Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராவணன் ஏன் அசுரன்?

Featured Replies

SakthiVikadan-1.jpg

பிரம்மாவின் புத்திரர்களில் ஓருவரான புஸ்திய மகரிஷி, மேரு மலையில் தவம் செய்து வந்தார். அப்போது அங்கே வந்த தெய்வ நங்கையர்களது கூச்சலால் புலஸ்தியரின் தவத்துக்கு இடையூறு ஏற்பட்டது. கோபம் கொண்ட புலஸ்தியர், இங்கு வரும் கன்னிப் பெண்கள் கர்ப்பிணியாக கடவர் என்று சபித்தார். இதை அறிந்த பெண்கள் அந்த பகுதிக்கு வருவதையே தவிர்த்தனர்.

இந்த நிலையில் திரணபிந்து என்ற ராஜரிஷி யன் மகள் ஆவிற்பூ. முனிவரது சாபம் பற்றி அறியாமல், அவர் தவம் செய்யும் இடத்துக்கு வந்தாள். அவரை பார்த்த மறு நிமிடமே கர்ப்பமானாள். பின்னர். தன் மகளை ஏற்க வேண்டும் என்று திரணபிந்துவேண்டிக் கொள்ள அவளையே மணம் புரிந்தார் புலஸ்தியர்.

மனைவியின் நல்ல குணங்களால் மனம் மகிழ்ந்த புலஸ்தியர் நம் மகன் என்னை போலவே மகாதபஸ்வியாக இருப்பான் என்று ஆசிர்வதித்தார். அதன்படிபிறந்த விஸ்ரவஸ் மகரிஷியாக விளங்கினார். இவருக்கு தன் மகள் இளிபிளையை மணம் செய்து வைத்தார் பரத்வாஜ மகரிஷி. இவர்களுக்கு பிறந்தவளே குபேரன். இதனிடையே மகாவிஷ்ணுவால் இலங்கையில் இருந்து பாதாளத்துக்கு விரட்டப்பட்டனர். அசுரர்கள். இதனால் கலக்கமுற்ற அசுரர்களின் தலைவன் சுமாலி. இனி நம் குலம் சிறப்பது எவ்விதம்? என்று சிந்தித்தான். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாக தன் மகள் கைகசியை அழைத்தான். அவளிடம் விஸ்ரவஸ் என்பவர் மகா தபஸ்வி. பரத்வாஜ முனிவரின் மகளை மணந்து செல்வத்துக்கு அதிபதியான குபேரனை மகனாக பெற்றவர். அவரிடம் சென்று உன்னை மணந்து கொள்ளும்படி வேண்டிஎக்கொள் அவர் உன்னை மணந்தால், உனக்கும் குபேரன் போல சிறப்புள்ள மகன் பிறப்பான் என்ற சுமாலி இன்னொன்றையும் சொன்னான். நானே போய் என் மகளை திருமணம் செய்து கொள் என்று கேட்டாள் அசுரனின் மகளை நான் திருமணம் செய்வதா? முடியாது என்று மறுத்து விடுவார். எனவே நீ மட்டும் செல். தானே விருப்பத்துடன் வரும் கன்னிப் பெண்ணை மணம் புரிய மறுப்பது அதர்மம் என்ற தர்மசாஸ்திரத்தை அறிந்தவர் அவர். உன்னை நிச்சயம் ஏற்றுக்கொள்வார். நம் குலம் மீண்டும் தழைக்கும். என்றான் சுமாலி ஒரே மூச்சில். அதன்படி கைகசி, விஸ்ரவஸிடம் சென்று தனது விருப்பத்தை சொல்லி தங்கள் மூலம் எனக்கு குழந்தை வேண்டும். எனவே என்னை இப்போதே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றாள். அதற்கு விஸ்ரவஸ், இது நல்ல நேரம் அல்ல. நாம் இப்போது சேர்ந்தால் அசுரனே பிறப்பான் என்றார். கைகசியோ இப்போதே மணம் புரியுங்கள் என்று வற்புறுத்தினாள். கைகசியோ இப்போதே மணம் புரியுங்கள் என்று வற்புறுத்தினார்.

அதற்கு அவர் நமக்கு நான்கு குழந்தைகள் பிறப்பர். மூவர் அசுர குணங்களை கொண்டிருப்பர். இதில் ஒரு பெண்ணும் உண்டு. நான்காவது பிள்ளை தர்மாத்மாவாக இருப்பான் என்று ஆசீர்வதித்தார். அதன்படி விஸ்ரவஸுக்கும் கைகசிக்கும் பிறந்தவர்களே ராவணன். கும்பகர்ணன், சூர்பனகை, விபீஷணன். இதில் கடைசி மகனான விபீஷணன் தர்மாத்மாவாகவே வாழ்ந்தான் என்கிறது புராணம்.

எம்.கே.ராதாகிருஷ்ணன், சென்னை

தகவல்: யாழ் மெய்ப்பொருள் காண்போர் சங்கம்

நன்றி : http://dinamalar.com/2008apr05/sakthivigadan.asp#2

இந்த நிலையில் திரணபிந்து என்ற ராஜரிஷி யன் மகள் ஆவிற்பூ. முனிவரது சாபம் பற்றி அறியாமல், அவர் தவம் செய்யும் இடத்துக்கு வந்தாள். அவரை பார்த்த மறு நிமிடமே கர்ப்பமானாள். பின்னர். தன் மகளை ஏற்க வேண்டும் என்று திரணபிந்துவேண்டிக் கொள்ள அவளையே மணம் புரிந்தார் புலஸ்தியர்.

அந்தப் பெண் முனிவருடன் விரும்பி புணர்வு கொண்டதனாலோ அல்லது முனிவரால் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதாலோ கற்பமடைந்திருக்க வேண்டும். இதன் காரணமாகத்தான் முனிவரை கற்பமடைந்த அந்தப் பெண்ணிற்கு அவளின் தந்தை மணம் முடித்து வைத்தாரோ?

அதுசரி இந்த முனிவரின் யாகத்தை பெண்கள் குழப்பியிருந்தால் அவர்களின் அழகு கெட்டுவிடும், கை கால் ஊனமடையும் எண்டு சாபம் கொடுக்காமல் கற்பமாக்கும் சாபத்தை ஏன் கொடுத்தார்?

பெண்கள் முனவரின் இடத்திற்கு வந்தால் ........................................... கற்பமாக்கப்படுவர்.

அந்த இடைவெளியில் "வன்புணர்விற்கு உள்ளாக்கி" என்று போட்டுப்பார்த்தால் சரியாக இருக்கும்

Edited by மின்னல்

இரவிலை வெளியிலை போனா முனி அடிக்கிறது எண்டு கேள்விபட்டு இருக்கிறன்... அப்ப எல்லாம் நம்புறது இல்லை... இப்ப நம்புறன்.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.