Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

( இணைப்பு-4)நர்கீஸ் சூறாவளி தாக்கியதில் பர்மாவில் 22000 பேர் பலி(வீடியோ இணைப்பு)!!!!!!!!!!

Featured Replies

பர்மாவில் சூறாவளியில் பலியானவர்களின் எண்ணிக்கை 22,000 ஆக உயர்வு

பர்மாவில் கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்ட சூறாவளித் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22,000 ஆக உயர்ந்துள்ளது என பர்மிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 40, 000 பேருக்கும் அதிகமானவர்களை காணவில்லை எனவும் அரசு ஊடகம் கூறுகிறது.

இந்தக் கடும் சூறாவளியின் காரணத்தால் நகரத்தை நோக்கி பாய்ந்த நீர்மட்டத்தின் அளவு மிக அதிகமாக இருந்ததாலேயே, பெருமளவிலான மக்கள் மரணமடைய நேர்ந்தது என்று ஆளும் இராணுவ அரசின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொகாலே நகரத்தில் இருந்த 95 சதவீத வீடுகள் அழிந்து விட்டதாகவும், நகரின் 1,90,000 மக்கட்தொகையில் பெரும்பாலானவர்கள் தங்கும் வசதியற்ற நிலையில் இருப்பதாகவும் அரசு கூறுகிறது.

சூறாவளி தாக்கிய பகுதிகளை பார்பதற்கே அச்சமாக இருப்பதாகவும், நெல் வயல்கள் முழுவதும் சடலங்கள் நிரம்பிக் காணப்படுவதாகவும், உயிர் தப்பியவர்கள் உணவுக்காகவும் உறைவிடத்துக்ககாவும் தவிப்பதையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது என்றும் வெளிநாட்டு உதவி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

மிகப் பெரிய அளவிலான மீட்புப் பணிகள் என்று எதிர்பார்க்கப்படும் பணிகளை பர்மாவில் உதவி நிறுவனங்கள் ஆரம்பித்துள்ளன.

உதவிப் பணிகளில் சிக்கல்

பர்மாவில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்கு வெளிநாட்டு உதவி அமைப்புகள் செல்வதற்கு அனுமதிக்க நாட்டின் இராணுவ அரசு தயங்குகிறது என்று ஐ.நாவின் பர்மாவுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளுகான ஒருங்கிணைப்பாளரான கிறிஸ் கே, கூறியுள்ளார்.

எனினும் நிலைமை மாறும் என்று அரசு அதிகாரிகள் ஒப்புக் கொண்டதாகவும் ஐ.நாவின் அதிகாரி கூறுகிறார்.

இருந்தபோதிலும், அண்டை நாடான தாய்லாந்தில் இருக்கும் ஐ.நா அலுவலர்கள் அவசர உதவியாளர்கள் பர்மா செல்வதற்கான விசாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.

நாட்டின் புதிய அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொள்வது குறித்து எதிர்வரும் சனிக்கிழமையன்று நடைபெறவுள்ள வாக்கெடுப்புக்கு முன்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டு உதவி அமைப்புக்களைச் சேர்ந்தவர்களை செல்வதை அரசு விரும்பவில்லை என்றும் அவர்களை அனுப்புவது குறித்து அரசாங்கம் சந்தேகப் பார்வையே கொண்டுள்ளது என்றும் பர்மிய ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

நாட்டில் சூறாவளியால் பெருத்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கும் நிலையிலும், பாதிக்கப்பட்ட இடங்களில் வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டாலும், மற்ற இடங்களில் இந்த வாக்கெடுப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என பர்மிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீடியோ பார்க்க........................

http://isooryavidz.blogspot.com/2008/05/my...oll-climbs.html

http://isooryavidz.blogspot.com/2008/05/cy...es-myanmar.html

Edited by isoorya

  • கருத்துக்கள உறவுகள்

மியன்மாரில் சூறாவளியில் பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 பேராக உயர்வு

வீரகேசரி இணையம் 5/6/2008 8:23:24 AM -

மியன்மாரைத் தாக்கிய "நர்கிஸ்' சூறாவளி காரணமாக இறந்தவர்களின் தொகை சுமார் 10,000 பேராக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க ஊடகம் அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் இச்சூறாவளி காரணமாக 10,000 பேர் இறந்துள்ளதாகவும் ஊடகம் தெரிவிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமியால் பாதிக்கப்பட்ட போது அமெரிக்கா கப்பல் கொண்டு புறப்பட்டது உலகமெங்கும். ஏனெனில் அதில் மனிதாபிமான உதவிக்கு முன்னால் அதன் பிராந்திய செல்வாக்கு முன்னின்றது. ஏன் இப்போ இந்த மக்களுக்கு உதவ பிந்னிற்கிறது.

இம்மக்களுக்கு உதவ விரும்புபவர்கள்.. ஒக்ஸ்பாம் போன்ற நிறுவனங்களின் மூலம் உதவலாம்..! :mellow:

  • தொடங்கியவர்

(வீடியோ இணைப்பு --3)

மியான்மரில் நர்கீஸ் புயலுக்கு 10,000 பேர் பலி

யாங்கூன்: மியான்மரைத் தாக்கிய நர்கீஸ் புயலுக்கு 10,000 பேர் பலியாகியுள்ளனர். 3000 பேரை காணவில்லை என்று அந்நாடு தெரிவித்துள்ளது. நிவாரண பணிகளில் ஐ.நா.வும் களம் இறங்கியுள்ளது.

தமிழகத்தை அச்சுறுத்தி வந்த நர்கீஸ் புயல் கடந்த 3ம் தேதி மியான்மரைத் தாக்கியது. தலைநகர் யாங்கூன் மற்றும் அருகில் உள்ள தீவுகளில் மணிக்கு 190 கி.மீ. வேகத்தில் கோர தாண்டவம் ஆடியது.

புயல் கடுமையாக தாக்கியதில் யாங்கூன் மற்றும் இர்ரவாடி டெல்டா பகுதிகள் பயங்கர சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமானது. மரங்கள் வேரோடு சாயந்தன. மின்கம்பங்களும் பெயர்ந்து விழுந்தன. இதில் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.

சேதமடைந்த பகுதிகளில் ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முதலில் வெளியான தகவலில் புயலுக்கு யாங்கூனில் 100 பேர் உயிரிழந்துள்ளனர். இர்ரவட்டி பகுதியில் இடத்தில் 200 பேர் இறந்ததாக கூறப்பட்டது.

இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள் அகற்ற அகற்ற வந்து கொண்டே இருக்கின்றன. இதனால் சாவு எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3,600 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கி 6000 பேர் பலியாகிவிட்டதாக அந்நாட்டு தூதரக அதிகாரி ஒருவர் பாங்காக்கில் தெரிவித்தார்.

மொத்தம் 10,000க்கும் அதிகமானோர் பலியாகி இருக்கலாம் என்று அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. புயலில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

புயலில் சிக்குண்ட யாங்கூன் மற்றும் இர்ரவாடி பகுதியில் 3000 பேரை காணவில்லை. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகளில் ஈடுபட்ட ராணுவத்தினர், இடிபாடுகளில் சிக்கியிருந்த 2,129 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த புயல் தாக்கத்தின் காரணமாக யாங்கூன் மற்றும் இர்ரவாடி பகுதிகளில் குடிநீர் விநியோகம் அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. வீடுகள் தரைமட்டமானதால் ஆயிரக்கணக்கானோர் தங்குவதற்கு இடமில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

கரம் கொடுக்கும் இந்தியா

கடந்த 45 ஆண்டுகளாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது தற்போது புயலால் பாதிக்கப்பட்ட அந்நாட்டுக்கு மேற்கத்திய நாடுகள் எந்த நிவாரண உதவியையும் செய்ய முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்திய அரசு போர்ட் பிளேரில் இருந்து 2 கப்பல்கள் மூலம் உணவு, உடை, போர்வைகள், டென்ட்கள், மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளது. பாதித்த மக்களின் மறுவாழ்வுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. செஞ்சிலுவை சங்கமும் நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் புயலில் சிக்கியுள்ள அந்நாட்டு மக்களுக்கு உதவ ஐநா சபை முன்வந்துள்ளது. தனியார் தொண்டு நிறுவனங்களும் உதவிகரம் நீட்டியுள்ளன. ஆனால் நிவாரண பணிகள் மேற்கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புயல் தாக்குதலில் பெரும்பாலான பகுதிகளில் மின் சப்ளை, எரிபொருள், உணவு, தண்ணீர் சப்ளை இல்லை. தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் நிவாரண உதவிகளை ஐநா வழங்கி வருகிறது. நிவாரண குழு உடனடி மற்றும் நீண்ட கால தேவைகள் அடிப்படையில் உதவிகளை செய்து வருகின்றன.

இதுகுறித்து ஐநா பொது செயலாளர் பான்கிமூன் மியான்மருக்கான ஐநா தூதர் கியைவ் டின்ட்ஸ்வேயுடன் நேற்று பேசினார். நிவாரண பணிகளில் இணைந்து செயலாற்றுவது மற்றும் தொடர்பு கொள்வது குறித்து விரிவாக பேசினார்.

வீடியோ இணைப்பு.............................

http://isoorya.blogspot.com/2008/05/10000-videoannex.html

  • கருத்துக்கள உறவுகள்

15000 க்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதாக வானொலி செய்திகள் கூறுகின்றன.

மீண்டும் ஒரு அவலம்.

இலங்கைக்கும் பர்மாவுக்கும் அரிசி வியாபாரம் உண்டாமே. நெடுக்ஸ் இதை பற்றி விபரங்கள் தெரியுமா?

  • தொடங்கியவர்

பர்மாவில் சூறாவளியில் பலியானவர்களின் எண்ணிக்கை 22,000 ஆக உயர்வு

பர்மாவில் கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்ட சூறாவளித் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22,000 ஆக உயர்ந்துள்ளது என பர்மிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 40, 000 பேருக்கும் அதிகமானவர்களை காணவில்லை எனவும் அரசு ஊடகம் கூறுகிறது.

இந்தக் கடும் சூறாவளியின் காரணத்தால் நகரத்தை நோக்கி பாய்ந்த நீர்மட்டத்தின் அளவு மிக அதிகமாக இருந்ததாலேயே, பெருமளவிலான மக்கள் மரணமடைய நேர்ந்தது என்று ஆளும் இராணுவ அரசின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொகாலே நகரத்தில் இருந்த 95 சதவீத வீடுகள் அழிந்து விட்டதாகவும், நகரின் 1,90,000 மக்கட்தொகையில் பெரும்பாலானவர்கள் தங்கும் வசதியற்ற நிலையில் இருப்பதாகவும் அரசு கூறுகிறது.

சூறாவளி தாக்கிய பகுதிகளை பார்பதற்கே அச்சமாக இருப்பதாகவும், நெல் வயல்கள் முழுவதும் சடலங்கள் நிரம்பிக் காணப்படுவதாகவும், உயிர் தப்பியவர்கள் உணவுக்காகவும் உறைவிடத்துக்ககாவும் தவிப்பதையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது என்றும் வெளிநாட்டு உதவி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

மிகப் பெரிய அளவிலான மீட்புப் பணிகள் என்று எதிர்பார்க்கப்படும் பணிகளை பர்மாவில் உதவி நிறுவனங்கள் ஆரம்பித்துள்ளன.

உதவிப் பணிகளில் சிக்கல்

பர்மாவில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்கு வெளிநாட்டு உதவி அமைப்புகள் செல்வதற்கு அனுமதிக்க நாட்டின் இராணுவ அரசு தயங்குகிறது என்று ஐ.நாவின் பர்மாவுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளுகான ஒருங்கிணைப்பாளரான கிறிஸ் கே, கூறியுள்ளார்.

எனினும் நிலைமை மாறும் என்று அரசு அதிகாரிகள் ஒப்புக் கொண்டதாகவும் ஐ.நாவின் அதிகாரி கூறுகிறார்.

இருந்தபோதிலும், அண்டை நாடான தாய்லாந்தில் இருக்கும் ஐ.நா அலுவலர்கள் அவசர உதவியாளர்கள் பர்மா செல்வதற்கான விசாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.

நாட்டின் புதிய அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொள்வது குறித்து எதிர்வரும் சனிக்கிழமையன்று நடைபெறவுள்ள வாக்கெடுப்புக்கு முன்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டு உதவி அமைப்புக்களைச் சேர்ந்தவர்களை செல்வதை அரசு விரும்பவில்லை என்றும் அவர்களை அனுப்புவது குறித்து அரசாங்கம் சந்தேகப் பார்வையே கொண்டுள்ளது என்றும் பர்மிய ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

நாட்டில் சூறாவளியால் பெருத்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கும் நிலையிலும், பாதிக்கப்பட்ட இடங்களில் வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டாலும், மற்ற இடங்களில் இந்த வாக்கெடுப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என பர்மிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://isoorya.blogspot.com/

மீண்டும் ஒரு அவலம்.

இலங்கைக்கும் பர்மாவுக்கும் அரிசி வியாபாரம் உண்டாமே. நெடுக்ஸ் இதை பற்றி விபரங்கள் தெரியுமா?

தூய்ஸ் இப்ப இது தேவையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த வாரம் மியான்மரை தாக்கிய நர்கீஸ் புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.

தமிழகத்தை அச்சுறுத்திய நர்கீஸ் புயல் திசைமாறி கடந்த 3ம் தேதி மியான்மரை மணிக்கு 190 கி.மீ. வேகத்தில் பயங்கரமாகத் தாக்கியது. தலைநகர் யாங்கூன் மற்றும் அருகில் உள்ள தீவுகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. அந்நாட்டு நெற்களஞ்சியமான இர்ரவாடி டெல்டா பகுதிகள சின்னாபின்னமாகின. பொகாலே என்ற நகரமே அடியோடு அழிந்துபோனது.

முதலில் 4000மாக இருந்த இறந்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தற்போது 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதவிர, காணாமல் போன 40,000ம் பேரின் கதி என்னாயிற்று என்று தெரியவில்லை.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு மற்றும் குடிநீர் வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்குள் மீட்பு குழுவினரால் செல்ல முடியவில்லை.

இந்நிலையில் மியான்மர் நாட்டுக்கு உதவ பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன. பிளாஸ்டிக் ஷீட்கள், தண்ணீரை சுத்தமாக்கும் மருந்துகள், சமையல் கருவிகள், கொசு வலைகள், சுகாதார கருவிகள், உணவு, மருந்து, போர்வைகள், உடைகள் போன்ற அத்யாவசிய பொருட்கள் அதிகளவில் தேவைப்படுவதாக யாங்கூனில் உள்ள ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தியா நிவாரணம்:

இந்நிலையில், 'ஆபரேஷன் சஹாயத்' என்ற பெயரில் மியான்மருக்கு மீட்பு உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது. மக்கள் தங்குவதற்கான கூடாரங்கள், உணவு மற்றும் மருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு ஐஎன்எஸ் ராணா, கிர்பான் ஆகிய இந்திய போர்க் கப்பல்கள் மியான்மர் தலைநகர் யாங்கூனை சென்றடைந்தன.

இதுதவிர மேலும் 2 விமானப்படை சரக்கு விமானங்களில் கூடுதல் மருந்து மற்றும் உணவுப் பொருள்கள் அடங்கிய நிவாரணப்பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

தொடர்ந்து நிவாரணப் பொருள்களை விமானங்கள் மூலம் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மும்முரமாகச் செய்து வருகின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.