Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளின் அழுத்தத்தினால் திருச்சொரூபம் அகற்றப்படவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் அழுத்தத்தினால் திருச்சொரூபம் அகற்றப்படவில்லை – கத்தோலிக்க ஆயர்கள் பேரவை

[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2008, 09:45.56 AM GMT +05:30 ]

தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தங் காரணமாக மருமடு மாதா திருச்சொரூபம் அகற்றப்பட்டதாகக் கூறப்படும் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானதென கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது.

தேவன்பிட்டி தேவாலயத்திற்கு அருகாமையில் கிறிஸ்தவ மக்கள் வசிப்பதால் மருதமடு திருச் சொரூபத்தை அந்த பிரதேசத்திற்கு எடுத்துச் சென்றதாக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது.மன்னார் மாவட்டத்தின் யுத்த சூன்ய பிரதேசங்களில் உள்ள ஏனைய அனைத்து பங்குப் பிரதேசங்களும் தற்போது சனநடமாட்டமற்ற பிரதேசமாக மாறியுள்ளதாக அந்தப் பேரவை குறிப்பிட்டுள்ளது.மருதமடு திருச் சொரூபத்தை தேவன்பிட்டி தேவாலயத்திற்கு எடுத்துச் சென்றமை தொடர்பாக சில ஊடகங்கள் பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது........

.

மன்னார் பேராயரின் அனுமதியுடன் மருதமடு தேவாலயத்திற்கு மிகவும் அருகாமையில் உள்ள தேவன்பிட்டி தேவாலயத்திற்கு திருச்சொரூபம் எடுத்துச் செல்லப்பட்டது. சில ஊடகங்கள் மிகவும் மோசமான முறையில் வெளியிட்டுவரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தங் காரணமாகவே மாதாவின் திருச் சொரூபம் விடுவிக்கப்படாத பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படும் கருத்தை முற்றாக நிராகரிக்கின்றோம்.1982ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி 185ம் இலக்க அரச வர்த்தமாணியின் மூலம் மடு தேவாலயப் பிரதேசம் புனித பூமியமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் மூலம் தேவாலயத்தை அண்டிய முகாம்களும் புனித பூமியாகவே கருதப்படும்.

இந்த புனித பூமியும் அதனை அண்டிய பிரதேசமும் விடுவிக்கப்படாத பிரதேசமாக கருதப்படுகிறது. தற்போது திருச்சொரூபம் காணப்படும் பிரதேசமும் விடுவிக்கப்படாத விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமேயாகும். மிக புனித பூமியாக போற்றப்பட்ட மடு பிரதேசம் தற்போது அரசாங்கப் படையினரும் விடுதலைப் புலிகளும் மோதிக்கொள்ளும் யுத்த களமாக மாறியுள்ளது.

பிரதேசத்தில் யுத்த நடவடிக்கைகள் அதிகரித்தமையின் காரணமாக மடு தேவாலயத்திற்கு மாத்திரமன்றி அண்டிய பிரதேசங்கள் மற்றும் மதகுருமாரின் இருப்பிடங்களுக்கும் ஸெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இந்த நிலைமைகள் அண்மைக்காலத்தில் மிகவும் உக்கிரமடைந்ததுடன்ää தேவாலயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்தரிகள் அருட் சகோதாரர்கள் மற்றும் ஆயர்கள் பதுங்கு குழிகளில் மறைந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் தேவாலயத்தில் அருட்சேவை புரிந்த அனைவரும் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

தேவன்பிட்டி பிரதேசத்தில் கிறிஸ்தவ மக்கள் செறிந்து காணப்படுவதால் திருச்சொரூபம் அங்கு கொண்டு செல்லப்பட்டது. மடு தேவாலயத்தை அண்டிய ஏனைய அனைத்து பங்குகளும் தற்போது சன நடமாட்ட பிரதேசமாக மாறியுள்ளது. பாதுகாப்பு தொடர்பாக உறுதியளிக்கப்பட்டவுடன் மீண்டும் திருச்சொரூபம் மடு தேவாலயத்திற்கு கொண்டுவரப்படும்.

விசேடமாக அநீதியான அர்த்தப்படுதல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அவசரமாக எடுக்கப்பட்ட முடிவிற்கு பிழையான கருதுகோள்களைக் கொண்டு உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட வேண்டாம்.மேற்குறிப்பிட்ட தகவல்களின் மூலம் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக பூரண விளக்கம் கிடைக்கப்பெற்றிருக்கும் என அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamilwin.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.