Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனித உரிமைகளைப் பாதுகாக்க இலங்கை தவறிவிட்டது !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைகளைப் பாதுகாக்க இலங்கை தவறிவிட்டது

08.05.2008 நிருபர் எல்லாளன்

சிறிலங்காவில் அதிகரித்திருக்கும் மனிதஉரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியை காப்பாற்ற தவறியிருப்பதால் சிறிலங்கா ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை நாடுகள் ஆதரவு வழங்கக்கூடாது என சர்வதேச மற்றும் உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.

ஐ.நா.மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை கொண்டிருக்கும் உறுப்புரிமையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இந்நிலையில் சிறிலங்காவிற்கு ஆதரவு வழங்கவேண்டாமெனக் கோரி 21 அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து ஐ.நா உறுப்பு நாடுகளுக்குக் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளன.

கடந்த இரண்டு வருடங்களாக சிறிலங்கா அரசபடைகள் தொடர்ச்சியான படுகொலைகளையும்இ கைதுகளையும் காணமல்போதல் போன்ற மனிதஉரிமை மீறல்சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாகவும் ஐ.நா.அதிகாரிகள் மனிதஉரிமை மீறல்களைத் தடுப்பதற்கு முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் தடைகளை ஏற்பத்தியதாகவும் மனிதஉரிமை கலந்துரையாடக்கூட சிறிலங்கா விரும்பவில்லையெனவும் அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து அனுப்பியிருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதஉரிமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு சர்வதேச அதிகாரிகள் சிறிலங்காவிற்குச் சென்றால் அவர்களை தனிப்பட்ட ரீதியில் சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் தாக்கிப்பேசுகின்றனர் எனவும் நல்லெண்ணத்துடன் முன்வைக்கப்படும் பிரேரணைகளை சிறிலங்கா அதிகாரிகள் கவனத்தில் கொள்ளாமல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதஉரிமை விடயங்களை மேம்படுத்துவதைவிட சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்படும் மனிதஉரிமைமீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து மனிதஉரிமை ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகள் கேள்விகளை எழுப்பவேண்டுமென அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.

மனிதஉரிமைச் சட்டங்களை மதிக்கும் நாடுகளுக்கு மாத்திரம் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளாகும் சந்தர்ப்பத்தை வழங்குமாறு அந்த அரசார்பற்ற நிறுவனங்கள் ஐ.நா.உறுப்புநாடுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளன.

நன்றி

சங்கவி

Edited by Valvai Mainthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.