Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகசீன் தமிழ் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டனரா?

Featured Replies

கொழும்பு மெகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 68 தமிழ் அரசியல் கைதிகள் காலி பூஸாவுக்கும், மஹர சிறைச்சாலைக்கும் இடமாற்றப்பட்டுள்ளார்கள். கடந்த இரண்டு நாட்களில் மிகவும் இரகசியமான முறையில்.................

தொடர்ந்து வாசிக்க..........................

http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6077.html

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன புதுக்கதை. இலங்கை அரசு அப்படி செய்யுமோ? மனிதாபிமானத்திற்கு உதாரணமாக உள்ள சிங்கள அரசு இப்படி செய்யுமா? :rolleyes:

வெலிக்கடைச் சிறையில் இருந்து 68 தமிழ்க் கைதிகள் பூஸாவுக்கு! அங்கு கடும் சித்திரவதைக்கு உள்ளாகினர்

வெலிக்கடை நியூ மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அறுபத்தியெட்டு தமிழ் அரசியல் கைதி கள் கைவிலங்கிடப்பட்ட நிலையில் சனிக் கிழமை நள்ளிரவு பூஸா தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் அங்கு அவர் கள் நிர்வாணமாக்கப்பட்டு அவர்களில் சிலர் கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நீதிமன்ற விசாரணைக்காகக் காத்திருப்பவர்கள்இ சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உட்படப் பெருமளவு தமிழ் அரசியல் கைதிகள் சனிக்கிழமை 8.50 மணியளவில் வெலிக்கடை நியூ மகஸின் சிறைச்சாலையிலிருந்து கைவிலங்கிடப்பட்ட நிலையில் பூஸா தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பூஸா தடுப்பு முகாமில் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்ட இவர்களில் பலர் அங்கு வைத்துக் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதுடன் மோசமான சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது. இவர்களில் முதியவர்களும் நோய்வாய்ப்பட்ட சிலரும் உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பூஸா முகாமிற்கு இடம்மாற்றப்பட்டுள்ள தமிழ் கைதிகளுக்கு உடனடியாக உணவு எதுவும் வழங்கப்படவில்லையென்றும்இ அவர்களை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்போவதில்லை என அதிகாரிகள் அச்சுறுத்தியுள்ளனர் எனவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தகைய மோசமான நிலைமை குறித்துத் தாம் கேள்விப்பட்டுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன் இவ்விடயம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தாம் விவரங்களை அறிய முயற்சித்து வருகின்றார் என்றும் தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான என். ஸ்ரீகாந்தா நேற்று நீதி அமைச்சர் டிலான் பெரேராவுடன் பேச்சு நடத்தினார்.

இந்தக் கைதிகளை மீளவும் வெலிக்கடை நியூமகஸின் சிறைச்சாலைக்குக் கொண்டு வரச் செய்வதற்காகப் பல அதிகாரிகளுடனும் அவர் நேற்றுத் தொடர்பாடல்களில் ஈடுபட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி : உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.