Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முக்கிய பிரதிநிதிகள் குழு வருகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முக்கிய பிரதிநிதிகள் குழு வருகை

இலங்கையின் உண்மை நிலைவரத்தை நேரில் கண்டறிவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கை வந்திருக்கின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைமை ஸ்லோவேனியாவிடம் உள்ளது. அடுத்த தலைமை பிரான்ஸுக்கு.

தற்போதைய தலைமை மற்றும் அடுத்த தலைமை ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதிநிதியையும் உள்ளடக்கிய முத்தரப்பினரைக் கொண்ட உண்மைகளைக் கண்டறியும் உயர்மட்டக்குழுவே இரண்டு நாள் விஜயமாக இலங்கைக்கு வந்திருக்கின்றது.

இலங்கையின் முக்கிய தலைவிதியைத் தீர்மானிக்கப் போகும் ஓர் உயர்மட்டக் குழுவின் விஜயம் இது என்பது பற்றிய தகவல் தென்னிலங்கை ஊடகங்களில் வெளிவராமல் இருப்பது அதிசயமே. வழமையாகவே முக்கியமான அம்சங்களை மறைத்து, அர்த்தமற்ற விடயங்களைப் பூதாகாரப்படுத்தி, அர்த்தம் கற்பித்துக் கொள்ளும் தென்னிலங்கை ஊடகங்கள், அதேபாணியில் இந்த உயர்மட்டக் குழுவின் வருகை பற்றிய செய்திகளுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காமல் அவற்றை உதாசீனப்படுத்தி தள்ளி வைத்துவிட்டன போலும்.

இந்த உயர்மட்டக் குழுவினர் இலங்கையில் பொதுவாக அமைதி முயற்சிகள், சமாதானத்துக்கான எத்தனங்கள், மனித உரிமை விவகாரங்கள், சிறுபான்மை மக்களின் வாழ்நிலை ஆகியவை பற்றியெல்லாம் ஆராய்ந்து அறிய முயல்வார்கள் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், அக்குழுவின் இலங்கை வருகைக்குப் பிரத்தியேக நோக்கம் ஒன்று உண்டு என விடயமறிந்த வட்டாரங்கள் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றன.

இலங்கை உற்பத்திகளைத் தமது நாட்டில் இறக்குமதி செய்து அதற்கான விசேட ஏற்றுமதிச் சலுகைகளை இலங்கைக்கு வழங்கிவரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அது தொடர்பாக ஏற்கனவே இலங்கைக்கு வழங்கப்பட்ட சலுகைக்காலம் முடிவடையும் நிலையில் அந்தச் சலுகைகளை நீடிப்பது குறித்துத் தீர்மானிக்கும் கட்டத்தில் உள்ளன.

இத்தகைய சலுகைகளை உலக நாடு ஒன்றுக்கு அபிவிருத்தி அடைந்துவரும் நாடு ஒன்றுக்கு வழங்கி, அதன் விருத்தியை ஊக்குவிப்பதாயின் அந்த நாடு மனித உரிமைகளைப் பேணி, சட்டம் ஒழுங்கை சரிவரக் கடைப்பிடித்து, மனித மாண்புகளை மதிக்க வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையிலான பொதுவான உடன்பாடாகும்.

அந்த மகத்துவத்தை கடப்பாட்டை இலங்கைக்கான சலுகைகளை நீடிக்கும் விடயத்திலும் ஒரு நிபந்தனையாக விதித்திருக்கும் மேற்குலகம், அது பற்றி ஆராய்ந்து ஒரு முடிவைச் சிபார்சு செய்வதற்காகவே இந்த உயர்மட்டக் குழுவைக் கொழும்புக்கு அனுப்பியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்தக் குழுவின் அறிக்கையில்தான் மேற்கு நாடுகளுக்கான இலங்கை உற்பத்திகளின் ஏற்றுமதி தொடர்பான எதிர்காலமே தங்கியிருக்கின்றது.

இந்த ஏற்றுமதிகளில் முக்கியமான விடயம் தைக்கப்பட்ட ஆடைகளாகும்.

வெளிநாட்டிலிருந்து மூலப் பொருட்களை இறக்கி, இலங்கையில் ஆடைகளைத் தைத்து, மேற்கு நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்கிறார்கள். இதன்மூலம் இலங்கைத் தொழிலாளர்களுக்குக் கணிசமான வேலைவாய்ப்புக் கிடைக்கிறது. அதிகளவு வெளிநாட்டு செலாவணியும் கிடைக்கின்றது.

இலங்கையில் தைக்கப்பட்ட ஆடைகளைத் தமது நாடுகளில் இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய நாடுகள் விசேட வரிவிலக்குச் சலுகைகளை வழங்குகின்றன. இந்தச் சலுகைகள் காரணமாகவே மற்றைய நாடுகளுடன் போட்டி போட்டு, அவற்றை விஞ்சிக் குறைந்த விலையில் தைத்த ஆடைகளை இலங்கையினால் மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிகின்றது.

இந்த விசேட வரிச்சலுகைகளை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக்கொள்ளுமானால் இலங்கையின் நிலைமை அதோ கதிதான்.

வருடம் ஒன்றுக்கு இருநூறு கோடிடொலர் (சுமார் 22 ஆயிரம் கோடி ரூபா) பெறுமதிக்கான தைத்த உடைகளை மேற்குலகம் தற்போது இலங்கையில் இருந்து இறக்குமதி செய்கின்றது. மேற்படி சலுகை இல்லாமல் போகுமானால் இந்த ஏற்றுமதி அடியோடு படுத்துவிடும். நாட்டில் உள்ள பல நூற்றுக்கணக்கான ஆடைத் தொழிற்சாலைகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டியதுதான். ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் வேலை இழப்பர்.

ஆகவே, இந்த உயர்மட்டக்குழுவின் இலங்கை விஜயத்தின் முடிவிலான அறிக்கை, இலங்கையின் பொருளாதாரத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விவகாரமாகின்றது.

அதனால்தான் இந்தக் குழுவை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு உட்பட சகல அரச தரப்புகளும் மிகுந்த மரியாதையாக வரவேற்று உபசரித்து மகிழுகின்றன.

எது, எப்படியென்றாலும் பல்வேறு சுயாதீன நடுநிலை பிரதிநிதிகள், அரச சார்பற்ற அமைப்புகள், தொண்டர் நிறுவனங்கள் உட்பட பல அமைப்புகள் எனப் பல்வேறு தரப்புகளையும் இக்குழுவினர் சந்தித்து உண்மைகளைக் கண்டறிந்து, இலங்கை அரசுத் தலைமையின் மனித உரிமைகளை மதியாத திமிர்ப் போக்குப் பற்றிய யதார்த்தத்தை மணந்து பிடிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.