Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பில் பள்ளி மாணவிகள் இருவர் கடத்தப்பட்டுள்ளனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் பள்ளி மாணவிகள் இருவர் கடத்தப்பட்டுள்ளனர்

[Friday March 07 2008 07:47:55 AM GMT] [யாழினி]

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில் இரண்டு பாடசாலை மாணவிகள் அவர்களுடைய வீடுகளில் வைத்து இரவுவேளை இனந்தெரியாத ஆயததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்குடா நாமகள் வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரத்தில் கல்வி பயிலும் மாணவிகளே இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

வாகனமொன்றில் வந்த குறிப்பிட்ட ஆயததாரிகள் தமது வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தேடுதல் நடத்தி பலாத்காரமான முறையில் இவர்களை கடத்திச்சென்றுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

இக்கடத்தலுடன் தொடர்புடைய நபர்களோ இதன் பின்னியோ தங்களுக்கு தெரியாது என்று கூறும் உறவினரகள், மனிதாபிமான ரீதியில் இவர்களை விடுதலை செய்யுமாறும் கோருகின்றனர்.

tamilwin.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழைச்சேனை கருங்காலிச் சோலை பகுதியில் வெள்ளை வானில் வந்த ஆயுதபாணிகளால் இரு மாணவிகள் கடத்தல்!

வாழைச்சேனை கருங்காலிச் சோலை பகுதியில் கடந்த இரு நாட்களில் இரு பாடசாலை மாணவிகள் வெள்ளைவான்களில் வந்த ஆயுதபாணிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

திருமணமான மற்றொரு பெண்ணை ஆயுதபாணிகள் கடத்திச் செல்ல முற்பட்டபோது அவர் கெஞ்சி, மன்றாடியதுடன் அயலவர்களின் உதவியுடன் அவர்களிடமிருந்து தப்பியுள்ளார்.

இந்தச் சம்பவங்கள் வாழைச்சேனை பகுதியில் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் கருங்காலிச்சோலையிலுள்ள இவரது வீட்டிற்கு வெள்ளை வானில் சென்ற ஆயுத பாணிகளே இவரைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.

பாசிக்குடாவைச் சேர்ந்த குணசுந்தரம் புஸ்பராணி (வயது 16) என்ற மாணவியே திங்கட்கிழமை இரவு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

புஸ்பராணியின் பெற்றோர் 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் காவு கொள்ளப்பட்டனர். அதன் பின்னர் தனது மூத்த சகோதரரின் பராமரிப்பில் இவர் தங்கியிருந்தார். கல்குடா நாமக்கல் வித்தியாலயத்தில் 11 ஆம் நிலையில் புஸ்பராணி படித்து வந்தார். இவ்வேளையிலேயே கடத்தப்பட்டார்.

இதேநேரம், அதே பாடசாலையைச் சேர்ந்த 11 ஆம் தரம் படித்து வந்த மாணவியான யோகநாதம் யசோதினி (வயது 16) என்பவர் செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

யசோதினியின் தந்தை காலமாகிவிட்டார். தனது தாயாருடன் வசித்துவந்த நிலையில் யசோதினி கடத்தப்பட்டுள்ளார். இவ்விரு கடத்தல்கள் தொடர்பாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம், கருங்காலிச்சோலை பகுதியில் திருமணமான மற்றொரு பெண்ணை இந்த ஆயுதபாணிகள் வெள்ளை வானில் கடத்த முற்பட்டபோது அவர் அழுது, குழறி, கெஞ்சி மன்றாடியுள்ளார். இவ்வேளையில், அங்கு மக்கள் கூடவே ஆயுதபாணிகள் அவரை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவங்களால் வாழைச்சேனை பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

theepori.com

  • கருத்துக்கள உறவுகள்

உலகமே மகளிர் தினம் கொண்டாடும் போது எமது மகளிருக்குத்தான் இப்படியான துன்பங்கள்.அந்த பிள்ளைகளை விடுங்களப்பா.

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இளம் பெண்கள் ஆயுத தாங்கிய தமிழ் துணை இராணுவக் குழுக்களினால் இரவு நேரங்களில் கடத்தப்படுவது அதிகரித்துள்ளதை அடுத்து அங்குள்ள மக்கள் உளரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு, பெரும் அச்சத்துடன் இரவுப் பொழுதுகளை கழித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மேலதிகமாக தெரியவருவதாவது:

கடந்த சில தினங்களுக்கு முன் வாழைச்சேனைப் பகுதியில் இரவு நேரத்தில் வெள்ளை வானில் வந்த துணை இராணுவ ஆயுதக்குழுக்களினால் சுனாமியால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த இரண்டு 16 வயதுச் சிறுமியர்கள் கடத்தப்பட்டார்கள்.

அக்கரைப்பற்றில் இளம் சிறுமியை ஆயுதம் தாங்கிய துணை இராணுவக்குழுக்கள் கடத்தியபோது, அதனை தடுக்க முயன்ற அச்சிறுமியின் தந்தையையும் சுட்டுக் கொண்றுவிட்டு அச்சிறுமியை கடத்திச் சென்றுள்ளார்கள்.

நேற்றைய தினம் ஆரையம்பதியில் நான்கு சிறுமியர்கள் நடு இரவில் கடத்தப்பட்டு உள்ளார்கள். இதில் இரண்டு சிறுமியர்கள் மூதூரிலிருந்து முஸ்லீம் ஆயுததாரிகளினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து தமது கல்வியை தற்காலிகமாக இங்கு தொடர்ந்தவர்களாவார்கள்.

நேற்றைய தினம் ஆரையம்பதியில் சிறுமிகள் கடத்தப்பட்டது, பிள்ளையான் துணை இராணுவ குழுவைச் சேர்ந்த சாந்தன் தலைமையிலான குழுவினரே இக்கடத்தல் நாடகத்தில் ஈடுபட்டதாக தம்மை அடையாளப் படுத்த விரும்பாத ஆரையம்பதி மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

http://www.orunews.com/?p=96

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.