Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு வெளிநாடுகளில் வேலையாம் - அரசாங்கம் அறிவிப்பு

Featured Replies

வீரகேசரி இணையம் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த அடிமட்ட உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன் ஒரு கட்டமாக சரணடையும் தற்கொலை குண்டு தாரிகளுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; சரணடையும் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு புனர்வாழ்வழிப்பதற்காக மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் இரண்டு பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன,யாழ்ப்பாணத

  • கருத்துக்கள உறவுகள்

மனித வெடிகுண்டுகள் சரணடைந்தால் ரூ. 1 கோடி பரிசு, வெளிநாட்டு வேலை

செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 1, 2008

கொழும்பு: விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை பிரிவைச் சேர்ந்த மனித வெடிகுண்டு நபர்கள் அரசிடம் சரணடைந்தால் அவர்களுக்கு ரூ. 1 கோடி பணமும், வெளிநாட்டில் வேலையும் தரப்படும் என இலங்கை அரசு புதிய தந்திரத்தில் இறங்கியுள்து.

விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை படை பலம் மூலம் எதிர்த்து வரும் இலங்கை ராணுவம் தற்போது ஆசை வார்த்தை என்ற புதிய ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.

இதுதொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு பிரிவினர் அரசிடம் சரணடைய வேண்டும். அப்படி சரணைடவோருக்கு ரூ. 1 கோடி ரொக்கம் தரப்படும். இதுதவிர அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை பெற்றுத் தரப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கொழும்பு நகர் உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து இலங்கை அரசின் ராணுவ செய்தி தொடர்பாளர் கெகலிய ரம்புகவெல்லா கூறுகையில், விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படை பிரிவில் உள்ள மனித வெடிகுண்டு நபர்கள் சரண் அடையும்படி வெளியான அறிவிப்பு அதிகாரபூர்வமானதுதான்.

சரண் அடையும் மனித வெடிகுண்டுகளுக்கு ரூ.1 கோடி ரொக்கப்பரிசும், வெளிநாட்டில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என்பதையும் இலங்கை அரசு ஒப்புக்கொண்டு இருக்கிறது. ஆனால், சரண் அடைகிறோம் என்று சொன்னவுடனேயே பணமும் வேலையும் வழங்கப்பட மாட்டாது.

இதில் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது இருக்கிறது. இந்த இளைஞர்கள் அமைதியுடன் வாழ்வதற்கு உரிமை உண்டு என்று கருதுகிறேன். இதுவரை சரண் அடைந்த 11 போராளிகளுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அளித்து இருக்கிறோம்.

வேலைவாய்ப்புடன் கூடிய இதுபோன்ற மேலும் 40 வகையான மறுவாழ்வு திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம் என்றார் அவர்.

கொழும்பில், சரண் அடையும்படி வேண்டுகோள் விடுத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், வெடித்து சிதறி சிதைந்த நிலையில் உள்ள மனித வெடிகுண்டு ஒருவரின் தலைப்பகுதியின் படமும் இடம் பெற்றுள்ளது.

உடல் பாகங்கள், துண்டு துண்டாக தரையில் சிதறிய நிலையில் சாக விரும்பாதீர்கள். நீங்களும் வாழப்பிறந்தவர்கள்தான். எதற்காக வெடிகுண்டுகளை சுமக்கிறீர்கள்? என்ற வாசகங்கள் அந்த போஸ்டரில் காணப்படுகின்றன.

விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் உலக அளவில் மிகவும் பயங்கரமானவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்களுக்கு கறும்புலிகள் என்று பெயர். இதுவரை 240 தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

http://thatstamil.oneindia.in/news/2008/04...rrendering.html

விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் உலக அளவில் மிகவும் பயங்கரமானவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்களுக்கு கறும்புலிகள் என்று பெயர். இதுவரை 240 தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன
.

உலகுக்கு ஏன் பயங்கரமானவர்கள் அவர்கள் மென்மையானவர்கள் பேரினவாதிகளுக்கே பயங்கரமானவர்கள் அப்பாவிகளுக்கல்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தாவின் மாளிகையில் வேலை வாய்ப்பு என்றால் கனபேர் வருவார்கள். :wub::wub:

இருக்கிறவங்களுக்கு முன்னம் சாப்பாட்டை அனுப்புங்கோட பிறகு வெளிநாட்டுக்கு அனுப்புறதை யோசிக்கலாம்.

ஒருகோடி பரிசை இலங்கை வங்கியிலைதான் வைப்பில இட வேணுமோ இல்லை தமிழீழ வைப்பகத்திலை வைப்பிலை இடலாமோ...???

ஒரு கோடியை குடுத்து ஊரைவிட்டு ஏன் துரத்துறாங்கள்... ஊரிலையே நன்னா இருக்கலாமே...??? அதாவது வடக்கு கிழக்கிலை...

Edited by தயா

ஆகா... கா... கா!

தயா!

இலங்கை வங்கியில மட்டும் தான்... விசயம் விளங்காமல்.. சும்மா வந்து மாட்டு படாதேங்கோ...

இலங்கை வங்கியில மட்டும் தான்... விசயம் விளங்காமல்.. சும்மா வந்து மாட்டு படாதேங்கோ...

தமிழன் எண்டாலே புலிதானாம்...!!! கறுப்பாய் இருக்கிற தமிழர் (எல்லாரும் கறுப்புத்தானே) எல்லாரும் போய் சரன் அடையலாம்...!!! இதிலை ஒரு வசதி என்ன எண்டா புலம் பெயந்தவை சரனடைஞ்சா திருப்பி அனுப்பி வைப்பினம்....!!!

Edited by தயா

இது வரைக்கும் புலம் பெயராவிட்டாலும் இனிமே அனுப்பி வைப்பினமாம்... ஒருகோடி ரூபாவும்...Agency காசும் மிச்சம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.