Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசமைப்பு விவகார ஆலோசகர் பதவியிலிருந்து ஜயம்பதி விக்கிரமரட்ண ராஜினாமா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசமைப்பு விவகார ஆலோசகர் பதவியிலிருந்து ஜயம்பதி விக்கிரமரட்ண ராஜினாமா.

03.03.2008 / நிருபர் சங்கிலியன்

அரசின் போக்குப் பிடிக்காததால்

தமிழ் மக்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் விடயத்தில் அரசு உண்மையான அக்கறை கொண்டிருக்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள சிறிலங்கா அரசின் அரசமைப்பு விவகார ஆலோசகர் ஜயம்பதி விக்கிரமரட்ண அப்பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார்.

அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றிய ஜயம்பதி விக்கிரமரட்ண அரசமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்வதில்லை என அரசு தீர்மானித்த பின்னர், தான் தொடர்ந்தும் அரசமைப்பு ஆலோசகர் பதவியில் இருப்பதில் பயனில்லை எனக் கருதுகிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜயம்பதி விக்கிரமரட்ண தாம் அங்கத்துவம் வகிக்கும் லங்கா சம சமாஜக் கட்சி பரவலான அதிகாரப் பகிர்வையே விரும்புவதாகவும் இலங்கைத் தமிழர்களுக்கு உள்ளக சுயாட்சி வழங்கப்பட வேண்டுமெனக் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

""இனப்பிரச்சினைக்கான தீர்வாக லங்கா சமசமாஜக் கட்சி அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தைக் கருதவில்லை, ஆகக் குறைந்தளவில் மிதவாதத் தமிழர்களையாவது திருப்திப்படுத்தும் தீர்வையே நாங்கள் விரும்புகின்றோம். 13ஆவது திருத்தம் அவர்களைக் கூட திருப்திப்படுத்தாது'' என்றும் ஜயம்பதி விக்கிரமரட்ண குறிப்பிட்டுள்ளார்.

கருத்தொருமைப்பாட்டுடனான புதிய அதிகாரப் பகிர்வு யோசனையை உருவாக்குவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்திய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் முயற்சிகள் வெற்றி பெறுமென்றே ஒருவருட காலமாகத் தாம் கருதினார் என ஜயம்பதி தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு சிறப்பாகவே செயற்பட்டு வந்தது என மேலும் தெரிவித்துள்ள அவர், அது தனது ஆரம்பக்கட்ட அறிக்கையை உருவாக்கிக் கொண்டிருந்த வேளையே பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஜனாதிபதியின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென பரிந்துரை செய்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

""நாங்கள் ஆரம்பக்கட்ட அறிக்கையை வெளியிடவிரும்பினோம், விதாரணவும் அவ்வாறே எண்ணினார். எனினும் அது நடைபெறவில்லை.'' என ஜயம்பதி விக்கிரமரட்ண சீற்றமும் கவலையும் வெளியிட்டுள்ளார்.

அரசு 13ஆவது திருத்தத்தை மாத்திரம் அமுல்படுத்த வேண்டுமென விரும்பினால் அதற்கு அனைத்துக் கட்சிப் பிரதி நிதிகள் குழு அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தம் ஏற்கனவே நாட்டில் ஒரு சட்டமாக விளங்குகின்றது. அதனை அமுல்படுத்த அரசியல் உறுதிப்பாடே அவசியமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசிடம் இதற்கான அரசியல் உறுதிப்பாடு இருக்குமென்று எதிர்பார்ப்பதாக நம்பிக்கையின்மையுடன் கருத்து வெளியிட்டார் அவர்.

தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை வழங்குவதை எதிர்க்கும் சில சக்திகளுக்கு அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் காணப்பட்ட செல்வாக்கும் தமது பணிகளுக்குத் தடையாகக் காணப்பட்டன என ஜயம்பதி குறிப்பிட்டுள்ளார்.

சங்கதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தத்தை அம்பலமாக்கியிருக்கும் ஜயம்பதி விக்கிரமரட்ணவின் ராஜிநாமா

[03 - March - 2008]

இன நெருக்கடிக்கு அரசியல்தீர்வு காணும் நடவடிக்கைகளில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஒருபோதும் இதயசுத்தியுடனான முயற்சிகளில் ஈடுபடப் போவதில்லை என்ற பெரும்பாலான தமிழ் மக்களின் அபிப்பிராயத்திற்கு வலுசேர்க்கும் விதத்திலேயே தற்போதைய அரசாங்கத்தின் காய் நகர்த்தல்களும் நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றனவோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் அமர்வுகளும் அறிவிப்புகளும் தொலைக்காட்சி நாடகத்தொடர் போன்று நீடித்துக் கொண்டு செல்கின்ற நிலையில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பிந்திய அறிவிப்பாக, இன்னும் மூன்று மாதங்களில் பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கை வெளிவந்து விடும் என்ற நம்பிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

இறுதி அறிக்கையை தயாரிக்கும் பணிகளில் 90 சதவீதமானவை பூர்த்தியடைந்து விட்டதாகவும் எஞ்சியிருப்பவை தொடர்பாக ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பதற்காக வாராந்தம் குழுவின் சந்திப்புகள் இடம்பெற்று வருவதாகவும் பேராசிரியர் தெரிவித்திருப்பதுடன், ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையிலான சமீபத்தைய சந்திப்பானது எதிர்காலம் குறித்து சிறந்த எதிர்பார்ப்புகளை தோற்றுவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், புதிய அதிகாரப் பகிர்வு முறைமையை ஏற்படுத்துவது தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கையின் அரசியலமைப்பு விவகார ஆலோசகரான ஜயம்பதி விக்கிரமரட்ணவின் இராஜிநாமாவும் அவர் தனது பதவி விலகலுக்கு தெரிவித்திருக்கும் காரணமும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இதுகால வரையிலான முயற்சிகளின் பெறுபேறுகள் குறித்து பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்திருப்பதுடன், எதிர்பார்ப்புகளையும் மழுங்கடிப்பதாகக் காணப்படுகின்றது.

இலங்கையில் சிறுபான்மைச் சமூகத்தவராக இருக்கும் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாகத் தோன்றவில்லை என்றும் ஆதலால் அரசாங்கத்தின் ஆலோசகராகத் தான் இருக்க வேண்டிய தேவை இல்லையென்றும் ஜயம்பதி விக்கிரமரட்ண கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் போவதில்லையென அரசாங்கம் முடிவுசெய்த பின் தான் அங்கிருந்து கொண்டு பிரயோசனமான விதத்தில் எதனையும் செய்ய முடியாது என்று கருதியதையடுத்தே இராஜிநாமா செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கும அவர், தான் சார்ந்த லங்கா சமசமாஜக் கட்சியானது அதிகளவிலான அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவான நிலைப்பாடுடையதென்றும் தமிழர்களின் உள்ளக சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொண்ட கட்சியென்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தற்போது சட்டமாக இருக்கும் 13 ஆவது திருத்தமானது இனநெருக்கடிக்கு தீர்வாக அமையுமென லங்கா சமசமாஜக் கட்சி கருதவில்லை என்றும் குறைந்தது மிதவாதப் போக்குடைய தமிழர்களாவது ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுக்கே தாங்கள் ஆதரவெனவும் 13 ஆவது திருத்தத்தை மிதவாதப் போக்குடைய தமிழர்கள் கூட ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தமிழ் மக்களின் உணர்வுகளை மிகத் தெளிவான முறையில் நாடிபிடித்துப் பார்த்திருக்கும் தன்மையை இந்த அரசியலமைப்பு நிபுணர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

13 ஆவது திருத்தத்தையே முழுமையாக அமுல்படுத்தப் போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கம், அதற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு அரசியல் கட்சிகள் , சிவில் சமூக அமைப்புகளிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இந்த 13 ஆவது திருத்தத்தை மாத்திரம் அமுல்படுத்துவதென்றால் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தேவை இல்லையே என்பது அவர் முன்வைத்திருக்கும் வாதமாகும்.

13 ஆவது திருத்தம் ஏற்கனவே நாட்டின் சட்டத்தின் ஓரங்கமாக உள்ளது. அதனை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அரசியல் ரீதியான விருப்பம் இருந்தால் மாத்திரம் போதும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தீர்மானத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. ஆதரவளிக்க முன்வந்துள்ள போதும் அது நடைமுறைக்கு வருவது குறித்து நிச்சயமற்ற நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது. ஏனெனில், இந்தவிடயம் தொடர்பாக மேலும் கலந்துரையாடுவதற்காக அமைச்சரவை உபகுழுவிடம் இந்த விவகாரம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை உப குழுவிலுள்ள அமைச்சர்கள் அதிகாரப் பகிர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்பது தமிழ்க் கட்சிகளின் தலைவர்களின் அச்சமாகக் காணப்படுகிறது. இந்த நடவடிக்கை தொடர்பாக ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு அதிககாலம் எடுக்குமெனவும் அவ்வாறு ஒரு முடிவுக்கு வந்தாலும் அது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதத்தில் அமைந்திருக்குமா என்பதிலும் தமிழ்க் கட்சித் தலைவர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு அப்பால் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு தொடர்ந்து புதியதொரு கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையிலான அரசியலமைப்பை தயாரிப்பதற்கான பணியில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி அனுமதியளித்திருக்கின்றார்.

எது எவ்வாறாயினும் யுத்த நடவடிக்கைகளில் காட்டப்படும் முனைப்புகளால் அரசியல் தீர்வு முயற்சிகள் முன்னிலைப்படுத்தப்படாது அமுங்கிப்போய்விடும் தன்மையையே கள நிலைவரங்கள் சுட்டி நிற்கின்றன.

வட, கிழக்கை பாரம்பரிய தாயகமாகக் கொண்ட தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுத் திட்டத்தை முன்வைக்கக் கூடிய விதத்தில் தென்னிலங்கை அரசியல் கட்சிகளும் தலைவர்களும் தமது இதய சுத்தியுடனான விருப்பத்தை வெளிப்படுத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தால் மட்டுமே எதிர்காலம் நம்பிக்கை தருவதாக அமையும். ஆனால், இதற்கான விடை சிந்தனைக்கு எட்டாத வெகு தொலை தூரத்திலேயே என்பது நிச்சயம்.

http://www.thinakkural.com/news/2008/3/3/e...l_page46844.htm

தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் நேர்மையான எண்ணம் இந்த அரசாங்கத்திற்கு இல்லை எனக் கூறி, கலாநிதி ஜயம்பதி விக்ரமத்ன அரசியல் சாசன மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் ஆலோசகர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இலங்கைக்கு புதிய அதிகாரப் பகிர்வு முறைமையொன்றை அவர் தயாரித்துக் கொண்டிருந்ததாகத் தெரியவருகிறது.

கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன இலங்கை சமசமாஜ கட்சியின் மூத்த உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரப்பகிர்வு மற்றும் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைகளுக்கு தமது கட்சியான லங்கா சமசமாஜ கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

"13ஆவது திருத்தம் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது, நடுநிலைமையான தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வு செயன்முறைக்கு எமது கட்சி ஒத்துழைப்பு வழங்கும், எனினும் 13 ஆவது திருத்தத்தை அவ்வாறான நடுநிலைமையான தமிழர்களால் கூட ஏற்றுக்கொள்ள முடியாது' என அவர் தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டுமெனில் அதற்கு சர்வகட்சி பரிந்துரைகள் அவசியமில்லை எனவும், உண்மையான அரசியல் அபிலாஷையே தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சர்வகட்சி குழுவில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் வரம்பு மீறிய அதிகாரத்தை அனுபவிப்பதாக இந்து ஏசியா செய்தி சேவைக்கு கலாநிதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், ஸ்ரீலங்கா சமசமாஜ கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான திஸ்ஸ விதாரணவே சர்வகட்சி குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : www.lankadissent.com/Tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.