Jump to content

மதிமுக-15: வைகோவுக்கு ஜெயலலிதா வாழ்த்து!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னை: மதிமுகவின் 15வது ஆண்டு விழாவையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:

கால ஓட்டத்தில் நிகழும் பல்வேறு மாற்றங்களில் கரைந்து போகாமலும், சுய முகத்தை இழக்காமலும், தான் சார்ந்திருக்கும் தமிழ் சமூகத்தை புத்துருவாக்கம் செய்யும் பணியில் மதிமுக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைந்தது. 15ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

மதிமுகவை இரும்புக் கோட்டையாக நிர்மாணிப்பதற்கான லட்சியப் பயணத்தில் ஏற்படும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி, துரோகங்களை தூள் தூளாக்கி, நிகழ்கால கோளாறுகளை சரி செய்து, எதிர்கால வரலாற்றை உருவாக்குவதில் அதன் பொதுச்செயலாளராகிய தங்களது பணி அளப்பரியது.

தங்களது பயணத்தில் அதிகார வர்க்கம் போடும் பரமபத அரசியல் சித்து விளையாட்டுகளை முறியடித்து வெற்றிச் சங்கொலி திக்கெட்டும் முழங்க, தங்களுக்கும் மதிமுகவிற்கும் எனது இதயப்பூர்வமான நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

thatstamil.com

Link to comment
Share on other sites

தங்களது பயணத்தில் அதிகார வர்க்கம் போடும் பரமபத அரசியல் சித்து விளையாட்டுகளை முறியடித்து வெற்றிச் சங்கொலி திக்கெட்டும் முழங்க, தங்களுக்கும் மதிமுகவிற்கும் எனது இதயப்பூர்வமான நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

thatstamil.com

வைகோவை பிடித்து ஓராண்டு சிறையில் தள்ளிய ஜெயலலிதா இந்த வாசகங்களை கூறியிருப்பது வைகோவை கேலி செய்ய சொல்லப்பட்டது போலிருக்கிறது :)

Link to comment
Share on other sites

இவங்க நல்ல நடிகை தான். இல்லையா?

Link to comment
Share on other sites

இவங்க நல்ல நடிகை தான். இல்லையா?

ம்ம்ம்... நல்ல நடிப்பாற்றல் கொண்டவர் என்று சொல்லமுடியாது, அழகான நடிகை. என் தந்தை சாகும்வரை ஜெயலலிதா ரசிகராக இருந்தார்.

Link to comment
Share on other sites

ம்ம்ம்... நல்ல நடிப்பாற்றல் கொண்டவர் என்று சொல்லமுடியாது, அழகான நடிகை. என் தந்தை சாகும்வரை ஜெயலலிதா ரசிகராக இருந்தார்.

அது திரைப்படத்தில் தானே லக்கிண்ணா.

இயற்கையில் நன்றாகத்தானே நடிக்கிறார்? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப சரியா ஊதிப்போயிற்றா. பத்தாததுக்கு குண்டு துளைக்காத - புல்லட் புரூவ் உடுப்பையும் போட்டுப் பூதம் மாதிரியிருக்கிறா. ஒரு காலத்தில நல்ல வடிவுதான் மறுக்க ஏலாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு சினிமாவில் நடிப்பு வரும் என்று சொல்லமுடியாது

வெளியிலும் நடிக்கவரும்என்று சொல்லமுடியாது

ஏனெனில் இவர் ஆத்திரத்தில் எல்லாவறறையும் மறப்பவர்

ஆனால் இவருக்கு ஒன்று மட்டும் நன்றாக வரும்

அது....அது.....

?வண்டாம்???????

வேண்டாம்????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.