Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் கடும் கண்டனம்: அந்தரங்கத்தை அம்பலப்படுத்தியதால் விசனம்

Featured Replies

சிறிலங்காவில் நீதிக்குப் புறம்பான கொலைகளும் காணமல் போதலும் பயங்கரமான நிகழ்வுகளாகி விட்ட போதும், சிறிலங்கா அரசாங்கத்துக்கு மாத்திரம் தாம் சமர்ப்பித்த அந்தரங்க அறிக்கையை பகிரங்கப்படுத்தி பகிர்ந்து கொண்டமைக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

வெளிவிவகார அமைச்சு மீது ஜ.சி.ஆர்.சி குற்றச்சாட்டு

3/19/2008 10:34:02 PM

வீரகேசரி இணையம் - மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பான தமது இரகசிய தகவல்களை வெளிவிவகார அமைச்சு தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி.) குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமைகள் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கடந்த 15 ஆம் திகதி வெளியிட்ட பதில் அறிக்கையிலேயே தமது இரகசிய தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஐ.சி. ஆர்.சி சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக ஐ.சி.ஆர்.சி. மேலும் தெரிவிக்கையில் ஐ.சி.ஆர்.சி, தனது மாதாந்த அறிக்கைகள், அவதானிப்புக்கள் தொடர்பான இரகசிய தகவல்களை இலங்கை அரசாங்கத்துடன் வெளிவிவகார அமைச்சுடனும் பகிர்ந்து வருகின்றது. இந்நிலையில் எமது இரகசிய தகவல்களை மக்களை தவறாக வழிவநடத்தும் நோக்கில் வெளிவிவகார அமைச்சு பயன்படுத்தியுள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றோம்,.

இலங்கையில் இடம்பெற்று வரும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள், காணாமல் போதல்கள் என்பன மிகவும் பயங்கராமனவை என்பதுடன் இவை உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இவை தொடர்பில் பகிரங்க அறிக்கைகள் மூலமாகவும் இரகசிய தகவல்கள் ஊடாகவும் அரசாங்கத்துக்கு எமது கவலையை தெரியப்படுத்தியுள்ளோம். அரசாங்கத்துடனான உயர் மட்ட சந்திப்புக்களின் போதும் இது தொடர்பான எமது கவலையை தெரியப்படுத்தியுள்ளோம். இதன்காரணமாகவே காணாமல் போதல்கள் தொடர்பாக பகிரங்க விவாதத்தில் ஈடுபடநாம் விரும்பவில்லை.

ஆயுத மோதல்களால் பாதிக்கப்படுபவர்களை பாதுகாத்தல் மற்றும் அவர்களுக்கு உதவியளித்தல் ஆகிய நடவடிக்கையில் ஐ.சி.ஆர்.சி ஈடுபட்டு வருகின்றது. எனினும் அரசாங்கத்துடன் எமது இரகசிய அவதானிப்புக்கள் மற்றும் தகவல்களை பரிமாறும் சந்திப்புக்கள் தொடர்ந்தும் இடம்பெறும்

அரசாங்கம் மற்றும் ““விடுதலைப் புலிகளுடன் ஐ.சி.ஆர்.சி தொடர்ந்தும் பேச்சு வார்த்தையை மேற்கொள்ளும்.மோதலில் ஈடுபட்டுள்ள இந்த இருதரப்பும் சர்வதேச சட்டங்களை மீறப்படுவதை தவிர்ப்பதோடு வன்முறைகளுக்கு முடிவு கட்டவேண்டும் என்றும் வேண்டுகோள்விடுக்கின்றோம்

வெளிவிவகார அமைச்சின் அறிக்கை

இதேவேளை அமெரிக்க ராஜாங்க அமைச்சின் மனித உரிமை அறிக்கைக்கு வெளிவிவகார அமைச்சு அளித்த பதில் அறிக்கையின் விபரம் வருமாறு:இலங்கையின் மனித உரிமைகள் பற்றி அமெரிக் ராஜாங்க அமைச்சின் 2007 ஆம் வருடத்திற்கான நாடுகளின் மனித உரிகைள் பற்றிய அறிக்கை சம்பந்தமாக தனது கடுங் கவலையைத் தெரிவிப்பதற்காக இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோகித பொகொல்லாகம இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் ரொபட் பிளேக்கை சந்தித்தார், இந்த அறிக்கையில் 2007ஆம் வருடத்தில் இலங்கையின் உண்மையான நிலைவரம் குறிப்பிடப்படாமல் கருத்துக்கள் திரிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் தொடரான மிகைப்படுத்தல்கள் என்பன இவ் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள அபிப்பிராயங்கள் மற்றும் இலங்கையின் கீர்த்திக்கு மாசு கற்பிக்கும் நபர்களின் கருத்துக்களுக்குமிடையில் சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஒருமைப்பாடு இழையோடுவதை அவதானிக்க முடிகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.