Jump to content

பிரான்ஸ் அரசியலும் , தமிழர்களும்


Recommended Posts

பிரான்ஸ் அரசியலும் , தமிழர்களும்

tamil.jpg

தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகள் பிரான்ஸ் நாட்டில் ஆழமாய் வேரூன்றியிருக்கின்றன என்பதை சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் வெளிப்படுத்தியிருக்கிறது.

தமிழுக்கும் பிரஞ்சுக்கும் இடையேயான பந்தத்திற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. 1664ல் மேற்கு இந்தியக் கம்பெனியை பிரான்ஸ் நிறுவதிலிருந்தே இந்த தொடர்பு இழையோடுகிறது.

தனது காலனி ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பிய ஐரோப்பியர்களுக்கும் பிரஞ்சும், தரங்கப்பாடியும் அதிகார மையங்களாக இருந்ததை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

பிரான்ஸ் நாட்டுடன் ஏற்பட்ட இத்தகைய தொடர்பு தமிழர்களை பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்திய இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றது எனலாம். பாண்டிச்சேரியிலிருந்து ஏராளமான தமிழர்கள் சுதந்திர காலத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு புலம்பெயர்ந்ததும் நிகழ்ந்தது.

இப்படி தங்கள் வாழ்க்கையை பிரான்ஸ் நாட்டிற்கு மாற்றிக் கொண்ட தமிழர்கள் தங்களுடைய கலாச்சாரத்தின் அடையாளங்களை இன்னும் தங்களுக்குள் தக்க வைத்திருக்கின்றனர் என்பது வியக்க வைக்கிறது.

ஈழத்தமிழர்களும் பிரான்ஸ் நாட்டிற்குக் குடிபெயர ஆரம்பித்த பின் இத்தகைய தமிழ் உணர்வு பிரான்ஸ் நாட்டில் இன்னும் வலுவடைந்தது. அதன் ஒரு உதாரணமாக கடந்த சனவரி மாதம் பிரான்சிலுள்ள ஆறு தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து “தமிழர் திருநாள் 2008” எனும் நிகழ்ச்சியை நடத்தினர்.

தமிழகத்தில் தமிழன் மறந்து போய் தொலைக்காட்சியின் சீரழிவு நிகழ்ச்சிகளுக்குள் ஆமையாய் அடங்கிக் கிடக்க பிரான்ஸ் நாட்டில் தமிழர்கள் எழுச்சி பெற்றிருக்கின்றனர்.

விழா மேடையில் பொய்க்கால் குதிரை, திராவிடக் கலாச்சார களரி, கூத்து, நாடகம், கவிதை என தமிழின் அடையாளங்கள் கம்பீரத்துடன் முகம் காட்டின. பாரதியின் “வாழ்க நிரந்தரம்” பாடலை ஈழ இசைவடிவில் பாடி தமிழக ஈழ உணர்வு இன்னும் தங்கள் குருதிகளில் கலந்திருக்கிறது என நிரூபித்தனர்.

பிரான்ஸ் நாட்டில் மொத்தம் ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் தமிழர்கள் உள்ளனர். இவர்களில் ஐம்பதாயிரம் பேர் நமது ஈழத் தோழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

பாரீசில் தமிழர்கள் தங்கள் புத்தகக் கடைகள் நான்கைத் திறந்து தமிழின் பரவலுக்கு வழிகோலியிருக்கின்றனர்.

இத்தகைய சூழலில் சமீபத்தில் நடந்த பாரீஸ் நகரும் அதைச் சார்ந்த பகுதிகளிலும் நடந்த பிரான்ஸ் உள்ளாட்சித் தேர்தலில் பன்னிரண்டு தமிழர்கள் வெற்றி பெற்று தங்களுடைய இருப்பை அரசியல் அரங்கிலும் உறுதி செய்திருக்கின்றனர் என்பது ஆனந்தமாய் ஒலிக்கிறது.

நகுலேஸ்வரி அரியரத்னம், சர்மிளா சபாரத்தினம், சோபியா சூசைபிள்ளை, பிரீத்தி நவனீதராஜு, சம்ததயாளினி, அருளாசந்தம் புவனேஸ்வரராஜா, கலையரசி ரவீந்திரநாதன், சந்திரசேகரன், சம்பா நிலவண்ணன், மரிய டார்வெஸ், லீலா ராஜேந்திரம் எனும் இவர்களில் முதல் ஏழுபேர் ஈழத்தைச் சேர்ந்தவர்கள்.

இதில் சுவையான இன்னொரு செய்தி என்னவெனில் அனைத்து ஈழ பிரதிநிதிகளுமே இடது சாரியைச் சேர்ந்தவர்கள் என்பது தான்.

இது தவிர வடக்கு ஐரோப்ப நாடான நார்வேயில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் எட்டு ஈழத் தமிழர்கள் வெற்றி பெற்றனர். இவர்களில் ஐந்து பேர் பெண்கள் என்பதும், அவர்களில் ஒருவருக்கு 19 வயதே என்பதும், எழுபது விழுக்காடு பெண்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர் என்பதும் ஆனந்தமளிக்கும் செய்தியாகும்.

தங்கள் சொந்த ஊரில் மேனாட்டுக் கலாச்சாரத்தின் கரையான்களால் அரிக்கப்பட்டு அடையாளங்களை இழந்து கொண்டிருக்கும் தமிழர்களின் இனம் வெளிநாடுகளில் தங்கள் இருப்பை தொன்மையான கலாச்சாரங்களின் துணையோடு வெளிப்படுத்தி வருகிறது.

இது உலகத் தமிழர்களுக்கு ஆனந்தமாக இருக்கும் அதே வேளையில், தமிழகத் தமிழர்களின் போலிக் கலாச்சார மோகத்தின் மீதோர் சாட்டையாகவும் இறங்குகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

நன்றி : தமிழ் ஓசை - களஞ்சியம் & appaal-tamil.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 11 MAY, 2024 | 06:25 AM   ஐக்கியநாடுகள் சபையில்  பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை  வழங்குவது குறித்து  ஐக்கியநாடுகள்பாதுகாப்பு சபை பரிசீலிக்கவேண்டும் என கோரும் தீர்மானத்தை ஐக்கியநாடுகள் சபை நிறைவேற்றியுள்ளது. பாலஸ்தீனத்திற்கு தற்போதைய பார்வையாளர் நிலையிலிருந்து மேலும் பல உரிமைகளையும் சலுகைகளையும் இந்த தீர்மானம் வழங்கியுள்ளது. 143 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. https://www.virakesari.lk/article/183203
    • பொதிசெய்யப்பட்ட இரண்டு பாண் பாக்கெட்டுகளில் எலியின் உடலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 100,000 க்கும் மேற்பட்ட பாண்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இச்சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது. ஜப்பான் உயர்தர சுகாதாரம் பேணப்படும் நாடாகும். இவ்வாறான சம்பவங்கள் அங்கு நடைபெறுவது அரிதாகும். எலியின் எச்சங்கள் அதன் தயாரிப்புகளில் எவ்வாறு ஊடுருவின என்பதை ஆராய்ந்து வருவதாக குறித்த பாண் தயாரிப்பு நிறுவன அதிகாரி ஷிகிஷிமா தெரிவித்துள்ளார். “எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தியதற்காக நாங்கள் ஆழ்ந்த மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்” என்று குறித்த நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜப்பானில் தூய்மை மற்றும் சுகாதாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது, ஆனால் உணவு விஷம் மற்றும் மோசமான தரம் ஆகியவை அண்மைக்காலத்தில் ஜப்பானிய தலைப்புச் செய்திகளாக அவ்வப்போது வருகின்றன. கடந்த ஆண்டு, அரிசி உருண்டையில் கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மன்னிப்புக் கேட்கப்பட்டதோடு அவை திரும்பபெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/301373
    • Published By: RAJEEBAN 11 MAY, 2024 | 08:27 AM   இலங்கையில் பொறுப்புக்கூறல் உண்மை நல்லிணக்கம் நீதி போன்றவற்றிற்கு ஆதரவளிப்பேன் என இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்படவுள்ள எலிசபெத் கே கோர்ஸ்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழுவின் முன்னிலையில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டால் இலங்கையில் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களை ஆதரவளிக்க  எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ள அவர் இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த அமெரிக்காவின் கரிசனைகளை பகிர்ந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் துடிப்பான சிவில்சமூகம்  காணப்படுகின்றது, நான் நியமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டால் இலங்கை அமெரிக்க சமூகங்கள் உட்பட மக்கள் மத்தியிலான தொடர்புகளை வலுப்படுத்த எண்ணியுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களிற்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளேன். உண்மை, நீதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறலிற்கு நான் ஆதரவளிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழு இலங்கையின் பொறுப்புகூறும் விவகாரங்களை கையாள்வதற்கான எலிசபெத் கே கோர்ஸ்டின் திறமை மாற்றுக்கருத்துக்களை இலங்கை அரசாங்கத்திடம் தெரிவிப்பதற்கான திறமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இதன்போது இலங்கை நாடாளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றிய சட்டங்கள்  இலங்கை மக்களிற்கான சுதந்திரங்களை மேலும் முன்னேற்றமாக்குவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் குறித்து செனெட்டர் பென்கார்டின் சுட்டிக்காட்டினார். நான் தூதுவராக நியமிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் பின்பற்றவேண்டிய சர்வதேச தராதரத்திற்கு அனைவரையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவேன் என எலிசபெத் கே கோர்ஸ்ட் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/183206
    • சித்திரை புதுவருடத்திற்கு இலங்கை பயணம் 👍 ஓம் இலங்கையில் செய்யபடும்  சொக்லேட் மட்டும் சுவை இல்லை . முஸ்லிம் மதத்தை பின்பற்றும் ஒருவர் தன்னை தமிழன் என்று சொன்னது எனக்கும் ஆச்சரியம்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.