Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாறும் தேசியமும் - விடுதலைப் புலிகள்

Featured Replies

ஒரு இனம் தன்னுடைய பண்டைய வரலாற்றினைக் கற்றுணரவேண்டிய தேவை இருக்கிறது. எவ்வளவு தூரம் எமது வரலாற்றினைப் பின்னோக்கிப் பார்க்க எம்மால் முடியுமோ அவ்வளவு தூரம் எம்மால் முன்னேற முடியும் என்று சொல்லப் படுகிறது. வரலாறு வழிகாட்டியாகவும், வரலாற்றுத் தவறுக ளைத் தவிர்ப்பதற்கு உதவும் நண்பனாகவும் இடம்பெறுகிறது. வரலாற்று கற்கையில் தொல்பொருளியல், மொழியியல், ஆதி

வரலாறு, அரசியல், புவியியல், சமூகவியல், இலக்கியம் என்பன முக்கிய இடம் வகிக்கின்றன. ஒரு இனத்தின் நாகரிகம்,பண்பாடு ஆகியவற்றை அறிவதற்கு இவையனைத்தும் உதவுகின்றன. தன்னினத்தின் தொண்மையும், தொல்காலசசுவடுகளையும் ஒரு தேசிய இனம் உய்துணரும்போது விடுதலை வேட்கையும் நாட்டுப்பற்றும் மேன்மை அடைகின்றன. பிற இனங்களின் பண்பாட்டு இயல்புகள், வரலாற்றுப் போக்கு, அரசு முறை என்பவற்றையும் நாம் கற்றுணர வேண்டும். நமது அயல்நாடுகள் எம்மீது பாதிப்புக்

களை ஏற்படுத்து கின்றன. அவர்கள் மேற்கொள்ளும் இராசதந்திர மற்றும் அரசியல் அணுகுமுறைகளை

விளங்கிக்கொள்வதற்கு அந்த நாடுகளின் வரலாறும் பாரம்பரியமும் எமக்கு உதவுகின்றன. இவ்வகையான

வரலாற்றுக் கற்கை எமது வெளியுறவைப் பலப்படுத்துவ தோடு எமது தற்காப்புக் கவசமாகவும் இடம்பெறுகிறது.

தொடர்ச்சியாக எழுதப்பட்ட வரலாறு ஈழத்தமிழர்களுக்கு இல்லாமை தேசிய உணர்வை ஓரளவுக்குப் பாதிக்கின்றது. தமிழ்மொழி பழமை மிக்கதாகவும், தனி மரபுகொண்டதாகவும், தானே முகிழ்த்ததாகவும், மற்றைய மொழிகளிலிருந்து கிளைக்காததாகவும், தன்னகத்தே பெருவளமிக்க தொன்மையான இலக்கியமுள்ளதாகவும் இருப்பதால் எமது தேசியமும் தமிழுணர்வும் குன்றாதிருக்கின்றன. இருப்பினும் தமிழகத்திலோ இங்கோ தொடர்ச்சியான வரலாற்று நூல்கள் இல்லாக்குறையை நிவர்த்தி செய்ய முடியாதிருக்கின்றது. சிங்கள மக்களைப் பொறுத்தளவில் புனைகளுடனாவது ஒரு எழுதப்பட்ட வரலாறு மகாவம்ச உருவத்தில் இருக்கிறது.

தமிழ் என்று முதன் முதலாக சங்க இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் குறிப்பிடப்படுகிறது. தமிழ் என்ற சொல் இவற்றில் ஒரு மொழி, ஒரு இனம், ஒரு நாடு என்பவற்றைக் குறிப்பிடும் பதமாகப் பயன்படுகின்றது. பொதுவாக மொழியைக் குறிக்கும் சொல், அம்மொழி பேசும் மக்கள், மொழி வழங்கும் நாடு என்பனவற்றைக் குறிக்கும். இது தமிழ் மொழிக்கும் பொருந்தும், ஆனால் தமிழ் மேலும் விரிவான பல பொருள்களைக் கொண்டுள்ளது. ''இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்'' என்று பிங்கல நிகண்டு கூறுகிறது. சேரன் செங்குட்டுவனின் வடபுலச் செலவு பற்றிக் குறிப்பிடும் இளங்கோவடிகள் தமிழ் என்பது வீரத்தைக் குறிப்பிடவைத்துள்ளார்.

''வடதிசை மருங்கின் மன்னவரெல்லாம்

தென்தமிழ் ஆற்றல் காண்குதும் யாமென''

சிலப்பதிகாரம் 26:185

தமிழ் என்பது தமிழ் நூலையும் குறிப்பிடும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுவார்கள். தமிழீழத்தவரான தவத்திரு தனிநாயகம் அடிகளார் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு உலகின் பல பாகங்களிற்குச் சென்று தமிழின் பெருமை பற்றிப் பேசியுள்ளார். தமிழின் தொன்மை, இலக்கியவளம் என்பன பற்றி அவர் பல்வேறு பல்கலைக்கழகங்களின் மேலாளர்களுக்கு எடுத்துக் கூறினார்.தமிழைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என அவர் வேண்டுகை விடுத்தார். சமஸ்கிருதம் போன்ற உயர் நிலை தமிழுக்கு இல்லையென்று சில பல்கலைக்கழகங்கள் அவருடைய கோரிக்கையை நிராகரித்துவிட்டன. இருப்பினும்

இங்கிலாந்து, ருசியா, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் தமது சில பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையைத் தொடங்கின. ஆனால் இந்திய மொழிகள் என்ற தலைப்பின் கீழ் மாத்திரம் அவை கற்பித்தலைத் தொடங்கின. தமிழைத் தனியாக வளர்க்க அவர்கள் முன்வரவில்லை. இப்போது தமிழ் பற்றிய புதிய விழிப்பு ஏற்பட்டிருக்கின்றது. அறிவுசார் மானிடத்தின் பொது மூதாதை மொழி தொல் திராவிட மொழியாகத்தான் இருத்தல் வேண்டும் என்ற கருதுகோளின்படி தமிழார்வம் முகிழ்த்துள்ளது. எமது விடுதலைப்போரும் தமிழார்வத்திற்கு இன்னுமோர் காரணமாகலாம்.

சிங்கள - பௌத்த பேரினவாதத்தின் வேத நூலான மகாவம்சத்தின் முன்னணிக் கதாநாயகனாகத் துட்டகாமினி

நிறுத்தப்பட்டுள்ளான். மகாநாம என்ற புத்தபிக்கு எழுதிய இன் நூலில் தமிழர்களின் படுகொலை நியாப்படுத்தப்பட்டுள்ளது.இத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.