Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னகத்தில் முதல் முறையாக ஆட்சியை பிடித்த பாஜக!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூர்: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

மொத்தமுள்ள 224 இடங்களில் பாஜகவுக்கு 112 இடங்களும், காங்கிரசுக்கு 77 இடங்களும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 28 இடங்களும் பிற கட்சிகளுக்கு 8 இடங்களும் கிடைத்துள்ளன.

ஆட்சியமைக்க 113 இடங்களே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலில்..

கலைக்கப்பட்ட சட்டசபையில் பாஜகவுக்கு 79 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு 65 எம்எல்ஏக்களும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 58 எம்எல்ஏக்களும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 5 எம்எல்ஏக்களும் இருந்தனர் என்பது நினைவுகூறத்தக்கது.

இதன் மூலம் மதசார்பற்ற ஜனதா தளத்துக்குத் தான் பெருத்த அடி விழுந்துள்ளது. அந்தக் கட்சி இழந்த இடங்களை பாஜக அள்ளியுள்ளது.

காங்கிரஸ் கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் வென்றாலும், பாஜகவின் வெற்றியுடன் ஒப்பிடுகையில் அது பெரிய வெற்றி இல்லை.

கர்நாடக சட்டசபைக்கு மே 10, 16, 22 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. 2,242 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 108 பேர் பெண்கள்.

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. 46 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரம் பாஜகவும், காங்கிரஸும் மாறி மாறி முன்னணியில் இருந்தன. ஆனால், வட மாவட்டங்களில் பாஜகவுக்கு முழுமையான வெற்றி கிடைக்க ஆரம்பித்ததையடுத்து காங்கிரஸை அக் கட்சி பின்னுக்குத் தள்ளியது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பெங்களூர் நகரின் பெரும்பாலான தொகுதிகளிலும் பாஜகவே வென்றுள்ளது.

முன்னாள் முதல்வர் குமாரசாமி, அவரது தம்பி எச்.டி.ரேவண்ணா உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். நடிகர் அம்பரீஷ், மாநில மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் மிராஜூதீன் பாட்டீல் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.

இத்தேர்தலில் 224 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை நிறுத்தியது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி.எஸ்.எடியூரப்பா, முன்னாள் முதல்வர் பங்காரப்பாவை எதிர்த்து ஷிகாரிபூர் தொகுதியில் போட்டியிட்டார். அவர் பங்காரப்பாவை வென்றார்.

தேர்தலில் காங்கிரஸ் 222 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் 219 பேரும் களத்தில் இருந்தனர். பகுஜன் சமாஜ் கட்சியும் தேர்தலில் இறங்கியது. இக்கட்சியின் சார்பில் 217 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

மறு சீரமைக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் கர்நாடகத்தில் தேர்தல் நடந்துள்ளது. இந்தியாவிலேயே தொகுதி மறு சீரமைப்பின் அடிப்படையில் தேர்தல் நடந்த முதல் மாநிலம் கர்நாடகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடகா: பிஜேபி வெற்றி

.

Sunday, 25 May, 2008 09:55 AM

.

பெங்களூர்,மே 25: கர்நாடக மாநில சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக பிஜேபி உருவெடுத்துள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 109 தொகுதிகளில் அக்கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் பிஜேபி, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகளின் மும்முனைப் போட்டி நிலவியதால் அங்கு ஆட்சியமைக்கப் போவது யார் என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

.

கர்நாடக மாநிலத்தில் பிஜேபி மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி பிஜேபியின் எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்க ஆதரவு அளிக்க மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி மறுத்து விட்டதால் கர்நாடக சட்டப் பேரவை கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து கர்நாடக சட்டப் பேரவைக்கு கடந்த 10, 16 மற்றும் 22 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் 46 மையங்களில் இன்று எண்ணப்பட்டது. வாக்குப் பதிவிற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதால் முன்னிலை நிலவரம் உடனுக்குடன் தெரிய வந்தது.

பகல் 12.30 மணியளவில் அனைத்து தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரங்கள் வெளியானது. இதில் பிஜேபி 109 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் 75 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மும்முனை போட்டியில் களம் கண்ட தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி படு தோல்வி அடைந்துள்ளது. அக்கட்சி 32 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகள் 8 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

கர்நாடகத்தில் ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை. ஆனால் எந்த கட்சிக்கும் இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத தால் இழுபறி ஏற்பட்டுள்ளது.

ஆட்சியமைக்க தேவையான பலத்தில் ஒரு சில இடங்கள் மட்டுமே குறைவாக இருப்பதால் பிஜேபி ஆட்சியமைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. கர்நாடகாவின் முன்னாள் முதல மைச்சரும், பிஜேபியின் முதல மைச்சர் வேட்பாளருமான பி.எஸ். எடியூரப்பா ஷிகாரிபுரா தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். இவரை எதிர்த்து கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவருமான பங்காரப்பா பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

பங்காரப்பாவை விட எடியூரப்பா 14 ஆயிரத்து 352 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் தரம்சிங், மாநில காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எச்.டி.குமாரசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

நண்பகல் 1.30 மணியளவில் வெளியான முடிவுகளின்படி பிஜேபி 7 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிஜேபியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு பெல்லாரி தொகுதியிலிருந்து 25,716 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், நடிகருமான அம்பரீஷ் ஸ்ரீரங்கப் பட்டினம் தொகுதியில் பின்னடைந் துள்ளார். மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியி லிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர் எம்.பி.பிரகாஷ் ஹரப்பனஹள்ளி தொகுதியில் பின்னடைந்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் பிஜேபி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத் துள்ளதை அடுத்து, பெங்களூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் வெற்றியை உற்சாகமாக பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

பெங்களூர் மட்டுமின்றி தலைநகர் டெல்லியில் உள்ள பிஜேபியின் தலைமை அலுவலகத்திலும் கட்சியின் இந்த வெற்றி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்த தோல்வியை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச் சருமான எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் புதிய ஆட்சி அமைப் பதில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலை யில், காங்கிரஸ் மற்றும் பிஜேபியுடன் கைகோர்க்கும் பேச்சுக்கே இட மில்லை என்று மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தரம்சிங் சாதனை

பெங்களூர், மே 25: கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் 9வது முறையாக ஒரே தொகுதியில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் தரம்சிங் சாதனை படைத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஜவார்கி தொகுதியில் போட்டியிட்ட தரம்சிங் வெற்றி பெற்றுள்ளார். இது அவருக்கு கிடைத்துள்ள 9வது வெற்றியாகும். இதே போல் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் 9வது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். எனினும் அவரது சொந்த தொகுதியான குர்மிட்கால் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டதால் இந்த முறை சித்தாபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

குடும்பமே தோல்வி

கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் தோல்வி அடைந் துள்ளனர். கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் பங்காரப்பா ஷிகாரிபுரா தொகுதியில் பிஜேபியின் முதல மைச்சர் வேட்பாளர் எடியூரப்பாவுக்கு எதிராக பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

அவரது மகன் குமார் பங்காரப்பா காங்கிரஸ் கட்சி சார்பிலும், மது பங்காரப்பா சமாஜ்வாதி கட்சி சார்பிலும், சோரப் தொகுதியில் போட்டியிட்டனர். ஆனால் 3 பேருமே பிஜேபியிடம் தோல்வியை சந்தித்துள்ளனர்.

அதே சமயம் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி சார்பில் ஒரே குடும்பத்தி லிருந்து தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் எச்.டி.குமார சாமி மற்றும் அவரது சகோதரர் ரேவண்ணா ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

malaidsudar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.