்கொள்ளபட்டுள்ள பாதுகபாப்பு கெடுபடி காரணமாக நாளாந்தம் பொதுமக்கள் பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்து வருவதாக த.தே.கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நா.உ எஸ். ஜெயானந்தமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது : கிழக்கை முற்றாக மீட்டு பொதுமக்களுக்கு நிம்மதியான வாழ் நிலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அரசு பிரசாரம் செய்து வருகின்றது. ஆனால நிலைமை அவ்வறில்லை. கிழக்கின் இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் மட்டு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

மட்டு நகரிலும் ஏனைய பகுதிகளிலும் பாதுகாப்பு என்ற பெயரில் பலத்த கெடுபிடிகளை இராணுவத்தினர் பொதுமக்கள் மீது பிரயோகித்து வருகின்றனர். இதனால் மக்கள் மாத்திரமின்றி அரச ஊழியர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் கண்டனத்திற்கு உரியதாகும். மாவட்டத்தின் நகரிலும் பிரதான வீதிகள், உள் வீதிகள் என முழத்திற்கொரு சோதனைச் சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டு சோதனை கெடுபிடிகள் அதிகரிகப்பட்டுளளன. இதனால் பொதுமக்களின் பிரயாணத்தில் பல தடங்கல்கள் ஏற்படுவதுடன் அரச ஊழியர்கள் உரிய நேரத்திற்கு அலுவலகங்களுக்குச் செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது. நோயாளர்கள், கர்ப்பிணிப் பெண்கள் எனப் பலரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட கிழக்கை முற்றாக விடுவித்து விடுதலைப் புலிகளை அகற்றி விட்டதாக படையினரும் அரசும் பிரசாரம் செய்து வரும் நிலையில் மக்களை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளபட்டும் இவாவறான கெடுபிடி எதற்கு. அரசின் பொய்பிரச்சராமே இதுவாகும். இராணுவ நடவடிக்கையின் போது இடம் பெயர்ந்த மக்களில் ஒரு தொகுதியினரை தமது சொந்த இடத்திற்கு செல்வதற்கு இராணுவம் தொடர்ந்து மறுத்து வருகின்றது. இந்த மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் உணவு உட்பட பல அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனா.

இந்த நிலையில் அரசு உள்ளுராட்சி தேர்தலை நடத்தவுள்ளது. இத்தேர்தலில் மக்களுக்கு எவ்வித அக்றையுமில்லை. ஒருஜனநாயக சூழல் அற்ற நிலையில் நடைபெறும் இத்தேர்தலை மக்கள் விருமபவில்லை. அதற்கான சந்தாப்பமும் இதுவல்ல. எனவே இத்தேர்தல் மூலம் மக்கள் அரசுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்.

நன்றி வீரகேசரி

  • தொடங்கியவர்

'புலிகளை விரட்டி கிழக்கை மீட்டு விட்டோம் என்று படையினரும் அரசும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், பாதுகாப்புக் கெடுபிடிகள் இறுக்கமாக மேற்கொள்படுவது எதற்கு? அப்படியானால் அரசு பொய் பிரச்சாரமே செய்கிறது".

என்று ஜெயானந்த மூர்த்தி எம்.பி தனது அறிக்கையல் தெரிவித்தார்.

மேலும் :

மட்டு. மாவட்டத்தில் அரச படைகளினால் மேற்கொள்பட்டுவரும் பாதுகாப்பு கெடுபிடி காரணமாக நாளாந்தம் பொதுமக்கள் பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

அரசு கிழக்கை முற்றா மீட்டு பொதுக்களுக்கு நிம்மதியான வாழ் நிலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்று பிரசாரம் செய்து வருகின்றது. ஆனால் நிலைமை அவ்வாறில்லை.

கிழக்கை இராணுவம் ஆக்கிரமித்த பின்னர் மட்டு மாவட்டத்தில் வாழும் மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்னறனர்.

மட்டு மாவட்டத்திலும் ஏனைய பகுதிகளிலும் பாதுகாப்பு என்ற பெயரில் பிரதான வீதி;கள், உள்வீதிகள் அனைத்திலும் சோதனைச் சாவடிகள புதிதாக அமைக்கபட்டு சோதனைக் கெடுபிடிகள் அதிகரிக்கபட்டுள்ளன.

இதனால் பொதுமக்களுக்கு பயணங்களின்போது பல கஷ்டங்கள் ஏற்படுவதுடன், அரச ஊழியர்கள் உரிய நேரத்திற்கு அலுவலகங்களுக்குச் செல்ல முடியாத நிலையும் தோன்றியுள்ளது.

மேலும், நோயாளர்கள், கர்ப்பிணிப் பெண்கள் எனப் பலரும் இந்த கெடுபிடிக்குள் அகப்பட்டு பெரிதும் பாதிக்கப்படுகின்றாhகள். இவ்வாறு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டு மாவட்டம் உட்பட கிழக்கை முற்றாக விடுவித்து விடுதலைப் புலிகளை விரட்டி விட்டதாக படையினரும் அரசும் பிரசாரம் செய்து வரும்நிலையில், இவ்வாறான இராணுவ கெடுபிடிகள் எதற்கு?

எனவே, புலிளை விரட்டி விட்டோம் என்பது அரசின் பொய் பிரசாரமே.

இராணுவ நடவடிக்கைகளின் போது இடம் பெயர்ந்த மக்களில் ஒரு பகுதியினர், அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்வதை அனுமதிக்க இராணுவம் மறுத்து வருகின்றது.

இந்த நிலையில், அந்த மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்து உணவு உட்பட பல அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்;ந்து வருகின்றாhகள்.

மாவட்டத்தில் நிலவும் அத்தகைய ஒரு நிலையிலேயே, அரசு உள்ளுராட்சி தோ்தலை நடத்தவுள்ளது.

இத் தேர்தலில் மக்களுக்கு எந்தவித அக்றையுமில்லை. ஒரு ஜனநாயகச் சூழல் அற்ற நிலையில் நடைபெறும் இத் தேர்தலை மக்கள் விரும்பவில்லை. அதற்கான சந்தர்பமும்; இதுவல்ல..

எனவே, இத் தேர்தலின் மூலம் மக்கள் அரசுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள். என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளர்ர்.

நன்றி : சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.