Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா வங்கிகளில் வைப்பிலிடப்படும் தமிழர்களின் பணம் போருக்கே பயன்படுத்தக்கிறது: நா.உ. கனகரத்தினம்

Featured Replies

சிறிலங்கா வங்கிகளில் வைப்பிலிடப்படும் தமிழர்களின் பணம் போருக்கே பயன்படுத்தக்கிறது: நா.உ. கனகரத்தினம்

[செவ்வாய்க்கிழமை, 17 யூன் 2008, 06:16 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

சிறிலங்காவின் வங்கிகளில் வைப்பிலிடப்படும் தமிழ் மக்களின் பணம் போருக்கே பயன்படுத்துகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

ஒட்டிசுட்டானில் நடைபெற்ற கிராமிய அபிவிருத்தி வங்கியின் 12 ஆவது கிளைத் திறப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கிராமிய வங்கி மக்களுக்கு தேவையான ஒன்று, ஒட்டிசுட்டான் விவசாயத்தை முன்னோடியாகக் கொண்டது. மக்களுக்கு வங்கியில் கடன் பெற்று கடன் மீளளித்தல் இன்றியமையாத் தேவையாக உள்ளது.

அதனைக் கருத்தில் கொண்டு கிராமிய அபிவிருத்தி வங்கியின் 12 ஆவது கிளையாக ஒட்டிசுட்டான் கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

விவசாயத்திற்கு என்ன உதவியைச் செய்ய வேண்டுமோ அனைத்து உதவிகளும் தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனக் கட்டமைப்பு ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன.

உண்மையில் இப்பகுதி மக்கள் விவசாயத்தில் உழைக்கும் உழைப்பினை சேமிப்பு செய்தால் எமது தாயகம் வளம் பெறுவதுடன் கடன் பெற்று விவசாயத்தை மக்கள் மேம்படுத்தவும் முடியும்.

சிறிலங்காவின் வங்கிகளில் வைப்புச் செய்யும் தமிழ் மக்களின் பணத்தை சிறிலங்கா அரசு போருக்கே பயன்படுத்துகின்றது. குண்டுகளாகவும், வெடிபொருட்களாகவுமே அது வந்து எம்மை கொல்கின்றது.

இவற்றுக்கு எல்லாம் மாற்றீடாகவே தமிழீழத்தில் வைப்பகங்கள் வங்கிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஊடாக தமிழ்மக்களின் பணம் தமிழ் மக்களுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

தமிழீழத் தேசியத் தலைவர் உன்னதமான தலைமையை ஏற்று தமிழ் மக்களை வழி நடத்திக்கொண்டிருக்கின்றார். தமிழ் மக்களின் பணம் தமிழ் மக்களுக்கே பயனளிக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டு தமிழீழத் தேசியத் தலைவரால் வங்கிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அவரின் எண்ணத்தின் அடிப்படையில் தாயகத்தின் காப்பாக அமைக்கப்பட்டுள்ள வைப்பகம் மற்றும் வங்கிகளும் மக்களின் நிதியை வழிநடத்தி வருகின்றது என்றார்.

கிராமிய அபிவிருத்தி வங்கியின் 12 ஆவது கிளை ஒட்டுசுட்டானில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிராமிய அபிவிருத்தி வங்கி பொது முகாமையாளர் தவக்குமார் தலைமையில் நேற்று திங்கட்கிழமை முற்பகல் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரர்கள் இருவரின் தாயார் இராசலட்சுமி ஏற்ற, தமிழீழத் தேசியக் கொடியினை ஒட்டுசுட்டான் நெடுங்கேணிக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானம் ஏற்றினார்.

தொடர்ந்து மாவீரரின் திருவுருவப்படத்திற்கு முத்தையன்கட்டு தேசியப் பணிக்குழு செயலாளர் பேரின்பநாதன் ஈகைச்சுடரேற்றி மலர்மாலை சூட்டினார்.

தொடர்ந்து நிகழ்வுச்சுடர்களை ஒட்டுசுட்டான் போதனாசிரியர் கபிலன், மணாளன் சேமிப்புக்குழுச் செயலர் தனலட்சுமி கற்சிலைமடு அ.த.க. பாடசாலை முதல்வர் நாகேந்திரராசா ஆகியோர் ஏற்ற, பெயர்ப்பலகையினை தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர் கரிகாலன் திரைநீக்கம் செய்தார்.

புலிகளின் குரல் நிறுவன பொறுப்பாளர் நா.தமிழன்பன் நாடாவை வெட்டி வங்கியை திறந்து வைத்தார்.

வாழ்த்துரையை ஓட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வர கோவில் குருக்கள் வழங்க, கருத்துரைகளை ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய முதல்வர் கருணாகரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம், கிராமிய அபிவிருத்தி வங்கி நிறைவேற்ற பணிப்பாளர் சுயன் ஆகியோர் வழங்கினர். சிறப்புரையை புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் தமிழன்பன் வழங்கினார்.

தொடந்து புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட வணிக ஒளி கடன் திட்டத்தை சிறப்பு வேலைத்திட்ட பொறுப்பாளர் முகுந்தன் தொடக்கினார். அடகு சேவை, கடன் பகுதி, சேமிப்புப் பகுதி ஆகிய பகுதிகளுடன் வங்கி செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.