Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தரைப்பாதையை திறக்க படையினரும் கடல்வழிப் பாதையை மூட புலிகளும் முயற்சி

Featured Replies

வட போர்முனை தொடர்சியாக அமைதியாயிருக்க வடக்கெ கடந்தவாரம் பெய்த அடை மழையால் களமுனைகள் வெள்ளக்காடாகியுள்ளன வெள்ளம் வடிந்து காயும் வரை பாரிய படை நகர்வுகளுக்கு சாதியம் இல்லை எனினும் அந்த பகுதியில் தொடர்சியான செல் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன தற்போதய வெள்ளநிலமை சிக்குன்குனியாவால் சாகக்கிடக்கும் படயினரை உற்சாகப்ப்டுத்தியுள்ளது...........

......................

தொடர்ந்து வாசிக்க......................

http://isoorya.blogspot.com/2008/03/blog-post_578.html

  • கருத்துக்கள உறவுகள்

தரைப்பாதையை திறக்க படையினரும் கடல்வழிப் பாதையை மூட புலிகளும் முயற்சி

விதுரன்

வடபகுதி போர்முனை தொடர்ந்தும் அமைதியாகவே இருக்கிறது. வடக்கே கடந்த இருவாரமாகப் பெய்த அடை மழையால் யுத்த முனைகள் வெள்ளக்காடாகிவிட்டன. இதனால் வெள்ளம் வடிந்து நிலம் காயும் வரை பாரிய படை நகர்வுகளுக்கான வாய்ப்புகள் குறைவாகவேயிருக்கும். எனினும் அந்தப் பகுதிகளில் தொடர்ச்சியாகக் கடும் ஷெல் தாக்குதல்களும் மோட்டார் தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன.

தற்போதைய வெள்ள நிலைமை படையினரை மிகுந்த உஷார் நிலையில் வைத்துள்ளது. வடபோர் முனையில் கடந்த ஒருவருடமாகப் படையினரே தொடர்ந்தும் பாரிய முன் நகர்வு முயற்சியில் ஈடுபட்டு வருவதுடன், புலிகள் பாரிய தாக்குதலெதனையும் நடத்திவிடக் கூடாதென்பதிலும் படையினர் மிகவும் கவனமாயுள்ளனர். புலிகள் பாரிய தாக்குதல் எதனையும் நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கிவிடக் கூடாதென்பதிலும் படையினர் தொடர்ந்தும் அவதானமாகவேயுள்ளனர்.

அடை மழையால் களமுனைகளெங்கும் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் வன்னியில் இடம்பெறும் பாரிய படை நகர்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மன்னாரிலேயே படையினர் தொடர்ந்தும் பாரிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அந்தக் களமுனையிலேயே படை நகர்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்தக் களமுனையில் பெரும்பாலான விநியோகப் பாதைகள் புலிகள் வசமேயிருப்பதால் வயல் நிலங்கள், பொட்டல் வெளிகளூடாகவே படையினரின் விநியோகப் பாதைகள் அமைந்துள்ளன.

கடும் மழை, வெள்ளத்தால் அந்த விநியோகப் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதுடன், அப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல முடியாதளவிற்கு நிலங்கள் சேறும், சகதியுமாயுள்ளன. பொதுவாகவே இவ்வாறான யுத்த முனையில் படையினர் தங்கள் விநியோக நடவடிக்கைகளுக்காக உழவு இயந்திரங்களையே பயன்படுத்தி வந்தாலும், இங்கு வெள்ளம் வடிந்தும் நிலம் காயும் வரை உழவு இயந்திரங்களைக் கூட வெளியே இறக்க முடியாதளவிற்கு வெள்ள நிலைமையுள்ளது.

பல இடங்களில் முழங்கால் அளவிற்கும் சில இடங்களில் இடுப்பளவிற்கும் வெள்ள நீர் நிற்பதாகப் படையினர் கூறுகின்றனர். இதற்குள் இறங்கி யுத்தம் புரிவதோ அல்லது விநியோகங்களை மேற்கொள்வதோ சாத்தியப்படாததென்று படைத்தரப்பு சுட்டிக்காட்டுகிறது. அத்துடன் புலிகளின் தாக்குதல்களுக்கு முகம் கொடுப்பதற்காக வெட்டப்பட்ட பதுங்கு குழிகள் மற்றும் அகழிகளும் வெள்ள நீரால் மூடப்பட்டுள்ளதால் அவ்விடங்களை விட்டு விலகி மேட்டு நிலங்களுக்குச் சென்றே படையினர் ஓய்வெடுக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

மன்னார் களமுனையில் வயல் நிலங்கள், பொட்டல் வெளிகள் எல்லாம் மழை நீர் தேங்கியிருப்பதால் இவற்றினூடாகப் பாரிய படை நகர்வை மேற்கொள்ள முடியாத நிலையேற்பட்டுள்ளது. அதேநேரம் புலிகளின் கடும் ஷெல் தாக்குதல்கள் மற்றும் மோட்டார் தாக்குதல்களிலிருந்து தப்புவதற்கு, பதுங்குகுழிகளினுள்ளோ, அகழிகளினுள்ளோ பதுங்க முடியாதளவிற்கு அவை வெள்ளத்தால் மூடப்பட்டிருப்பதால் படையினர் மரங்களில் ஏறி தற்காப்பு நிலையெடுக்கும் நிலைமையே அங்கிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், மன்னார் களமுனையில் பாரிய படை நகர்வுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாயிருப்பது புலிகளின் கண்ணி வெடிகளும் மிதிவெடிகளும் பொறிவெடிகளுமே. தற்போது இவை வெள்ளத்தினுள் மூழ்கிக் கிடப்பதால் இவற்றைக் கண்டுபிடித்து அகற்றி அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடர முடியாதளவிற்கு நிலைமையிருப்பதாக படைத் தரப்பு சுட்டிக்காட்டுகிறது.

ஏற்கனவே இங்கு காலநிலை சீராக இருக்கையிலேயே பாரிய படை நகர்வு முயற்சிகள் புலிகளின் தந்திரோபாயத் தாக்குதல்களாலும் அவர்களது புதிய புதிய உத்திகளாலும் நெருக்கடிகளைச் சந்தித்து வந்தநிலையில் தற்போது களமுனை வெள்ளக் காடாகியிருப்பதால் பாரிய படை நகர்வு முயற்சிகளை ஒத்தி வைத்து தற்காப்புச் சமரை மட்டுமே மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மன்னார் கள முனையில் மடுவையும் அடம்பனையும் கைப்பற்றுவதே படையினரின் பிரதான நோக்கமாகும். இந்தப் பகுதியில் மடு தேவாலயத்தை அண்டிய பகுதிகள் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளேயல்ல. எனினும் அதனைக் கைப்பற்றுவதன் மூலம் தெற்கில் பெரும் அரசியல் பிரசாரத்திற்கு அதனைப் பயன்படுத்த அரசு முனைகிறது. அதேநேரம் அடம்பனைக் கைப்பற்றுவதன் மூலம், மன்னார் - பூநகரி வீதியில் முக்கிய சந்தியொன்றைக் கைப்பற்றி அதன் மூலம் யாழ். குடாநாட்டுக்கான கரையோரப் பாதையை திறக்கும் முயற்சியை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியுமென அரசும் படைத்தரப்பும் கருதுகின்றன.

யாழ். குடாநாட்டுக்கான `ஏ9' வீதி மூடப்பட்டுள்ளது. இந்தப் பாதை திறக்கப்பட்டிருந்த போது அங்கு விநியோகங்கள் மிகத் தாராளமாயிருந்தன. எனினும் இந்தப் பாதை ஓமந்தையிலிருந்து முகமாலை வரை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இதனால் இந்தப் பாதை மீளத் திறக்கப்பட்டாலும் அது குடாநாட்டிலுள்ள படையினருக்கான விநியோகப் பாதையாக இருக்க மாட்டாது. எனவே தற்போதைய நிலையில் தங்களுக்கு வாய்ப்பாக, மன்னார் - பூநகரி ஊடாக கரையோரப் பகுதியில் தரை வழிப் பாதையொன்றை திறந்துவிட்டால் வட பகுதி யுத்த முனையில் தேவைக்கேற்ப விநியோகங்களை மேற்கொள்வதுடன், படையினரையும் வடக்கிற்கும் கிழக்கிற்குமிடையில் நகர்த்த முடியுமென படைத்தரப்புக் கருதுகிறது.

தற்போது யாழ். குடாநாட்டின் பெரும் பகுதி படையினர் வசமேயிருந்தாலும் குடாநாடு, நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. கடல்வழி மற்றும் வான்வழி விநியோகங்களை நம்பியே குடாநாட்டிலுள்ள 34,000 படையினருமுள்ளனர். வடக்கே யுத்தம் தீவிரமடைந்து வருகையில் யாழ். குடாநாட்டுக்கும் குடாநாட்டிலிருந்து வெளியிடங்களுக்கும் நிலைமைக்கேற்ப அவசர அவசரமாகப் படையினரை நகர்த்த வேண்டிய தேவைகள் அதிகரித்து வருகின்றன. எனினும் படையினரால் நினைத்த மாத்திரத்தில் இவற்றை மேற்கொள்ள முடியாதுள்ளது.

வடபகுதிப் போரில் இது படையினருக்கு பெரும் பின்னடைவாகவேயுள்ளது. போதிய துருப்புக்காவி விமானங்களோ, பாதுகாப்பாக குடாநாட்டுக்கும் தென்பகுதிக்குமிடையே சென்று வரக்கூடிய கடல் வழிப் பாதையோ இல்லாத நிலையிலும் குடாநாட்டிலுள்ள சுமார் 34,000 படையினரதும் இருப்பு தொடர்ந்தும் கேள்விக்குறியாகவேயுள்ளது. திருகோணமலைக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான கடல்வழிப் போக்குவரத்துக் கூட இன்று கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், வன்னிக்களமுனையில் படையினருக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படும் போது குடாநாட்டிலிருந்து படையினரை நினைத்த மாத்திரத்தில் வன்னிக்குக் கொண்டு வரமுடியாத நிலையேற்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவு, நாயாறு கடற்பரப்பில் கடற்படையினரின் அதிவேக டோராப் பீரங்கிப் படகொன்று கடற்புலிகளால் தாக்கி முற்றாக அழிக்கப்பட்டது. இந்த டோராப்படகு எப்படி அழிக்கப்பட்டதென்பது குறித்து கடற்படையினர் வசம் இதுவரை உறுதியான தகவல்களெதுவுமில்லை. கடற்சமர் எதுவுமே அங்கு நடைபெறாத நிலையில் இந்த `டோரா' எப்படி அழிக்கப்பட்டதெனக் கண்டுபிடிக்க முடியாத நிலையேற்பட்டிருப்பதாக கடற்படையினரே கூறுமளவிற்கு கடற்புலிகள் தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர்.

எனினும் அதிகாலை 2.10 மணி முதல் 2.45 மணிவரை நடைபெற்ற கடற்சமரையடுத்தே இந்த டோராப் படகு அழிக்கப்பட்டதாக புலிகள் கூறுகின்றனர். ஆனால் இந்தப் படகு கடல் கண்ணிவெடியில் சிக்கியிருக்கலாம் அல்லது புலிகளின் மனித டோப்பிடோ வெடிகுண்டுத் தாக்குதலாகவுமிருக்கலாமென கடற்படையினர் கூறுகின்றனர். இது எவ்வகைத் தாக்குதலென்பதை அறிய முடியாதளவிற்கு நிலைமையிருப்பதால், வடபகுதிக்கான படையினரின் விநியோகப் பாதைக்கு பெரும் அச்சுறுத்தலேற்பட்டுள்ளது.

தேவை அதிகரிக்கும் போது பலாலி விமானத்தளம் மீதும் காங்கேசன்துறை கடற்படைத் தளம் மீதும் ஆட்லறி ஷெல் தாக்குதல்களை நடத்தி புலிகள் அவற்றை செயலிழக்கச் செய்து விடுகின்றனர். இதனால், அவசர தேவைகளுக்காகக் கூட பலாலிக்கும் தென்பகுதிக்குமிடையிலான விமானப் பறப்பை மேற்கொள்வதில் படையினர் நீண்ட நேர நெருக்கடியை சந்திக்கின்றனர்.

இதைவிட தற்போது படையினரின் கடல்வழி விநியோகத்திற்கும் கடற்புலிகளால் பாரிய அச்சுறுத்தலேற்பட்டுள்ளது. இது, கடல்வழி விநியோகப் பாதையும் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலில்லை என்பதை உணர்த்தியுள்ளது. இதனால், குடாநாட்டுக்கான தரைவழி விநியோகப் பாதை இல்லாத நிலையில் படையினரின் வான்வழி மற்றும் கடல்வழி விநியோகத்தை தடுத்து நிறுத்தும் ஆற்றலை புலிகள் கொண்டுள்ளதை படையினர் உணர்கின்றனர்.

பலாலி படைத்தளம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் மீதான புலிகளின் ஆட்லறித் தாக்குதலை தடுத்து நிறுத்த படையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் இதுவரை அது சாத்தியப்படவில்லை. பூநகரி கல்முனைப் பகுதியிலிருந்து புலிகள் ஆட்லறி ஷெல் தாக்குதலை நடத்திய சில நிமிட நேரத்தில் அப்பகுதி நோக்கி யாழ்.குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஆட்லறி ஷெல் தாக்குதலையும் பல்குழல் ரொக்கட் தாக்குதலையும் படையினர் மேற்கொள்கின்றனர். அதைவிட விமானப் படை விமானங்களும் அங்கு விரைந்து கடும் தாக்குதலை நடத்தியும் விடுதலைப் புலிகளின் ஆட்லறிகளை அவர்களால் அழிக்க முடியவில்லை.

இதேநேரம் முகமாலையிலிருந்து ஆனையிறவு நோக்கி பாரிய படைநகர்வொன்றை மேற்கொண்டு அதன் மூலம் பூநகரியையும் கைப்பற்றி அல்லது பூநகரியிலுள்ள புலிகளைச் செயலிழக்க வைத்து அங்கிருந்து பலாலி மற்றும் காங்கேசன்துறை நோக்கி புலிகள் மேற்கொள்ளும் ஆட்லறி ஷெல் தாக்குதலை தடுக்க முடியுமென படைத்தரப்பு பல தடவைகள் முனைந்த போதும் முகமாலையைத் தாண்டி ஒரு அடி கூட நகர முடியாத நிலையேற்பட்டுள்ளது.

தற்போது முகமாலைச் சமரை வெற்றிகொள்வதற்காக யாழ். குடாநாட்டினுள் கவசப் படையணியை வெகு வேகமாகக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் படைத்தரப்பினர் ஈடுபட்டு வருகின்ற போதும் அந்தக் கவசப் படையணிகளை (டாங்கிகளை) எதிர்கொள்ளப் புலிகளும் புதிய உத்திகளுடன் தயாராகியுள்ளதாக படையினர் அறிந்துள்ளதால், அங்கு கவசப் படையணியின் நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்து விட்டால் அது புலிகளுக்கு மிகவும் வாய்ப்பாகி விடுமெனவும் படையினர் கருதுகின்றனர். இதனால் முகமாலையூடான பாரிய முன்நகர்வு முயற்சியை எவ்வாறு மேற்கொள்வதென்பதிலும் படையினர் தொடர்ந்தும் தடுமாறி வருகின்றனர்.

யாழ்.குடாநாட்டை புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பதென்றால் ஆனையிறவு வரை முன்நகர்ந்து, அதேவேளை பூநகரியிலும் தரையிறக்கமொன்றை மேற்கொண்டு அதனையும் கைப்பற்றுவதைத் தவிர வேறுவழியில்லையென படையினர் கருதுவதால் அதற்கான பல்வேறு திட்டங்களுடன் படையினர் தயாராகி வருகின்றனர்.

இதனொரு கட்டமாகவே, மன்னார் - பூநகரி கரையோரப் பாதையை கைப்பற்றிவிட்டால் முகமாலையிலிருந்து ஆனையிறவு நோக்கிய முன்நகர்வு முயற்சிக்கு அவசியமேற்படாதென படைத்தரப்பு கருதுகிறது. ஏனெனில் இந்தப் பாதையைக் கைப்பற்றி பூநகரிக்குச் சென்றுவிட்டால் அங்கிருந்து, பின்புறப் பக்கமாகத் தாக்குதல் தொடுத்து முகமாலை மற்றும் பளைப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள புலிகளை செயலிழக்கச் செய்துவிட முடியுமென படைத்தரப்புக் கருதுகிறது.

யாழ் . குடாநாட்டை பாதுகாப்பதற்காக பூநகரியைக் கைப்பற்ற வேண்டிய அவசிய அவசர தேவை படையினருக்கிருப்பது போல், யாழ். குடாநாட்டை மீளக் கைப்பற்றுவதற்காக, முகமாலை மற்றும் எழுதுமட்டுவாள் பகுதியில் மிகவும் வலுவான நிலையிலுள்ள படையினர் மீது தாக்குதலைத் தொடுத்து கொடிகாமத்தை புலிகள் கைப்பற்றிவிட்டால் குடாநாட்டிலுள்ள அனைத்துப் படைத்தளங்களையும் தங்கள் ஆட்லறி ஷெல் வீச்சுத் தாக்குதல் எல்லைக்குள் கொண்டு வந்து குடாநாட்டை முற்று முழுதாக செயலிழக்கச் செய்து சகல விநியோகப் பாதைகளையும் முழுமையாக மூடி விடலாமென புலிகள் கருதுகின்றனர். இதனால், கிளாலி- முகமாலை - நாகர்கோவில் அச்சில் இருதரப்பும் தங்கள் நிலைகளை மிக மிக இறுக்கமாகப் பலப்படுத்தி சிறு அசைவுகளைக்கூடத் தடுத்து நிறுத்தி விடுவதில் கண்ணும் கருத்துமாயுள்ளன.

இதேநேரம், மன்னார்- பூநகரி ப்பாதையூடான நகர்வு முயற்சி வெற்றியளித்தால் மேற்குபுறக் கடற்பரப்பில் கடற்புலிகளின் ஆதிக்கம் முழுமையாக இல்லாதுபோய் விடுமென்பதுடன், தமிழ்நாட்டுடனான புலிகளின் கடல்வழித் தொடர்பும் முழுமையாக அற்றுப் போய்விடுமென அரசும் படைத்தரப்பும் கருதுகின்றன.

இதனால், மன்னாரில் மடுத் தேவாலயப் பகுதியைக் கைப்பற்றுவதன் மூலம் பெரும் அரசியல் இலாபம் கிடைக்குமெனக் கருதும் அரசு, மன்னார்- பூநகரிப் பாதையை கைப்பற்றுவதன் மூலம் குடாநாட்டின் மீதான புலிகளின் அச்சுறுத்தலை நிறுத்தி, குடாநாட்டுக்கு தரை வழிப்பாதையொன்றைத் திறந்து புலிகளை வன்னிக்குள் மூன்று புறங்களிலும் சுற்றிவளைத்து விட்டு மணலாறிலிருந்து முல்லைத்தீவை நோக்கி நகர்ந்து அவர்களுக்கு மிகப் பெரும் நெருக்கடிகளைக் கொடுக்கலாமென படைத்தரப்புக் கருதுகிறது.

படையினர் இவ்வாறெல்லாம் கருதுகையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் கடந்தவாரம் கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் டோரா பீரங்கிப் படகு அழிக்கப்பட்டமையானது குடாநாட்டுக்கான கடல்வழிப் பாதையை பெரும் கேள்விக்குறிக்குள்ளாக்கியு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.