Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழம் எங்கும் தமிழீழ மாணவர் எழுச்சிநாள் சிறப்புற நடைபெற்று வருகிறது.

Featured Replies

நிருபர் எல்லாளன்

தமிழீழ மாணவர் எழுச்சிநாள் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 6ஆம் நாள் தமிழீழம் எங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மாணவர்கள் மீதி திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் தன்னைத் தானே மாய்த்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் பொன்.சிவகுமாரனை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் மாணவர் எழுச்சிநாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

தமிழ் மாணவர் எழுச்சி நாள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தியாகி பொன் சிவகுமார், மேஜர் முரளி ஆகியோர் நினைவிலான தமிழீழ மாணவர் எழுச்சி நாள் நினைவுகள் இன்று வன்னியில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் இந்நிகழ்வுகள் தமிழீழ மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறுகிறது. தியாகி பொன் சிவகுமாhரின் 34வது நினைவு நாள் நேற்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி சங்கதி

தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் தமிழீழ மாணவர் எழுச்சி நாள் நிகழ்வுகள்

[வெள்ளிக்கிழமை, 06 யூன் 2008, 05:08 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

தமிழீழத் தாயகம் எங்கும் தமிழீழ மாணவர் எழுச்சி நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இன்று நடைபெற்றன.

தாயக விடுதலைப் போராட்டத்தில் முதல் மாவீரரான தியாகி பொன். சிவகுமாரனின் நினைவில் "தமிழீழ மாணவர் எழுச்சி நாள்" கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

விடியலுக்காக உழைக்கும் உத்வேகத்துடனும் உறுதியுடன் உணர்வுடனும் எழுச்சியும் உறுதியும் கொண்டு தமிழீழ மாணவர் எழுச்சி நாளை தமிழீழத் தாயகம் எங்கும் இன்று வெள்ளிக்கிழமை கோட்ட மட்டங்களில் மாணவர்கள் நடத்தினர்.

கோட்டங்கள் தோறும் மாணவர்கள் பேரணி நடத்தி தியாகி சிவகுமாரன்- மேஜர் முரளி ஆகியோருக்கு வணக்கம் செலுத்தி மாணவர் எழுச்சி நாளை உணர்வுடன் கடைப்பிடித்தனர்.

இந்நிகழ்வுகளில் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் மாணவர் எழுச்சி நாள் வாசிக்கப்பட்டது.

கிளிநொச்சி

கிளிநொச்சியில் கிளிநொச்சி- அக்கராயன் கோட்ட மாணவர்களால் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

தமிழீழ தேசியத் தலைவரின் படத்தினை மாணவர்கள் தாங்கி வர தமிழின்னியம் மற்றும் அணியிசையினைத் தொடர்ந்து தியாகி பொன். சிவகுமாரன், மேஜர் முரளி ஆகியோரின் திருவுருவப்படங்களை மாணவர்கள் ஏந்தி வந்தனர்.

நிகழ்வில் பொதுச்சுடரினை அனைத்துலக தொடர்பகத்தைச் சேர்ந்த திலீபன் ஏற்றினார்.

தமிழீழத் தேசியக்கொடியினை கிளிநொச்சி கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் ஏற்றினார்.

தியாகி பொன். சிவகுமாரனின் திருவுருவப்படத்திற்கு தமிழீழ மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் கண்ணன் சுடரேற்ற, நுண்கலைக் கல்லூரிகளின் பணிப்பாளர் தணிகைமாறன் மலர்மாலை சூட்டினார்.

மேஜர் முரளியின் திருவுருவப்பட்த்திற்கு செஞ்சோலைப் பொறுப்பாளர் சுடர்மகள் சுடரேற்ற, தமிழீழ கல்விக்கழக நிதிப் பொறுப்பாளர் கவியன்பன் மலர்மாலை சூட்டினார்.

அரங்க நிகழ்வுகளுக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவி தர்மினி தலைமை வகித்தார்.

தமிழீழ மாணவர் எழுச்சி நாள் பிரகடனத்தினை கிளிநொச்சி மாகாவித்தியாலய மாணவர் யா.தவபாலன் வாசித்தார்.

அக்கராயன் மகாவித்தியாலய மாணவி க.சுரேந்தினி, கிளிநொச்சி வலைய கல்விப்பணிப்பாளர் த. குருகுலராஜா ஆகியோர் உரைகளை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான பாப்பா ஆற்றிய சிறப்புரை:

எமது விடுதலைப் போராட்டத்தின் தொடக்கத்தில் மாணவர்களே முன்னுதாரணமாக செயற்பட்டிருக்கின்றனர்.

எமது விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த கேணல் கிட்டு, லெப். கேணல் விக்ரர், லெப். சாள்ஸ் அன்ரனி போன்றவர்கள் மாணவர்களாக இருந்த காலத்தில் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக பல செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

சிங்களப் பேரினவாதம் எப்போதுமே மாணவர்களை அடக்கவேண்டும் அல்லது ஒழிக்கவேண்டும் என்பதற்காகவே பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அண்மையில் நடத்தப்பட்டு வருகின்ற சிங்களப் படைகளின் கிளைமோர்த் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் கூடுதலானவர்கள் மாணவர்கள்.

எமது விடுதலைப் போராட்டத்தில் தொடக்க காலம் தொடக்கம் இன்று வரை மாணவர்களை அழிக்கவேண்டும் என்பதற்காகவே சிங்கள அரசுகள் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றன.

எமது மாணவர்கள் யதார்த்த சூழலை விளங்கிக்கொண்டு நமது தேசியத்தலைவரின் கரங்களை பலப்படுத்துவதன் மூலம் விடுதலைப் போராட்டத்தில் பெரும் பாய்ச்சலை மேற்கொள்ள முடியும் என்றார் பாப்பா.

இந்நிகழ்வில் தமிழீழ மாணவர் எழுச்சி நாளையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.

இலுப்பைக்கடவை

இலுப்பைக்கடவை மகாவித்தியாலயத்தில் தமிழீழ மாணவர் எழுச்சி நாள் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.

இலுப்பைக்கடவை கடற்புலிகளின் அரசியல்துறை முன்பாக தொடங்கிய மாணவர் பேரணி இலுப்பைக்கடவை பாடசாலையை வந்தடைந்தது.

இலுப்பைக்கடவை பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை இலுப்பைக்கடவை கடற்புலிகளின் வட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் பழனி ஏற்றினார்.

தமிழீழத் தேசியக்கொடியினை கள்ளியடி வட்ட பொறுப்பாளர் சந்திரன் ஏற்றினார்.

பொன். சிவகுமாரன் மற்றும் மேஜர் முரளி ஆகியோரின் திருவுருவுப்படங்களுக்கு பாடசாலை முதல்வர் ஈகைச்சுடரேற்றி, மலர்மாலை சூட்டினார்.

அடம்பன் தேசிய பணிக்குழுத் தலைவர் ஜெயசிங்கம் ஜயா எழுச்சி உரையாற்றினார்.

மல்லாவி

மல்லாவி கோட்டத்தில் தமிழீழ மாணவர் எழுச்சி நாள் நிகழ்வு உணர்வு எழுச்சியுடன் நடைபெற்றது.

முன்னதாக மல்லாவி மாவீரர் மண்டப முன்றலில் இருந்து தமிழின்னிய இசையுடன் மேஜர் முரளி- பொன்.சிவகுமாரன் ஆகியோரின் திருவுருவப்படங்கள் தாங்கிய பேரணி, யோகபுரம் மகாவித்தியாலயத்தை வந்தடைந்தது.

அங்கு நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை மல்லாவிக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் செம்மணண் ஏற்றினார்.

தமிழீழத் தேசியக் கொடியினை சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி துணைத்தளபதி அமுதாப் ஏற்றினார்.

மாணவர் எழுச்சி நாள் பிரகடனத்தை மல்லாவி மத்திய கல்லூரி மாணவி குவேந்தினி வாசித்தார்.

மல்லாவி மத்திய கல்லூரி மாணவன் துசிந்தன், பாலிநகர் மகாவித்தியாலய முதல்வர் கிருஸ்ணபிள்ளை ஆகியோர் கருத்துரையாற்றினர்.

மாணவர் எழுச்சி நாளையொட்டி நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் எங்கும் தமிழீழ மாணவர் எழுச்சிநாள் சிறப்புற நடைபெற்று வருகிறது.

06.06.2008 / நிருபர் எல்லாளன்

தமிழீழ மாணவர் எழுச்சிநாள் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 6ஆம் நாள் தமிழீழம் எங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மாணவர்கள் மீதி திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில்

தன்னைத் தானே மாய்த்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் பொன்.சிவகுமாரனை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் மாணவர் எழுச்சிநாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

தமிழ் மாணவர் எழுச்சி நாள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தியாகி பொன் சிவகுமார், மேஜர் முரளி ஆகியோர் நினைவிலான தமிழீழ மாணவர் எழுச்சி நாள் நினைவுகள் இன்று வன்னியில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் இந்நிகழ்வுகள் தமிழீழ மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறுகிறது. தியாகி பொன் சிவகுமாhரின் 34வது நினைவு நாள் நேற்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

sankathi.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.