Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏதிலிகள் தேசம் இது!

Featured Replies

இன்று சர்வதேச அகதிகள் தினம். உலக நாடுகளில் இயற்கை அனர்த்தங்களாலும், போர், கலவரங்கள், வன்முறைகள் போன்ற மனிதக் கொடூரங்களாலும் உறவுகளையும், உடைமைகளையும், உறையுளையும் தொலைத்து ஏதிலிகளாக ஏங்கித் தவிக்கும் பல மில்லியன் மக்கள் குறித்து சர்வதேசம் சற்றேனும் ஏறெடுத்துப் பார்த்துச் சிந்திக்கும் தினம்.

ஏதிலிகள் பிரச்சினை அதிகம் உள்ள ஆபிரிக்க நாடுகளில் ஜூன் 20 ஆம் திகதி "அகதிகள் நாளாக' அனுஷ்டிக்கப்பட்டு வந்த நிலையில், அதனையே "சர்வதேச அகதிகள் தினமாக' கடைப்பிடிப்பது என 2000 ஆம் ஆண்டு டிசெம்பரில் ஐ.நா. தீர்மானித்தது. அதன்படி 2001 முதல் இத்தினம் சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

சமூகத்தில் கவனிப்பாரின்றிப் புறக்கணிக்கப்பட்டிருக்கும் ஒரு பெரும் மக்கள் கூட்டத்தினர் குறித்தும், அவர்களது அவல நிலைமை பற்றியும், அவர்களுக்கு வாழ்வில் தெம்பூட்டி, நம்பிக்கையை வளர்க்கும் வகையில் உதவுவது சம்பந்தமாகவும் விசேட கவனம் செலுத்துவதற்கான தினமாகவும் இதைக் கொள்ளமுடியும்.

ஆபிரிக்க நாடுகளுக்கு நிகராக ஏதிலிகள் பிரச்சினை மோசமாக உள்ள ஏனைய நாடுகளின் வரிசையில் இலங்கையும் முன்னணியில் திகழ்கின்றது என ஐ.நா. புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்த அகதிகளின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டுகின்றது. அவர்களில் பத்து, இருபது வருடங்களாகத் தமது பாரம்பரியத் தாயகப் பூமிக்கு சொந்தப் பிரதேசத்துக்கு திரும்ப முடியாமல் பரிதவிக்கும் மக்களின் எண்ணிக்கையும் லட்சக் கணக்கில்.

சிறுபான்மை இனத்தவர்களான தமிழ் பேசும் மக்களுக்கு எதிராகப் பெரும்பான்மை இனத்தவரான பௌத்த, சிங்களப் பேரினவாதிகள் மேலாண்மைத் திமிரோடு திணித்த ஆட்சி அதிகாரம் பெரும் உள்நாட்டுப் போருக்கு வழி செய்து, இலங்கைத் தீவை "அகதிகள் தேசமாக' மாற்றியமைத்திருக்கின்றது.

இந்தக் கொடூர யுத்தத்தின் விளைவாகப் புலம்பெயர்ந்த தமிழர்களில் இந்தியாவில் தஞ்சம் புகுந்தோரைத் தவிர ஏனைய ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரிய மில்லியனுக்கும் அதிகமான தமிழர்கள் தங்கள் அகதிகள் வாழ்வை, ஓரளவு நிம்மதியாக்கி, புலம் பெயர்ந்த மண்ணில் தம்மை ஸ்திரப்படுத்திக் கொண்டு விட்டார்கள். அவர்களின இன்றைய நிலைமை ஓரளவு திருப்தி தரக்கூடியது.

இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் இன்னும் ஏதுமற்ற ஏதிலிகளாக அவல வாழ்வு வாழும் நிலைமை தொடருகின்றது.

உள்ளூரில் இடம்பெயர்ந்து பரிதவிக்கும் தமிழர்கள், முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையினரான தமிழ் பேசும் மக்களின் அவலம் துன்பம் துயரம் வெறும் வார்த்தைகளில் சித்திரித்துவிட முடியாதவை.

சிறுபான்மை மக்கள் தங்களது நியாயமான உரிமைகளுக்காகவும், கௌரவ வாழ்வுக்காகவும், நீதிக்காகவும் ஆயுதம் ஏந்திப் போராடுவதற்கு முன்னரே பேரினவாதிகளால் நிர்க்கதியாக்கப்பட்டு, ஏதிலிகளாகத் தமது பிரதேசங்களிலிருந்து துரத்தியடிக்கப்பட்டமை வரலாறு.

ஐம்பதுகளின் நடுப் பகுதியிலிருந்து சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராகப் பேரினவாதம் திட்டமிட்டு அவ்வப்போது, அரங்கேற்றிய கொடூர இனக்கலவரங்களாலும், இன வன்முறைகளாலும் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டு, உறவுகளைப் பறிகொடுத்து, உடைமைகளை இழந்து, உடுத்த உடையுடன் உறையுளில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட நிலையில் ஏதிலிகளாகப் புறப்பட்டனர். அன்று ஆரம்பித்த இந்தக் கொடூர சரித்திரம் இன்றும் தொடர்கின்றது.

தமிழர் தாயகம் மீதான ஆக்கிரமிப்புப் போரினால் தங்களின் பாரம்பரிய குடியிருப்புப் பிரதேசங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட தமிழர்கள், அன்றாட ஜீவனோபாயத்துக்கு வழியின்றி அகதி முகாம்களிலும், நலனோம்பு மையங்களிலும், கொட்டகைகளிலும், குடிசைகளிலும், மர நிழல்களிலும் குடும்பத்தோடு அல்லாடிப் பரிதவிக்கும் குரூரம் இங்கு தொடர்கின்றது.

தமிழர் தாயகத்தில் கணிசமான நிலப்பரப்பு பாதுகாப்பு உயர் வலயம் என்ற பெயரில் கபளீகரம் செய்யப்பட்டு இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. யாழ். குடாநாட்டில் மட்டும் சுமார் மூன்றிலொரு நிலப்பகுதி இப்படி ஏப்பம்விடப் பட்டுள்ளதால் இப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தமது வாழ்வியல் ஆதாரங்களையும் ஜீவனோபாயத்தையும் இழந்து பல்லாண்டுகளாகப் பரிதவிக்கின்றார்கள்.

கிழக்கிலும் மூதூர், சம்பூர் போன்ற பகுதிகளிலும் மட்டக்களப்பிலும் இதேபோன்று துரத்தியடிக்கப்பட்ட தமிழர்களின் அவலம் நீடிக்கின்றது.

யாழ். மாவட்டத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் வாழ்விலும் முன்னேற்றம் ஏதுமில்லை.

இதேசமயம், சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கொடூரமாகத் தாக்கிய இயற்கைச் சீற்றத்தால் ஆழிப்பேரலைக் கொடூரத்தால் பாதிப்புற்று ஏதிலிகளான மக்களில் தமிழர் தாயகப் பிரதேசத்தவர்கள் மட்டும் இன்னும் உரிய நிவாரணம், புனர்நிர்மாணம், மீள்குடியமர்வு என்ற வசதிகளின்றி கவனிப்பாரின்றித் தொடர்ந்தும் அந்தரிக்கின்றார்கள். அந்த மனிதநேயப் பணியில் கூட இனவாத ஓரவஞ்சனை நீடிக்கின்றது.

இத்தகைய அகதிகளுக்குத் தொண்டர் அமைப்புகள் மற்றும் மனித நேய இயக்கங்கள் மூலமாகக் கிடைக்கக் கூடிய நிவாரண உதவிகளுக்கும் திட்டமிட்டுத் தடை விதிக்கும் சதி, இந்தத் தேசத்தில் அரங்கேறுகின்றது.

ஏதிலிகளுக்கான அவசர அவசிய மனித நேயப்பணிகளுக்குக் கூடத் தடை விதித்துக் கழுத்தை நெரிக்கும் கொடூரமும், குரூரமும் இந்தத் தேசத்தில்தான் கோரமாக அரங்கேறுகின்றன.

இன்றைய சர்வதேச அகதிகள் தினத்தில் உலகம் தனது முக்கிய கவனத்தைத் திசை திருப்பி உற்று நோக்க வேண்டிய ஆழமான பிரச்சினைகளையும் விவகாரங்களையும் கொண்ட நாடாக இலங்கைத் தீவு திகழ்கின்றது.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.