Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழவா பிறந்தான்?

Featured Replies

வாழவா பிறந்தான்?--------------------------

மனிதன் மல மூத்திரங்களிற் புரள்கிறான், அவற்றை வாயிலும் வைத்துக் கொள்கிறான். பாடத்தேர்வில் தோற்கிறான், வெட்கத்தால் நஞ்சை உண்டு விடுகிறான், வறுமை, நோய் முதலியவற்றில் உழல்கிறான். கடு வெயிலில் நெற்றி வியர்வை நிலத்தில் விழச் சோற்றுக்கு உழைக்கிறான். அடிமை வேலையில் அழுங்குகிறான், வைத்தியஞ் செய்து கொள்வதற்கு அவகாச மில்லாமலே துள்ளித் துடித்துப் போய்விடுகிறான். குத்துப்படுகிறான், கொலையுண்கிறான், கொள்ளை கொடுக்கிறான். இரயில் மோட்டார் வண்டி, வானவூர்தி முதலியவற்றால் விபத்துக்குள்ளாகிறான், நீரில் அமிழ்கிறான், தீயில் வேகிறான், உறவினரை யிழந்து தவிக்கிறான், வேலை கிடையாமல் அலமருகிறான், மற்றைப் பிராணிகளாற் கடிபடுகிறான், குற்றஞ் செய்து சிறை புகுகிறான், கண்கெட்டுக் காது போய் உடல் நாறி முதுமையால் வதங்குகிறான். பிறந்தது முதல் அவன அடையும் அல்லல்கள் அவை. தன்னை வதைக்கும் பிற அல்லல்களையும் அவன் கணக்கெடுத்துக் கொள்க. மனிதன் தோன்றிய நாள்தொட்டு இன்று வரை அவனுக்கு அவ்வல்லல்கள்மறையவில்லை, குறைந்தபாடுமில்லை, புதுப்புது அல்லல்களும் வந்து சேர்கின்றன. எதிர் காலத்திலும் அவன்கதி அதுதான். அடுத்த நிமிடத்தில் தான் இப்படி யாவான் என்பதை அவனால் தெரியவு முடியாது.

அவ்வல்லல்களை அவன் விரும்பவில்லை. வெறுக்கிறான். ஆயினும் அவை அவனை வந்து மோதுகின்றன. அவற்றைப் போக்க முயல்கிறானவன். அது முடியவில்லை.

இன்பம் என்பதும் ஒன்று. "எழுதவோ அல்லது படிக்கவோ தெரியாதவர்கள் கூட மந்திரியாகி விட்டார்கள். காங்கிரஸ் சட்டசபை கட்சியினரில் சிலருடைய பக்கபலம் இருப்பதால்தான் இந்த மாதிரி எழுதப்படிக்கத் தெரியாதவர்க ளெல்லாம் மந்திரியாக முடிகிறது' என்றார் காங்கிரஸ் பொதுக் காரியதரிசி ஸ்ரீ ஜகன்னாத ராவ் சந்திரிகி" (29-9-1963 தினமணி) அ·தோ ரின்பம். அதனை அவன் வெறுக்கவில்லை, விரும்புகிறான். அ·தவனுக்குக் கிடைக்கிறது. ஆயினும் அதனை அவன் விரும்பு மளவிற் பெற மாட்டான். தனக்குக் கிடைக்கும் இன்பத்தை அவன் விலக்கவாவது முயன்று பார்க்கட்டும். அதுவு முடியாது.

  • தொடங்கியவர்

அப்படியெல்லாந் திறங்கெட்டுக் கிடக்கிற அவன் தன்னை உலகில் வாழப் பிறந்ததாகச் சொல்லிக் கொள்கிறான்.

` தன்பால் வருந் துன்பத்தொகுதிக்கும், இன்பத் தொகுதிக்கும் அவன் அதிகாரி யல்லன், அடியானே யாவான். அவனுக்கு அவை ஊட்டப் படுகின்றன. அவற்றை அவன் அனுபவித்தே யாக வேண்டும். ஊட்டுபவன் ஈசுரன்.

இ·தொரு நல்ல வுடம்பெனத் தெரிந்து அவன் தன்னுடம்பை யெடுத்துக் கொள்ளவில்லை. இ·தொரு வசதியான இடமெனத் தெரிந்து அங்குப் போய்ப் பிறக்கவில்லை அவன். அச்சுதந்தரம் அவனுக்குக் கிடையாது. அவனுக்கு உடம்பைக் கொடுத்தவனும், அவனை எங்காவது போய்ப் பிறக்குமாறு தள்ளியவனும் ஈசுரனே.

  • தொடங்கியவர்

உலகம் துன்பமயமே, அதனை ஆய்ந்து காண், கண்டு அதன்பால் உனக்குள்ள பற்றிலிருந்து நீங்கு, உனக்கு நோதல் என்பதில்லை என்பது திருவள்ளுவர் தந்த எச்சரிக்கை. 'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் - அதனின் அதனின் இலன்' என்றா ரவர். அவ்வழிச் சென்ற ஸ்ரீ கச்சியப்ப முனிவரர் 'மதியின் யாதனின் வழுவினோன் அதனின் - அதனின் நோதலை யடைதரான் அருஞ்சுக முறுவான் - மதியின் யாதனின் யாதனின் மருவினான் அதனின் - அதனின் நோதலை மருவுவான் அடைகுவன் துன்பம்' என்றனர். உலகை இன்பமயமெனக் கண்டு மயங்காதே, மயங்கின் விளக்கிற் படுகிற விட்டிலே யாவாய் என அம்முனிவரர் எச்சரிக்கிறார். அவ்வெச்சரிக்கைகளை அவன் கற்க. கற்பானாயின், இவ்வுலகில் வாழப் பிறந்தவனாக அவன் தன்னைச் சொல்லிக் கொள்ள மாட்டான்.

வாழப் பிறந்தவன் சாகலாமா? அவன் சாகிறான். சாவை அவன் விரும்பவு மில்லை. அதனாலும் அவன் உலகில் வாழப் பிறக்கவில்லை யென்பது அறியப்படும்.

பின்னை அவன் எதற்காகப் பிறந்தான்? பிறந்த அவன் மீளவும் இங்கு வந்து வாழாம லிருக்கச் சாகுமுன் வழிதேடிக் கொள்ளவே பிறந்தான். அ·தாவது பிறவாமையைப் பெறவே அவன் பிறந்தான் என்பது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.