Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே இலக்கு வைக்கப்பட்டது ஏன்?: கொழும்பு ஊடகம் வெளியிடும் தகவல்கள்

Featured Replies

சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொல்லப்பட்டது ஏன் என்று கொழும்பு ஆங்கில ஊடகமான "த மோர்னிங் லீடர்" ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொல்லப்பட்டது ஏன் என்று கொழும்பு ஆங்கில ஊடகமான "த மோர்னிங் லீடர்" ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

அடடா அப்படியா சங்கதி இலங்கை நாடாளுமன்ற அமைச்சர் பரிவாரத்துக்க்கு நாவூற்று பரிகாரத்துக்கு ஆன உபயோகத்துக்குத்தான் புள்ளே என்று நாம்நினைத்துக் கொண்டுள்ளோம் இந்த மோனிங் லீடர் ஏன் இப்படி புலம்புகிறது, தமிழ்த்தரப்பா, சிங்களத்தரப்பா? புள்ளேயின் உயிரை காவு கொண்டது என்ற வினாவுக்கே இன்னும் பதில் கிடைக்க வில்லை.

அப்படி தமிழத்தரப்புத்தான் செய்தாலும் அது புள்ளேயின் சாமர்த்தியத்துக்கு அதுவே சான்று ஆகாது, எதிரிவளர்க்கும் நாய்யில் இருந்து எல்லோரும் மரணபயத்துக் குள்ளேயே வாழவேண்டும் என்ற தகவலை வளங்குவதற்க்காகவே அந்த நன்றி உள்ள சீவன் உயிரைத்தொலைத்தது என்றுதான் கொள்ள வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே இலக்கு வைக்கப்பட்டது ஏன்?

சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொல்லப்பட்டது ஏன்? என்ற கேள்வி தற்போது கொழும்பு ஊடகங்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவை பல்வேறு தகவல்களையும் வெளியிட்டு வருகின்றன.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை தனது ஆளுமையின் காரணமாக மிகச் சுலபமாக பதிலளித்து அரசாங்கத்தையும், அமைச்சர்களையும் பாதுகாக்கும் பணிகளை அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மிகச் செம்மையாக முன்னெடுத்தார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் பலவிதமான கேள்விகளையும் பேச்சுத் திறனின் காணப்பட்ட ஆளுமையினால் கட்டுப்படுத்தினார்.

ஜெயராஜ் கெனீசியஸ் பெர்னாண்டோபுள்ளேயின் அரசியல் பயணம் மிக மெதுவானதாகவே காணப்பட்டது.

கட்டானைத் தேர்தல் தொகுதியின் ஊடாக தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. குறிப்பாக கட்டானைத் தேர்தல் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் பூரணக் கட்டுப்பாட்டில் காணப்பட்டதுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஜாம்பவான்களின் களமாகவும் காணப்பட்டது. எனவே அரசியல் பின்னணியற்ற ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கட்டானை தேர்தல் தொகுதியில் வெற்றிபெறுவது என்பது சிம்ம சொப்பனமாகவே கருதப்பட்டது.

எனினும், இவ்வாறான கடுமையான சவால்களை எதிர்கொண்டு படிப்படியாக அரசியலில் தனக்கு என ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே.

கம்பகாவில் தனது ஆளுமையைக் காண்பிப்பது மிகவும் சாவாலுக்கு உரியதாக காணப்பட்டது. எனினும், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டதன் மூலம் தனது மன உறுதியை அவர் வெளிப்படுத்தினார்.

மும்மொழியிலும் காணப்பட்ட புலமை, நகைச்சுவை உணர்வுடன் கூடிய பேச்சாற்றலின் ஊடாக அரசாங்கத்தின் கருத்துக்களை ஆழமாக சொல்லக்கூடிய திறமை ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயிடம் நிறையவே இருந்தது.

சட்டவிதிகளை நன்கு அறிந்து வைத்திருந்தார். தனது அறிவாற்றலால் எதிர்க்கட்சியினரின் வாதங்களை தவிடு பொடியாக்கிடும் வித்தையை பெற்றிருந்தார்.

தேவையேற்படும் போது சட்டவிதிகளை தனக்கு தேவையான வகையில் அர்த்தப்படுத்தி மிகச் சுலபமாக அரசாங்கத்தை காப்பாற்றி வந்தார்.

அரசாங்கத்தின் கொள்கைகள், தீர்மானங்கள் மற்றும் திட்டங்களுக்காக வாதிடுவதில் அரசாங்கத்தின் ஈடு இணையற்ற சொத்தாக ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே போற்றப்படுகின்றார்.

மணித்தியாலக் கணக்கில் எதிர்க்கட்சியின் கேள்விக் கணைகளுக்கு சற்றும் சளைக்காது பதிலளிப்பது என்பது சிக்கலான காரியமாகும். எனினும், ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேக்கு இதுவொரு பொழுது போக்காகவே காணப்பட்டது,

சிலருக்கு ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் பேச்சாற்றாலும், ஆளுமையும் தலைவலியை ஏற்படுத்தியது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் வலுவான வாதத்திறன் அரசாங்கத்தின் மிக முக்கியமானதொரு சொத்தாக மதிக்கப்பட்டது. தனது அமைச்சரவை சகாக்களின் பல்வேறு மோசடிகள், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு மிகச் சுலபமாக பதிலளித்து அந்தக் குற்றச்சாட்டுகளை வலுவிழக்கச் செய்வதில் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே விற்பன்னராக திகழ்ந்தார்.

ஆக்ரோசமான வாதங்களில் ஈடுபடும் சில அமைச்சர்களுக்கு அதியுச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் ஏகோபித்த கருத்தாக அமைந்திருந்தது.

கிழக்குத் தேர்தலின் முதல் முடிவு

எனினும், கடந்த 6 ஆம் நாள் வெலிவெரியா மரதன் போட்டிப் போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேக்கு மிகவும் பலவீனமான பாதுகாப்பு ஏற்பாடுகளே மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேக்கு மிக உச்ச அளவிலான உயிர் அச்சுறுத்தல் காணப்பட்டது.

தேச நிர்மாண கட்டமைப்புத்துறை அமைச்சர் டி.எம். தசநாயக்க மீதான தாக்குதலின் இலக்கு ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் கிழக்குத் தேர்தலின் முதலாவது முடிவாக கருதப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மிக முக்கிய இலக்காக ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே காணப்பட்டார்.

பல்லின மக்கள் வாழும் திகாமடுல்ல மாவட்டத்தில் எதிர்வரும் வாரம் வாக்கு வேட்டையில் ஈடுபட அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உத்தேசித்திருந்தார்.

2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச பதவியேற்றதனைத் தொடர்ந்து இரண்டு முக்கிய பொறுப்புக்கள் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயிடம் ஒப்படைக்கப்பட்டது.

முதலாவது, பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். அரசாங்கத்தின் பிரதான திட்டங்களில் ஒன்றான "மக நகும" இவரது அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

இரண்டாவது பொறுப்பாக அரசாங்கத்தின் பிரதம கொறடா பதவி வழங்கப்பட்டது. இந்தப் பதவியில் அவர் விற்பன்னராக திகழ்ந்தார்.

2006 ஆம் ஆண்டு ஜெனீவாப் பேச்சுவார்த்தைகளின் அரசாங்கப் பிரதிநிதியாக செயற்பட்டார்.

சிறிலங்கா- இந்திய நாடாளுமன்ற கூட்டமைப்பின் தலைவராக ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே பதவி வகித்தார்.

மேலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளராகவும் செயற்பட்டார்.

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் மறைவு சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், அரசாங்கத்திற்கும் மிகப்பாரிய இழப்பாக அமைந்துள்ளது.

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அனைத்து வலிகளையும் தாங்கிக்கொண்டு அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை சரி என வாதிட்டு போராடினார் எனக்கூறின் அது பிழை என்று ஆகாது.

மரதன் ஓட்டப் போட்டி மைதானத்தில் நடந்தது என்ன?

மரதன் ஓட்டப் போட்டி நடைபெறும் வெலிவெரிய காந்தி மைதானத்திற்கு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே காலை 6:30 மணியளவில் வருகை தந்தார்.

அப்போது மெய்வல்லுநர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அமைச்சர் தனியாகவே காணப்பட்டார்.

போட்டி ஆரம்பிக்க தாமதித்ததன் காரணமாக அவர் கட்டுபெத்தவிற்குச் சென்றுவிட்டு ஒரு மணித்தியாலம் கழித்து மீண்டும் மைதானத்திற்கு வருகை தந்தார். தேசிய மெய்வல்லுநர் பயிற்றுநர் லக்ஸ்மன் டி அல்விஸ் மற்றும் தேசிய மரதன் சம்பியன் கே.ஏ.கருணாரட்ன ஆகியோர் அமைச்சருக்கு அருகாமையில் காணப்பட்டனர்.

ஓட்டப் பந்தய வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைச்சர் சிறிய உரையை நிகழ்த்தினார். விழா மேடையிலிருந்து லக்ஸ்மன் டி அல்விசினால் அமைச்சர் மரதன் ஓட்டப் போட்டி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

போட்டி தொடங்குவதற்கான சமிக்ஞை கொடியசைத்து காட்டுவதற்காக அமைச்சர் மரதன் ஓட்டப் போட்டி ஆரம்பமாகும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

பாதையைக் கடந்து கொடியை அசைத்த போது அமைச்சருக்கு அருகாமையில் ஏதொவொரு சம்பவம் இடம்பெற்றது. சில நொடிகளில் அமைச்சரின் உடல் சிதறிய நிலையில் 25 அடிக்கு அப்பால் காணப்பட்டது.

லக்ஸ்மன் டி அல்விஸ், கே.ஏ.கருணாரட்ன மற்றும் அமைச்சரின் இரண்டு பாதுகாப்பு அலுவலர்கள் குண்டு வெடிப்புச் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டனர்.

தமிழ் - சிங்களப் புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியது.

அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான இலக்காக காணப்பட்டார். உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் பத்து இலக்குகளில் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே முக்கியமானவராக காணப்பட்டதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசநிர்மாண கட்டமைப்புத்துறை அமைச்சர் டி.எம்.தசநாயக்க கிளைமோர்த் தாக்குதலுக்கு இலக்காகி பலியானதைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே சில வாரங்களுக்கு வெளிநாடு சென்றிருந்தார்.

சிறிலங்கா காவல்துறை மா அதிபரினால் பலமுறை பெர்னாண்டோபுள்ளேக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இருவர் அண்மையில் கட்டானை சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர்.

கிழக்குத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது அமைச்சருக்கு பாரிய அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன.

எனினும், அரசாங்கத்தின் திகாமடுல்ல மாவட்ட தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது.

எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படாத இந்த நிகழ்விற்கு ஏன் அமைச்சர் கலந்து கொண்டார்? அமைச்சரவை அமைச்சராகவும், அடுத்த பிரதமர் பதவிக்கான சில பெயர்களில் ஒருவருமான அமைச்சர் ஏன் இவ்வாறு பாதுகாப்பற்ற நிலையில் நடந்துகொண்டார்.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக வெலிவெரிய காவல்துறையினரின் பொறுப்பு மிகவும் அதிர்ச்சியளிக்கின்றது.

இந்த மக்கள் நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு மைதானத்திற்கு வந்த எவரையும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.

ஓட்டப் பந்தய வீரர்கள் அனைவரும் நேர்மையான பங்கேற்பாளர்கள் என்றால் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மரதன் ஓட்டப் பந்தய வீரர் ஒருவரே தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டாரானால் அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்க முடியும்.

ஆரம்ப கட்ட உடற்சோதனை நடத்தப்பட்டிருந்தால் எவ்வாறு அமைச்சருக்கு அருகாமையில் குண்டுதாரி வந்திருக்க முடியும் என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

அமைச்சருக்கு அருகாமையில் பொதுமக்களும், மரதன் ஓட்டப் பந்தய வீரர்களும் நின்றுகொண்டிருந்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சவின் பாரியாரின் தாயார் காலமானபோது மூன்று சோதனைச் சாவடிகளின் மூலம் இறுதி வணக்கம் செலுத்த வருவோர் சோதனையிடப்பட்டனர்.

எனினும், மிகப்பாரிய அச்சுறுத்தல்கள நிலவும் அமைச்சர் ஒருவர் பங்கேற்கும் நிகழ்விற்கு குறைந்தபட்சம் குண்டுகளை கண்டுபிடிக்கக்கூடிய ஒரு கருவியேனும் கொண்டுவரப்பட்டிருக்கவில்லை.

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறை மா அதிபர் விளக்கமளிக்க வேண்டும்.

வழமை போன்று பக்கச்சார்பற்ற விரைவான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுவதனை விடுத்து இந்த விடயம் தொடர்பாக பொறுப்புடன் விளக்கம் அளிக்க வேண்டும்.

அமைச்சர் பாதுகாப்புப் படை மற்றும் வெலிவேரிய காவல்துறையினரும் இந்த விடயம் குறித்து விளக்கமளிக்க வேண்டும்.

எவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறையேற்பட்டது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளமை நோக்கத்தக்க விடயங்களே.

sankathi.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.