Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமக்கான சினிமாவை நோக்கி....

Featured Replies

எழுதியவர்: இரவி அருணாசலம்

முழுதாக ஒரு மூன்று கிழமை தமிழ்நாட்டில் தங்கியிருந்தேன். சென்றதற்கு ஒரு நோக்கம் இருந்தது. `ஈழத்தமிழருக்கான ஒரு சினிமாவை கண்டடைதல்' என்கிற நோக்கம்.

இதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்றுயாரும் கேட்டால் என்ன பதில் சொல்வேன்? சினிமா ஆர்வலன் அவ்வளவும் தான் சொல்ல முடியும்?. ஈழத்துத் தமிழ்ச் சினிமா தொடர்பான அக்கறையும் ஒரு காரணம் என்பேன்.

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் ஈழத்துத் தமிழ்ச் சினிமா குறித்து ஈழமுரசு பத்திரிகையில் `செல்லும் வழி இருட்டு' என்று தொடர் கட்டுரை எழுதினேன். அதில்பலதும் பற்றித் தொட்டிருந்தேன். எனது இந்த பயணத்துக்கு அந்தக் கட்டுரையும் ஒரு காரணம்.

ஈழத்து தமிழ்ச் சினிமாவைக் கண்டடைவதற்கு ஏன் தமிழ்நாடு என்ற ஒரு கேள்வியும் எழலாம். முக்கியமாக தமிழ்மொழி பேசும் திரைப்படக் கலைஞர்கள் அங்கு இருக்கின்றனர் என்பது ஒன்று.

இரண்டாவதாக திரைப்படம், தொழில் முறையில் சிறப்பாக செழித்து வளர்ந்த இடம் தமிழ் நாடு என்பதும்ஒரு காரணம். மற்றும் ஈழத்துத் தமிழர்களாகிய எங்களால் சுலபமாக திரைப்படக் கலைஞர்களை சந்திக்கலாம் அளவளாவலாம் என்றால் அதுவும் தமிழ் நாட்டிலே சாத்தியம்.

சுமார் முப்பது தமிழ்த்திரைப்படக் கலைஞர்களைச் சந்தித்தோம். அவர்கள் பல தரப்பட்டோர் ஆவர். சிகை அலங்காரக் கலைஞர், நெறியாளர், ஒளிப்பதிவாளர், வசனகர்த்தா, பாடலாசிரியர், சினிமா நிருபர், நடிகர், கலைக்கூடப் பொறுப்பாளர், உதவி நெறியாளர்கள் வீதியில்அலைகிற சினிமா ஆர்வலர்கள் (இந்த ஆர்வலர்கள் இருவகை, பங்காளராகத் துடிப்பவர்கள், பார்வையாளர்களாக இருப்பவர்கள்) ஒப்பனையாளர், நடனக் கலைஞர், தயாரிப்பாளர்... என்று இன்னும் பலதரப்பட்டோரைச் சந்தித்தோம்.

கண்களில் வெறி, கண்களில் ஒளி, சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு, சாதிக்கும் ஆர்வம் என்று எல்லோர் முகங்களிலும் அவைதான் தெரிந்தன. பட்டினி; படுக்கைக்கு இடமில்லை. என்றாலும் வாழ்க்கையில் எவ்வளவு ஆர்வம் நம்பிக்கை. சென்னைக்கு தினமும் நுÖறு பேராவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு வருகிறார்கள். தினமும் நுÖறு பேர் எனில் மாதத்திற்கு அது மூவாயிரம் ஆகிறது. வருடக் கணக்கை நீங்களே பார்க்கலாம்.

இவர்களில் சாதிப்பவர்கள் எத்தனைபேர்? இவர்களில் மனச் சிகரங்களைத் தொடாவிடினும் மலை அடிவாரங்களுக்காவது வந்த பாலா, அமீர், மிஸ்கின் போன்றுதேறியவர்கள் எத்தனை பேர்? நடிக்க என்று வந்து இயக்குனர்களாகவும் (பாரதிராஜா) இசையமைப்பாளர்களாகவும் (எம்.எஸ். விஸ்வநாதன்) இயக்குவதற்கு வந்துபாடலாசிரியர்களாகவும் (அறிவுமதி, ஆரூர்தாஸ் முத்துலிங்கம், யுகபாரதி) வசனகர்த்தாக்களாகவும் மாறியவிபத்துக்களும் இங்கு உண்டு.

தமிழ் திரைப்பட உலகை `கனவுத் தொழிற்சாலை' என்று வர்ணித்து சுஜாதா ஒரு நாவலும் எழுதினார். உண்மையில் கனவுகளைத் தின்று வாழ்பவர்கள் அங்கு அதிகம். சில கனவுகள் தின்று செமிபடுகின்றன. சில கனவுகள் வாந்தியாய் வெளிவருகின்றன. சில கனவுகள் காவியமாக மிளிர்கின்றன. (உதிரிப்பூக்கள், பருத்தி வீரன்)

சுவாரசிமாய் நிறைய நடக்கின்றன. எங்கெங்கும் காற்று அலைதல் போல எல்லா இடங்களிலும் கதை சொல்லிகள் அலைகின்றனர். விடுதி அறைகளில் மாத்திரம்தான் இந்தக் கதை சொல்லிகள் அலைகிறார்கள் என்றல்ல கடற்கரையில் காற்று வாங்கி மாத்திரம்தான் கதை சொல்கிறார்கள் என்றும் அல்ல தொடரூந்து நிலையத்தில், உணவு விடுதியில், சாராயம் ஒழித்துக் குடிக்கிற ஓடையில்... கதை சொல்வதற்கு தோதான இடம் தேவையில்லை, நேரம், காலம், பொழுது எதுவும் தேவையில்லை. கதை கேட்பவர்கள் தயாரிப்பாளர்களாக மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்றும் இல்லை. அது யாரோ ஒருவராக இருக்கலாம். கதை பிடிக்கவில்லையா? ''இருங்க சார் இன்னொரு கதை சொல்றன்'' இன்னொரு கதை தயாராக இருக்கிறது. இல்லை இன்னும் ஆயிரம் கதை தயாராக இருக்கிறது. ஆயிரம் பேரிடம் ஆயிரம் கதைகள்.

சினிமாவை அவர்கள் யாகமாக வேள்வியாகப் பார்க்கிறார்கள். வாழ்வதற்கான வழியாகப் பார்க்கவில்லை. வயிறு பசித்த போதுதான் அல்ல வயிற்றுப்பசி தாங்க முடியாத போதுதான் அவர்கள் அடுத்த வேலை பற்றி யோசிக்கிறார்கள். நீஙகள் ஓர் உணவு விடுதியில் உண்பதற்கு இருக்கிறீர்கள். உங்களை உபசரிக்கும் பரிசாரகர்களைக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் சொல்வார்கள் ''ஆமா சார் சினிமாவுக்கு வந்தேன்'' அவர்கள்கண்களைக் கவனித்துப் பாருங்கள், நம்பிக்கை ஒளி இன்னும் மிச்சம் வைத்திருக்கிறார்கள். ''அதெல்லாம் வெல்லலாம் சார், இருந்து பாருங்க ஜெயித்துக் காட்டுறன்...''

அங்கு நிலைமை அப்படி இருக்கிறது. புலம் பெயர்நத தமிழர் இங்கு நாம் என்ன செய்கிறோம் `மண்ணாங்கட்டி' படத்தை எடுத்துவிட்டு அதுதான் மகாகாவியம் என்று பீற்றிக் கொண்டு திரிகின்றோம். ஒன்றுக்கும் உதவாத சருகுகளை எடுத்து விட்டு `பூக்கள்' என்று புழுகித் திரிகின்றோம். காதல் என்ற பெயரை வைத்துக் கொண்டே எத்தனை `காவியங்கள்' பண்ணுகிறோம். அரசியையும் அபியையும் உருக்கித்தட்டி சித்ரா என்கிறோம்.

எதைச் சொன்னாலும் பொத்துக் கொண்டு கோபம்தான் வருகிறது. படிப்பும், அதற்குரிய பயிற்சியும் இல்லாமல் யாரும் பரதநாட்டியம் ஆடுவார்களா? படம் எடுக்க வெறும்பணமும் ஆர்வக் கோளாறும் போதும் என்று நினைக்கிறார்கள். இவர்கள் ஈழத்துத் தமிழ்ச் சினிமாவை அழிக்க வந்த `சத்திராதிகள்' என்றுதான் சொல்வேன்.

உண்மையில் ஈழத்துத் தமிழ்ச் சினிமாவைக் கண்டடைதல் என்ற பயணத்தில் ஒரு சில அடிகள் அல்ல ஒரு சில அங்குலங்கள்தான் நகர்ந்திருக்கின்றோம். என்றாலும் அது கூட இப்போது அவசியம் என்றுதான் படுகிறது. இந்தப் பயணத்தில் நேர்ந்த சில அனுபவங்களை இந்தப் பத்தியில் தொடர்ந்து எழுத ஆசை கொண்டேன். எழுதுவேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.