Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடும்பத்தில் உங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகின்றதா?காட்டப்பட்டதா?

உங்களின் குடும்பத்தில் உங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகின்றதா?காட்டப்பட்டதா? 15 members have voted

  1. 1. உங்களின் குடும்பத்தில் உங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகின்றதா?காட்டப்பட்டதா?

    • ஆம்
      2
    • இல்லை
      8
    • முதலில் அப்படி நினைத்ததுண்டு ஆனால் நான் புரிந்துகொண்டேன்
      5

Please sign in or register to vote in this poll.

Featured Replies

விஜய் ரீவியின் நீ யா நானா நிகழ்சி பார்த்த பாதிப்பிலே இந்த திரியினை தொடங்குகின்றேன்

குடும்பத்தில் உங்கள் பெற்றோர் உங்களுக்கும் உங்களின் சகோதர சகோதரிகளிடமும் பாரபட்சமாக இருந்தார்களா? இருகின்ரார்களா?அப்படி இருப்பின் எப்படி இருகின்றார்கள்?

அறிவுரையினை பாசத்தின் எதிர்பாக பார்கின்றீர்களா?அந்த அறிவுரைகளை கேட்காத போது நடக்கும் பிரச்சினைக்கு பின்னர் பெற்றோரின் மனதை புரிந்து கொண்டீர்களா?

குழந்தைகள் இருக்கும் கள உறவுகள் உங்களின் குழந்தைகளிடம் நீங்கள் பாரபட்சமாக நடத்துகின்றீர்களா?உங்களின் பாசத்தை எப்படி குழந்தைகளிடம் பங்கிடுகின்றீர்கள்?

கொஞ்சம் சீரியஸாக விவாதிப்போம்!!!!!

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப்பொறுத்த வரை குடும்பங்களில் பாரபட்சம் என்பது இல்லை. ஒரு பெற்றோருக்கு அவர்களது குழந்தைகளினது மன நிலை, இயலாமை பற்றி நன்றாக விளங்குவதன் வெளிப்பாடே. இதுவே பாரபட்சம் என குழந்தைகள் எண்ணுவத்ற்கு காரணமாகின்றது.

உதாரணமாக, நான் எனது குடும்பத்தை விட்டு தனியாக 10 வருடங்களுக்கு மேலாக இருக்கின்றேன்... வருடத்தில் ஒரு மாதம் இலண்டனில் அல்லது இலங்கையில் அல்லது மலேசியாவில் குடும்பத்துடன் இருப்பதுண்டு. நான் இப்படி வருடத்தில் ஒரு மாதம் இருக்கும் போதும் சரி, முன்னர் வருடம் முழுதும் குடும்பத்துடன் இருக்கும் போதும் சரி, எனது தம்பிக்கு தான் எதற்கும் முன்னுரிமை. காரணம் அவன் எதனை எதிர்பார்ப்பான், அவனால் முடியாதது என்ன, நான் என்ன எதிர் பார்ப்பேன், என்னால் முடியாதது என்ன என்பதை எனது பெற்றோர் தெளிவாக புரிந்து கொண்டமையே. சாப்பாட்டு விடயத்தில் இருந்து பொருட்கள் வாங்கும் விடயம் வரை இந்த பிரச்சனை இருக்கும். எனது தம்பி தனக்கு தான் முதலில் எதுவும் கிடைக்க வேண்டும் என நினைப்பவன். அதற்காக என்னோடு போட்டி என்பது அல்ல. அவனுக்கு பொருட்கள் முதலில் கிடைக்கும் போதுதான் அவன் சந்தோசமடைவான். அவனது சந்தோசம் எனக்கும் முக்கியம் எனது பெற்றோருக்கும் முக்கியம். அதே நேரம் எனது பெற்றோருகு தெரியும் எனக்கு அவனுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கான காரணம் புரியும் என்பதும்.

என்னை பொறுத்த வரை, இது ஒரு குடும்பத்தில் ஒருவர் மீது மற்றவர் கொண்டுள்ள புரிந்துணர்வின் வெளிப்பாடே அன்றி பாகுபாடு கிடையாது.

எனக்குத் தெரிந்த பல குடும்பங்களில் இது நடக்கிறது. முக்கியமாகப் பெண் பிள்ளைகளுக்கு இது அதிகமாக நடப்பதுண்டு. தமிழ்க் குடும்பங்களில், மூத்த பிள்ளையும் கடைசிப் பிள்ளையும் செல்லப் பிள்ளைகளாக இருப்பார்கள். நடுவில் பிறந்தவர்களுக்குத்தான் இந்தப் பாரபட்சம் அதிகம் நடப்பதுண்டு. :D

தாங்கள் நினைத்தபடி மட்டும்தான் தங்கள் பிள்ளைகள் நடக்கவேண்டும் என்பதே பல தமிழ்ப் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு. பிள்ளைகளுக்கென்றும் ஒரு மனம் இருக்கிறது. அவர்களுக்கும் ஆசைகள் இருக்கின்றன என்பதை அவர்கள் விளங்கிக் கொள்வதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், அவர்கள் சொல்லும் அறிவுரைகள் இப்போதைய காலகட்டத்திற்கேற்ப இருப்பதில்லை. இவர்களின் அறிவுரைகளால் தங்கள் வாழ்க்கையை இழந்தவர்கள்தான் அதிகம்.

அதேநேரத்தில், செல்லப் பிள்ளைகளாக வளர்பவர்களுக்கு இந்தப் பிரச்சனைகள் இருப்பதில்லை. காரணம், அவர்களுக்கு அவர்கள் கேட்டதெல்லாம் நடக்கும். :D:D

ஈழவன் நீங்கள் வீட்டில ஒரே ஒரு பிள்ளைதானே? உங்களுக்கு என்ன திடீர் எண்டு இப்பிடி ஒரு யோசனை...

எங்கட வீட்டில அஞ்சுபேர்... தெரியும்தானே... அப்ப எப்பிடி இருக்கும் எண்டு... நித்தாவால எழும்பினா யார் முன்னுக்கு பல்லு மினுக்கிறது... யார் முன்னுக்கு தோசை சாப்பிடுறது எண்டுறதில இருந்து கடைசியில நித்தாவுக்கு போகேக்க தலாணிக்கு அடிபடுறதுவரை எல்லாம் ஒரே பிடுங்குப்பாடுதான்.

குறிப்பா எனக்கும் அண்ணாக்கும் பொதுவான விசயங்களில அடிக்கடி சண்டை வரும்.. காசு எண்ட விசயத்தில எல்லாருக்கும் இடையில சண்டைவரும்.. இந்தச் சிக்கலுகளால ஏதாவது கொண்டாட்டம் எண்டால் எனக்கும் அண்ணாவுக்கும் ஒரேமாதிரி உடுப்புத்தான் வாங்கிறது.

ஆனாலும்... எல்லாம் நல்ல சந்தோசமான அனுபவங்கள்..

இப்ப அம்மா என்னோட இருக்கிறதால அண்ணாவில என்னைவிட பாசம் அதிகம். ஏன் எண்டால் அண்ணா கலியாணம் கட்டி கொஞ்சம் தள்ளி இருக்கிறார்.

ஆனால்.. அம்மா அக்காமாரப்பார்க்க வேறநாடுகளுக்கு போற சமயங்களில அங்க இருந்துகொண்டு என்னைக்காணாமல் அந்தரப்பட்டுக்கொண்டு இருப்பா. அக்காமாருக்கு என்னோட கதைக்கிறதுக்கு கோல் எடுத்துத்தரச்சொல்லி ஒவ்வொருநாளும் கரைச்சல் குடுத்துக்கொண்டு இருப்பா..

பாரபட்சம் எண்டு சொல்லிறதுக்கு ஒண்டும் இல்ல. நேரம் காலத்துக்கு தகுந்தபடி யார் யாருக்கு முக்கியத்துவம் குடுக்கவேணுமோ அப்படி முக்கியத்துவம் குடுக்கப்படுகிது.. இப்பிடித்தான் எங்கண்ட வீட்டில நடந்திச்சிது... நடக்கிது.

எண்டாலும், எண்ட மூண்டாவது அக்கா அம்மா, அப்பா தன்னை கொஞ்சம் பாரபட்சம் காட்டீப்போட்டீனம் எண்டு சிலது குறைப்பட்டுக்கொள்வா. உதாரணத்துக்கு எண்ட முதல் ரெண்டு அக்காமாருக்கும் பெருசா சாமத்திய வீடு எல்லாம் செய்தது. ஆனால் மூண்டாவது அக்காவுக்கு அறையுக்க வச்சு ஆளாத்தி காட்டினதோட சரி. இப்பிடி கொஞ்சம் சின்னச் சின்ன விசயங்களால அவவுக்கு கொஞ்சம் கோவம்.

  • தொடங்கியவர்

இல்லை முரளி எனக்கு ஒரு தங்கை இருகின்ரார்

என்னை பொருத்தவரையில் பொற்றோர் பாரபட்சம் காட்டுவதில்லை நேரத்துக்கு ஏற்றது போல நம்மை கவனிகிறார்கள் எனத்தான் நான் நினைகிறன்.ஊரில இருக்கும் போது எனக்கு என் தங்கைக்கு அதிகம் செல்லம் கொடுகின்றார்கள் என தோன்றியது வீட்டில சண்டையும் பிடித்திருகின்றேன் உங்களுடன் இருக்கும் வரையும்தானே இதெல்லாம் எனக்கூட கேட்டு இருக்கின்றேன் ஆனால் அம்மாவும் அப்பாவும் கதைக்கும் போது ஒட்டுகேட்ட்டபின் கவலைப்பட்டிருகின்றேன் ஏன் இப்படியெல்லாம் பேசிவிட்டேன் என

பாசம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான் இன்று குடும்பத்தை விட்டு தனிமையில் இருக்கும் போதே குடும்பத்தின் பாசத்தை புரிந்து கொண்டேன்.நான் இங்கு சிலவேளை திவாலாகிவிடுவேன் பண விடய்த்தில் அதாவது நான் இங்கு வந்த புதிதில்.வீட்ட பணம் கேட்க கஸ்டமாக இருக்கும் கேட்கலாம் என போன் பண்ணுவன் ஆனால் கேட்க மனம் வராது ரூபாயை டொலராக மாற்ற வேண்டிவருமே என கவலை ஆனால் அப்படியான சூழ்நிலையில் நான் அப்பாவுடனோ அம்மாவுடனோ பேசும் போது என் நிலையை கன்டுபிடித்துவிடுவார்கள்.அத??r />?சயமாக இருக்கும் எப்படி இது எல்லாம் என பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் எனது உணர்வுகள் அவர்களுக்கு எப்படி புரிகின்றது என.இதுமட்டுமல்ல எனக்கு வருத்தமாக இருந்தாலோ அல்லது வேறு தேவைகளாக இருந்தாலோ நானாக கேட்காமல் அறியக்கூடியதாக இருகின்றது அவர்களுக்கு

இன்று வரை பண்டிகைகள் என்றாலோ அல்லது யராவது ஊரில இருந்து வந்தாலோ உடைகள் நிச்சயம் வந்தே தீரும் .நண்பன் ஒருவன் அம்மாவிடம் அவனுக்கு உடைகள் அனுப்ப வேண்டாம் அதனால்தான் அவனது அறை குப்பை என சொல்லுமளவுக்கு உடைகள் வந்துகொண்டே இருக்கும்

அதுமட்டுமல்ல டீன் ஏஜ் வயதில் அட்வைஸ் பண்ணுவது யாருக்கும் பிடிக்காது அதுவும் நண்பர்கள் விடயத்தில் அறவே பிடிக்காது அம்மாவும் அப்பாவும் 30 வருடமாக ஆசிரியர் தொழில் செய்பவர்கள் .யாரையும் முகத்தை பார்த்து அவர்களின் குண இயல்புகளை அறியும் இயல்பினை அனுபவத்தால் அறிந்தவர்கள்.யாருடன் பழக வேண்டாம் என சொல்லும் போதெல்லாம் நான் கணக்கெடுப்பதில்லை இப்படியான பின்விளைவுகள் வரும் என சொல்லும் போது அலட்சியமாக எடுத்துகொள்வேன் ஆனால் அவர்கள் சொல்லியது நிச்சயம் நடந்தே தீரும்.இன்று அவர்களின் அட்வைஸ்களை புரிந்துகொன்டேன் அந்த காலத்தில் அது கோவமாக இருந்தாலும் அதன் சீரியஸ்னஸை யாரும் புரிவதில்லை என்பதை புரிந்து கொண்டேன்.குழந்தைகளுக்கு அட்வைஸ் செய்வது கெட்டுபோக வேன்டும் என எண்னத்தோடு அல்ல என்பதே உண்மை

பாசம் என்பது பொருள்களில் மட்டும் தங்கி இருப்பதில்லை.சில பெற்றோருக்கு பாசத்தை வெளிக்காட்ட தெரிவதில்லை அல்லது வேன்டுமென்றே மரைகின்ரார்களே அன்றி வேறொன்றும் இல்லை.நமக்காக கவலைப்படும் ஒரே ஒரு உறவு எம் குடும்பத்தாரே வேறு யாரும் இல்லை என் தனிமை என் குடும்பத்தினரின் பாசத்தினை எனக்கு நிறையவே சொல்லிதந்திருகின்றது.ஒன்றாக இருக்கும் போது அதன் அருமை புரிவது இல்லை என்பதே என் கருத்து

தவறான புரிதல் என்றவுடன் ஒன்று ஞாபகம் வருகின்றது.

எனது சித்தி குடும்பம் இங்கிலாந்தில் இருகின்றார்கள் அவர்களின் பிள்ளைகளில் இருவர் அங்கேயே பிறந்தவர்கள் மூத்தவன் என்னை விட ஒருவயது குறைவு இலங்கையில் பிறந்து 2 வயதில் அங்கு சென்றவன் 2வது தங்கை அங்கேயே பிறந்தவள்.சித்தியின் மகளுக்கு பூப்புனிதநீராட்டுவிழா நடத்த ஆயத்தங்களை மேற்கொள்ளும் போது தம்பி கேட்டானாம் அவளுக்கு மட்டும்தான் எல்லாம் எனக்கு ஒன்டுமே செய்வதில்லை இன்ரு கூட இதனை சொல்லி சொல்லி அவனுக்கு நக்கல் அடிப்பேன்

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமான குடும்பங்களில் பெற்றோர் தங்களை அறியாமலே குறிப்பிட்ட ஒரு பிள்ளை மீது பாசம் வைத்திருப்பார்கள்.

ஒன்றில் மூத்த பிள்ளையாகவோ , இளைய பிள்ளையாகவோ இருப்பார்கள்.

அல்லது தந்தை மகள் மீதும், தாய் மகன் மீதும் அதிக அக்கறை செலுத்துவார்கள்.

பலர் சொல்லும் காரணம் அந்த பிள்ளை தான் என்னை கடைசி மட்டும் பார்க்கும் , அல்லது குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவரும் , அல்லது இறுதிச்சடங்கு செய்வதற்கு உரித்து உள்ளது என்பார்கள்.

இதனால் பாதிக்கப்படப் போவது மற்றைய சகோதரர்தான் . சிறு வயதில் தன்னை பெற்றோர் நன்றாக கவனிக்கவில்லை அந்த சிறு உள்ளத்தில் பதிந்துவிட்டால் பெற்றோர் மீது ஒரு வெறுப்பு , அல்லது விரக்தி ஏற்பட்டு விடும். அதனை பின்பு மாற்ற முடியாது. உள்ளத்தில் ஒரு மூலையிலிருந்து உறுத்திக்கொண்டே இருக்கும். அத்துடன் சிறு வயதில் தன்னை பெற்றோர் கவனிக்கவில்லை என்று ஒரு தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டால் வாழ்க்கையில் அந்தப்பிள்ளையால் வெற்றி பெறுவது என்பது கடினம்.

சிறு பிள்ளைகள் பெற்றோரிடம் முதலில் எதிர்பார்ப்பது அன்பான , ஆறுதலான வார்த்தைகளை மட்டுமே . ஆகவே உங்கள் அன்பையும், கண்டிப்பையும் எல்லா பிள்ளைகள் மீதும் சம அளவில் செலுத்துங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.