Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேல் தமிழீழத்திற்கு கற்றுத்தரும் பாடம்?--ப.தெய்வீகன்

Featured Replies

அரபு நாடுகளுக்கும் யூத இன மக்களுக்கும் இடையில் நடைபெற்ற பல நூறாண்டு காலப் போர் முடிவடைந்து இஸ்ரேல் என்பது தனிநாடாக அங்கீகரிக்கப்படலாமா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு தொடர்பான விவாதத்துக்கு விடப்படுகிறது.

இந்த தீர்மானம் அரபு நாடுகளுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்டால்ää இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்துக்கு அமைவாக மீண்டும் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபடவேண்டும் என்பது இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால் ஐ.நா.வின் ஆதரவு அரபு நாடுகளின் பக்கமே காணப்பட்டது. ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மை நாடுகளுக்கு தனது எண்ணெய் வளத்தைக்காட்டி அவற்றை தனது பக்கம் அரபு நாடுகள் சேர்த்துக்கொண்டன. இதனைப் புரிந்துகொண்ட இஸ்ரேல் தலைவர் டேவிட் பென் கூரியன்ää இந்த தீர்மானம் மீதான விவாதத்தை எப்படியாவது இழுத்தடிப்பது என்று தீர்மானித்தார்.

விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்ததற்க

  • கருத்துக்கள உறவுகள்

ஐ சூர்யா தனது தளத்தில் அண்மைக்காலமாக தமிழ்நாதத்தில் வெளிவந்த கட்டுரைகளைப் போட்டு யாழ். களம் ஊடாக தனது இணையத்தளத்திற்கு இலவச விளம்பரம் தேட முயற்சிக்கின்றார். இவரின் இச் செயற்பாடுகளுக்கு யாழ். இணையத்தளமும் அதன் படிப்பாளர்களும் துணை போகக்கூடாது.

அண்மைக்காலமாக நன்கு அவதானித்து வந்த காரணத்தினால் தான் இதனைக் கூறுகின்றேன்.

இணையத்தளங்களில் இருந்து கட் அன்ட் பேஸ்ட் செய்யும் கலாச்சாரம் அண்மைக்காலமாக நன்றாகத்தான் வளர்ந்திருக்கின்றனது.

இந்த வகையில் ஐ சூர்யா போன்றவர்கள் தமது புளக்ஸ்பொட் தளத்துக்கு இலவசமாக விளம்பரத்தினை தேட யாழ். இணையத்தளத்தினை பாவிக்க முனைகின்றனர்.

பிறரின் உழைப்பினைச் சுரண்டி சொகுசாக இருந்து கொண்டு விளம்பரம் தேடுவதானது, மலையகப் பகுதியில் உள்ள இரத்தம் குடிக்கும் அட்டையின் செயற்பாட்டுக்கு ஓப்பானதாகும்.

எவர் மூலம் எப்படி செய்தி வந்தால் என்ன ப.தெய்வீகனின் கருத்து மிக மிக மிக தேவையான காலத்தின் கடமைகளை இஸ்ரேலின் உதாரணத்துடன் சொல்லியிருக்கிறார்....

இவரின் கட்டுரை மிகச்சிறந்த தரமாக புலம்பெயர்மக்களுக்கு அவர்களின் கடமையை

உணர்த்துகிறது..

இக்கட்டுரை உங்கள் தகவல் சேமிப்புகளில் இட்டு வைத்து அடிக்கடி பார்த்து உங்கள் கடமைகளை தொடர்ந்து செய்யுங்கள்.....

ஒரு கை தட்டி ஒலி கேட்காது .. எல்லோருடைய கைகளும் சேர்ந்து ஒலி எழுப்பினால்

அது பலனைத்தரும்....

கொச்சப்படுத்தல்களை கணக்கில் எடுக்காமல் உங்கள் பிரச்சாரங்களை சரியான ஆதாரங்களுடன் உங்கள் நாட்டுமக்கள் தொடக்கம் மத்திய அரசுக்கள் வரை கொண்டு செல்லுங்கள்.....

அல்லது நீங்கள் எத்தனை வருடங்கள் அங்கு வாழ்ந்தாலும் எப்பவும் உங்களை புரியாத வெறுப்புக்குரிய இனமாக வாழுவீர்கள்...

அத்துடன் இலங்கையரசு அந்த அந்த நாடுகளின் மூலம் உங்களை வெறுக்க வைத்து விடும்.

எமது போரட்ட வரலாறு நியாயம் அறிந்த அனுதாபம் கிடைத்த அந்த நாட்டுமக்களால்

எமக்கு பல நன்மைகள் உண்டு...

எனவே சரியான தகவல்களை (எமது மக்களின் போரட்டனியாயங்கள்,எமக்கு இழைக்கப்படும் கொடுமைகள் வீடியோ. இணையத்தள முகவர்கள் இன்னும் பல சாதனங்கள் மூலம் விளக்கம் கொடுங்கள்.......

எமக்கு என்ன என்று இருந்தால் எல்லாம் எங்கள் இனத்தின் இருப்பினை முழுங்கிவிடும்...

உங்கள் சிறிய முயற்சி பெரிய பலனை எம்மினத்திற்கு கொடுக்கும்.....

உங்கள் அபிப்பிரயாங்களை எழுதுங்கள்.......

  • தொடங்கியவர்

தமிழ் நாதத்தின் எழுத்துருவே மிகப்பழையது கூகில் தேடு பொறியில் எல்லாம் வராது ஏன் யாழ் களத்தில் கூட் நேரடியாக இணைக்க முடியாது

ஆகவேதான் இது யுனிக்கோட்டிற்கு மாற்றப்பட்டு ஐ.சூர்யாவில் பிரசுரிக்கப்படுகிறது எழுத்தாளரின் செய்தி போய் மக்களிடம் சேர்ந்தால் சரி தானே

  • கருத்துக்கள உறவுகள்

செய்கின்ற களவுக்கு விளக்கம் அளிக்காதீர்கள் ஐ சூர்யா.

கொப்பி அடித்து உங்கள் தளத்தில் போட்டது சரி என வைத்துக் கொள்வோம். அதற்கு நன்றி: தமிழ்நாதம் என்று போடக்கூடாது ஏதோ அக்கட்டுரையாளர் உங்களுக்கு எழுதியது போன்று வைத்திருக்கின்றீர்களே இது எந்தளவில் சரியான செயல்?

ஒவ்வொருவரும் தனித்துவமாக செய்தாலே நாமே எமது போராட்டத்துக்கு வலு ஏற்படுத்துகின்றவர்களாக இருப்போம்.

நீங்கள் பழைய எழுத்துமுறை பற்றி நீங்கள் கவலைப்படுகின்றீர்கள். அப்படியானால் பதிவு, சங்கதி மற்றும் புதினம் இணையத்தளங்களின் செய்திகளையும் கொப்பியடித்து உங்கள் தளத்தில் ஒட்டி பின்னர் யாழில் இணைப்பு கொடுக்கிறீர்கள். இதற்கும் நீங்கள் ஏதும் விளக்கம் வைத்திருக்கின்றீர்களா?

ஐ சூர்யாவின் இத்தகைய செயற்பாட்டுக்கு களத்தில் உள்ள சில படிப்பாளர்களும் ஆதரவு தெரிவிப்பது வேதனையளிக்கின்றது.

மற்றவர்களின் உழைப்புக்கு மதிப்பு கொடுங்கள். மற்றவர்களுக்கு விடயம் செல்ல வேண்டும் என்றுதான் கட்டுரைகள், செய்திகளை பிற இணையத்தளங்கள் வெளியிடுகின்றன. அதற்காக அவர்களின் கட்டுரைகள், செய்திகளை சுட்டு மூலம் எது என்கிற தடயத்தினை அழித்து போடுவது சரியான செயலா?

இதுட்தான் நமக்குள் இருக்கும் சாபக்கேடு சொல்லப்பட்ட செய்தி எப்படி சென்றடைந்தாலும் நல்லதே அதைவிடுத்து எதில் அதில் என புடுங்குவது ஏனோ

  • தொடங்கியவர்
இதுட்தான் நமக்குள் இருக்கும் சாபக்கேடு சொல்லப்பட்ட செய்தி எப்படி சென்றடைந்தாலும் நல்லதே அதைவிடுத்து எதில் அதில் என புடுங்குவது ஏனோ
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியாயின் ஈழவன் வீதியில் ஒரு பொருள் வீழ்து கிடந்தால் அதனை உரியவர்களிடம் சேர்ப்பிக்கத்தானே முயற்சிப்பீர்கள்? அல்லது அந்தப் பொருள் எல்லாருக்கும் போய்ச் சேர வேண்டிய பொருள் என்று வீழ்ந்திருக்கிறது என்று கருதி நீங்களே அதனை வீட்டுக்கு எடுத்துச் செல்வீர்கள் அப்படித்தானே?

உடனே அது வேறு இது வேறு என்றுதான் வியாக்கியானம் கூற வராதீர்கள்.

இங்கே நான் கூற வருவதனை சரியாகப் புரிந்து கொள்ளாமல் வாதாடாதீர்கள். கட்டுரைகளை ஐ சூர்யா சுட்டிருக்கிறார், கட்டுரை எந்தத் தளத்துக்குரியது என அவர் நன்றி போட்டிருக்கின்றாரா என நீங்கள் அவதானித்தீர்களா? அது தவறு என ஏன் நீங்கள் சுட்டிக்காட்ட முன்வரவில்லை?

உண்மையில் நாம் அனைத்துலக ஊடகங்கள் மற்றும் சிங்கள - ஆங்கில ஊடகங்களிடமிருந்து பெருமளவில் கற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இதுட்தான் நமக்குள் இருக்கும் சாபக்கேடு சொல்லப்பட்ட செய்தி எப்படி சென்றடைந்தாலும் நல்லதே அதைவிடுத்து எதில் அதில் என புடுங்குவது ஏனோ

அதைத்தான் சத்தியராஜ் அவர்கள் தமிழன் மனிசனே இல்லை எண்டார்...!

இப்படியான கட்டுரைகள் எவ்வளவு தூரம் மக்களுக்கு சென்றடைய வேண்டியதுதான் தற்போதய காலத்தின் முக்கியத்துவம்.அது எந்த தளத்தில் இருந்தது என்பது முக்கியமில்லை ஆனால் சூரியா தமிழ்நாதத்தினை குறிப்பிட்டிருக்கலாம் என்பதனை நான் ஏற்றுகொள்கின்ரேன்.

தெய்வீகன் சிறந்த இளம் எழுத்தாளர்.சுடரொளி உதையனில் பணியாற்றியவர்.அவரின் கருத்துகளும் எழுத்துகளும் மக்களை சென்ரடைய வேண்டும் போராட்டக்காலத்தில் சிலதை கணக்கில் எடுத்தல் என்பது நல்லது அல்ல என்பதனையும் நிர்மலனுக்கு தெரியப்படுத்துகிறேன்.

நிர்மலன் தமிழ்நாதத்தை சார்ந்தவரோ என எனக்கு தெரியவில்லை ஆனால் இது சம்பந்தமாக தெய்வீகனுடன் பேசிப்பார்கின்ரேன்

தெய்வீகனுடன் பேசி இருந்தேன் அவர் இருக்கும் கருத்தை பற்றி வாதிடாமல் பிரசுரிக்கப்பட்ட இடம் பற்றி விவாதிப்பதையிட்டு கவலை வெளியிட்டிருந்தார்

சூரியாவின் தளத்தில் அக்கட்டுரை இருப்பதால் பிரச்சினை இல்லை என்றே சொல்லி இருந்தார் அத்துடன் தமிழ்நாதம் நிர்வாகத்தினருக்கும் எந்த சங்கடமும் இருக்கும் என தான் நினைக்கவில்லை எனவும் கூறி இருந்தார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்மையில் ஜசூரியாவின் செயல் பாரட்டத்தக்கது இவரால்தான் இந்த கட்டுரையை நான் வாசிக்கும் வாய்ப்பை பெற்றேன். அல்லாவிடில் இதை வாசிக்காமலேயே இருந்திருப்பேன் அல்லது இன்னமும் பிந்தி வாசித்து இருப்பேன். பல இடங்களில் இருக்கும் பல கட்டுரைகளை ஒரு இடத்தில் தருவது விருப்பமுறு செயலே. கட்டுரை எழுதியோனுக்கும் பலரிடம் தனது கட்டுரை சென்றடைவது விருப்பமுறு செயலே.

பொதுவாக தளத்தை நடத்துவோர் வாசகன் தனது தளத்தில் வந்து வாசிக்கவேண்டும் என்றே விரும்புவார்கள், அதனால் தான் முன்னர் இங்கு முழுசெய்தியையும் வெட்டி ஒட்டும் பழக்கம், மாற்றப்பட்டு சில வரிகளை ஒட்டி மிகுதிக்கு அத்தளத்தின் இணைப்பை கொடுத்து விடுவார்கள். சில மனித்துளிகளைஅல்லது பணத்துளிகளை செலவழித்து கட்டுரையை வாங்கி தளத்தில் இடுவோருக்கு உவப்புரிய செயல் இது.

நான் சில நேரங்களில் ஆச்சரியப்பட்ட்து உண்டு எங்கிருந்து ஜசூரியா இவ்வளவு கட்டுரைகளையும் எடுக்கிறார் என்று, கட்டுரை எடுத்த தளத்தின் மூலத்தை குறிப்பிட வேண்டும் என்பது களவிதி. அவர் தனது பிளக்ஸ்பொட் க்கு இனைப்பு கொடுத்து விடுவார். அங்கிருந்து பெறப்பட்டதாக.

சின்ன சின்ன உதவிகளுக்கே நன்றி கூறும் தமிழர் நாம், தனது பணத்தை ,நேரத்தை செலவழித்து கட்டுரையை பதிவிடும் தளத்துக்கு நன்றி கூறுவது அழகல்லாவா.

  • தொடங்கியவர்

நன்றி சித்தன்,ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வீகனுடன் பேசி இருந்தேன் அவர் இருக்கும் கருத்தை பற்றி வாதிடாமல் பிரசுரிக்கப்பட்ட இடம் பற்றி விவாதிப்பதையிட்டு கவலை வெளியிட்டிருந்தார்

சூரியாவின் தளத்தில் அக்கட்டுரை இருப்பதால் பிரச்சினை இல்லை என்றே சொல்லி இருந்தார் அத்துடன் தமிழ்நாதம் நிர்வாகத்தினருக்கும் எந்த சங்கடமும் இருக்கும் என தான் நினைக்கவில்லை எனவும் கூறி இருந்தார்

தெய்வீகன் அவர்களின் பெயர் குறிப்பிடாமல் இருப்பதை பெரிதுபடுத்தாமல் இருப்பது அவரது பெருந்தண்மையை காட்டுகிறது.

சிறந்த கட்டுரை இஸ்ரேலின் மொசாட் என்ற புலனாய்வு அமைப்பின் நடவடிக்கைகள். இஸ்ரேல் உருவாகுவதற்கு யூத மக்கள் இரக்சியமாக எத்தனை வழிகளிகளில் உதவுகின்றார்கள் என்பதும் இது போன்ற செயற்பாடுகள் மொசாட் என்ற உள்வு புத்தகததில் நிறையவே உள்ளன கிடைத்தால் வாசியுங்கள் தமிழீழம் மலர எம்மால் இயன்ற வழிகளில் உதவுவோம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.