Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளுக்கு ஜனாதிபதியும் மஹிந்தவும், அவரது அரசாங்கமுமே உதவி செய்கின்றது - ரணில் விக்ரமசிங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுக்கு ஜனாதிபதியும் மஹிந்தவும், அவரது அரசாங்கமுமே உதவி செய்கின்றது - ரணில் விக்ரமசிங்க

அரசாங்கத்திற்கு சார்பான பிள்ளையான் குழுவுடன் இணைந்து இன்று விடுதலைப் புலிகளுக்கு ஜனாதிபதியும், அவரது அரசாங்கமுமே உதவியளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் வைத்து இன்று (மார்ச் 17) இதனைத் தெரிவித்துள்ளார்.

'தற்போது அமெரிக்காவினால் வழங்கப்பட்டு வந்த பயிற்சிகள் மற்றும் உதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன." ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புக்களும் இல்லாது போயுள்ளது. மனித உரிமைகள் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்தினால் மீறப்படுவதே இதற்கு பிரதான காரணியாகும். மேலும் அரசாங்கத்திற்கு சார்பான பிள்ளையான் குழுவினரும்,

தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறுவர்களை படையில் சேர்த்துக் கொள்வதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே பிள்ளையான் குழுவினருடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். பிள்ளையான் குழுவினருக்கு தேவையான உதவிகளை பாதுகாப்பு அமைச்சே வழங்குகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றுகின்றார். இதன்படி சிறுவர்களை படையில் சேர்த்தல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் பிள்ளையான் குழுவினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அரவது அரசாங்கமுமே ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2002 ஆண்டுவரை ஆயுத விற்பனை மற்றும் பயிற்சிகள் வழங்குவதை அமெரிக்கா இடைநிறுத்தியிருந்தது. எனினும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த நிலைமையை மாற்றி இராணுவப் பயிற்சி மற்றும் ஆயுத கொள்வனவுகளை மேற்கொண்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க அரசாங்கம் யுத்த கப்பலொன்றைறும் தாம் ஆட்சி செய்த காலத்தில் வழங்கியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுத்தல், விடுதலைப் புலிகள் சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தல் என்பவற்றுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற எமது உறுதி மொழிக்கு அமையவே அமெரிக்கா உதவிகளை வழங்கியது.

எனினும், தற்போது இந்த நிலைமை மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2005ம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது மட்டக்களப்பு மக்களை சுதந்திரமாக வாக்களிக்க முடியாத வகையில் விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தினர். இதன் போது விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்து சென்ற பிள்ளையான் குழுவோ அல்லது கருணா தரப்போ இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2008ம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களிக்கக்கூடிய வாய்ப்புக்களை பிள்ளையான் குழுவினர் முன்கூட்டியே தடுத்து நிறுத்தியிருந்தனர்.

மேலும், இந்தத் தேர்தல்களின் போது பிள்ளையான் குழுவினருடன் இணைந்தே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட்டது.

செங்கலடி மற்றும் வாகரைப் பிரதேச தமிழ் மக்கள் பிள்ளையான் குழுவினருக்கு வாக்களிக்க வேண்டும் என வற்புறுத்த வேண்டிய கட்டாயம் பாதுகாப்பு படையினருக்கு ஏற்பட்டதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழு என்பன இயங்காததன் காரணமாகத்தான் இவ்வாறான அதிகார துஸ்பிரயோகங்கங்கள் நாட்டில் இடம்பெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆணைக்குழுக்களை செயற்படுத்தக்கூடிய அரசியல் சாசனசபைக்கான நியமனங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வேண்டுமென்றே காலம் தாழ்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.lankadissent.com/Tamil/news/200..._17_05_news.htm

சிறிலங்கா அரசாங்கம் துணை இராணுவக்குழுவான பிள்ளையான் குழுவிற்கு பல்வேறு வழிகளிலும் உதவியளித்து வருவதாலேயே சிறிலங்காவிற்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்தியிருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது வரதராஜப் பெருமாளை அரசாங்கம் கிழக்கில் உருவாக்கியுள்ளது - ரணில்

3/18/2008 12:11:51 AM

வீரகேசரி இணையம் - பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்து கொண்டுள்ள அரசாங்கம் சர்வதேசத்தினை விமர்சிப்பதில் எந்தவித பயனும் இல்லை. இராணுவத்தினரால் மீட்கப்பட்ட கிழக்கு மாகாணம் புலிகளிடமிருந்து பிரிந்த பிள்ளையானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டாவது வரதராஜப்பெருமாளை மஹிந்த அரசாங்கம் கிழக்கில் உருவாக்கியுள் ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மீட்கப்பட்ட கிழக்கை மீண்டுமொரு முறை மீட்க வேண்டிய நிலை முப்படையினருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இராணுவத்தினர் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். கொழும்பு கேம்பிரிஜ் ரெரசில் உள்ள அலுவலகத்தில் நேற்று செய்தியாளர் மாநாடொன்றினை நடத்தியபோதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

ஐக்கிய தேசியக் கட்சி மீதும் என் மீதும் குற்றம் சுமத்திய அல்லது வசைபாடிய மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் இன்று ஆயுதம் தாங்கிய பிள்ளையான் குழுவுடன் இணைந்திருக்கின்றது.

பிள்ளையான் என்பவர் புலி உறுப்பினர் அவரது குழுவினரும் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் இராணுவத்தினரால் மீட்கப்பட்ட கிழக்கு நிர்வாகம் புலிகளில் இருந்து பிரிந்த பிள்ளையானிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றத

இந்த மாதனமுத்தா மகிந்த குளோனிங் முறை படித்திருக்கிறார். தான் படிக்கிவில்லை என்றொரு புலம்பல். :huh:

அணில் பிள்ளை தனக்குச் சாதகமான புதிய பக்கமொன்றைத் திறக்கின்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.