Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜஸ்தான் அணியுடனான தோல்வியால் சென்னையின் அரையிறுதி வாய்ப்பு சிக்கலில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜஸ்தான் அணியுடனான தோல்வியால் சென்னையின் அரையிறுதி வாய்ப்பு சிக்கலில்

[26 - May - 2008]

சென்னையில் நடந்த பரபரப்பான ஐ.பி.எல். லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சுப்ப கிங்ஸ் அணியின் போராட்டம் வீணானது. கடைசி ஓவரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியிடம் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியடைந்தது. மோர்கலின் அதிரடி ஆட்டம் எடுபடாமல் போனது.

ஐ.பி.எல். தொடரில் 49 ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது.இதில் சென்னை சுப்ப கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணியின் கப்டன் வோர்ன் முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்.

சென்னை அணியில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. வித்யூத்துக்குப் பதிலாக புதிய வீரர் முகுந்த் இடம்பெற்றார். ராஜஸ்தான் அணி ஏற்கனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டதால் துணிந்து சில மாற்றங்களைச் செய்திருந்தது. வற்சன், ரவீந்திர ஜடேஜா, ராவித், திரிவேதி ஆகியோருக்குப் பதிலாக தருவர் கோஹ்லி, தினேஷ் சாலுங்கி, கம்ரல் அக்மல், பங்கஜ்சிங் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்மித்தும், அஸ்னோட்கரும் அதிரடி காட்டினர். 5 ஆவது ஓவரிலேயே 50 ஓட்டங்களைத் தாண்டினர்.

வேகப்பந்து வீச்சாளர்கள் கைகொடுக்கத் தவற `சுழல் மன்னன்' முரளிதரனை அழைத்தார் தோனி. ஆனால், அதுவும் பலனளிக்கவில்லை. ஒன்பதாவது ஓவரில் ஸ்மித் 29 பந்துகளில் அரைச்சதமடித்தார். 9.4 ஓவரில் ஓட்ட எண்ணிக்கை 100 ஐத் தொட்டது.

ஸ்மித்தும், அஸ்னோட்கரும் முதல் விக்கெட்டுக்கு 67 பந்துகளில் 127 ஓட்டங்களைக் குவித்தனர். ஐ.பி.எல் தொடரில் முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஓட்டம் இது. அஸ்னோட்கர் 41 ஓட்டங்கள் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் 91 ஓட்டங்களில் (9 பவுண்டரி, 4 சிக்சர்) ரெய்னா பந்தில் தோனியிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இதன்பின்னர் அதிரடியாக விளையாடிய அக்மல் பவுண்டரி மழை பொழிந்து சென்னை பந்துவீச்சாளர்களை மிரட்டினார். இவருடைய அதிரடியால் 19 ஓவரில் ஓட்ட எண்ணிக்கை 200 ஐத் தொட்டது. அக்மல் 26 பந்துகளில் (4 பவுண்டரி, 3 சிக்சர்) அரைச்சதமடித்தார். யூசுப் பதான் (6) , கைப் (10 ) , தருவர் கோஹ்லி (3) ஆகியோர் குறைந்த ஓட்டங்களில் வெளியேறினர். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களை எடுத்தது.

கடினமான இலக்கை சேஸ் செய்த சென்னை அணிக்கு ஆரம்பத்திலேயே தொடக்க வீரர் பிளமிங் (7 ) ரன் அவுட்டாகி ஏமாற்றினார். இவரையடுத்து பார்த்திவுடன் ஜோடி சேர்ந்த ரெய்னா அதிரடியாக விளையாடினார். 24 பந்துகளில் 45 ஓட்டங்கள் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்த ரெய்னா வோர்ன் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த மோர்கல் பார்த்திவுடன் இணைந்து அதிரடியில் இறங்கினார். 10.1 ஓவரில் ஓட்ட எண்ணிக்கை 100 ஐத் தொட்டது.

ஒருநாள் போட்டி போல மந்தமாக விளையாடிய பார்த்திவ் 34 பந்துகளில் தான் அரைச்சதம் அடித்தார். மிகவும் களைப்புடன் காணப்பட்ட இவர் 54 ஓட்டங்கள் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்த நிலையில் வோர்ன் பந்தில் வீழ்ந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மோர்கல் 26 பந்துகளில் அரைச்சதமடித்தார். இந்த நேரத்தில் கப்டன் தோனி (12) , தன்விர் வேகத்தில் ஆட்டமிழக்க சென்னை அணியின் வெற்றி வாய்ப்பு மெதுவாக நழுவியது. துடுப்பாட்ட வரிசையில் பின்னதாக களமிறக்கப்பட்ட சோகத்தில் இருந்த பத்ரிநாத் (1) இம்முறை சோபிக்கத் தவறினார்.

கடைசி ஓவரில் 15 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. இந்த ஓவரை வீசிய சோகைல் தன்வீர் மீண்டும் சென்னை அணிக்கு வில்லனாக மாறினார்.

முன்னதாக நடந்த லீக் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக 6 விக்கெட் வீழ்த்திய இவர் இம்முறையும் கலக்கினார்.

முதல் பந்தில் ஓட்டம் கிடைக்கவில்லை. இரண்டாவது பந்து இடுப்புக்கு மேலே செல்ல நோ-போல் மூலம் ஒரு ஓட்டம் கிடைத்தது. இந்தப் பந்து மீண்டும் வீசப்பட....கோனி ஒரு ஓட்டம் எடுத்தார். மூன்றாவது, நான்காவது பந்தில் தலா ஒரு ஓட்டம் மட்டும் எடுக்கப்பட .....சென்னை ரசிகர்கள் எரிச்சலடைந்தனர். 5 ஆவது பந்தில் மோர்கல் ஆட்டமிழந்தார். இவர் 40 பந்துகளில் 71 ஓட்டங்கள் (6 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். 6 ஆவது பந்தை தன்வீர் யோக்கராக வீச.....முகுந்த் (0) போல்டாக......சென்னை கிங்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்கள் மட்டும் எடுத்து 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ராஜஸ்தான் சார்பில் தன்வீர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 2 விக்கெட்டுகள் மற்றும் 71 ஓட்டங்கள் எடுத்த ஆல்பி மோர்கல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில் சென்னை வெற்றி பெற்றிருந்தால் இலகுவாக அரையிறுதிக்குள் நுழைந்திருக்கலாம். எனினும் மும்பை, டில்லி அணிகள் மோதும் போட்டியின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் மும்பை வென்றதால் கடைசி லீக் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸை வீழ்த்தினால் மட்டுமே சென்னையால் அரையிறுதிக்குள் நுழைய முடியும்

thinakural.com

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பினெலில் முரளியின் பந்து வீச்சு எடுபடவில்லை 4 ஒவர் போட்டு 39 ரன்ஸ் வாரி கொடுத்து 2 விக்கெட்டைய்யும் கைப்பர்றினார்

Edited by kuddipaiyan26

போட்டி நடந்து கண காலமாகி விட்டது. போகிற போக்கப் பார்த்தால் 96ல் சிறிலங்கா வென்றதுக்கு இனிதான் யாராவது வந்து பதில் அளித்தாலும் அளிப்பார்ர்கள் போல.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி நடந்து கண காலமாகி விட்டது. போகிற போக்கப் பார்த்தால் 96ல் சிறிலங்கா வென்றதுக்கு இனிதான் யாராவது வந்து பதில் அளித்தாலும் அளிப்பார்ர்கள் போல.

அந்த இறுதி ஆட்டம் இந்த மாசம் 1 திகதி தான் நடந்து முடின்ச

96 உலக கேப்பைக்கும் இதுக்கும் நிரைய துரம் அன்ங்கோ :D

நடந்து முடின்ச விளையாட்ட திருப்ப கதக்ரதில என்ன தப்பு :(

Edited by kuddipaiyan26

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.