Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் தனியரசை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும். இல்லையேல் தமிழர்களை தேடிவரும் காலம் உருவாகும். - ஜெயானந்தமூர்த்தி எம்.பி.

Featured Replies

தமிழீழத் தனியரசை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் இல்லையேல் தமிழர்களை சர்வதேசம் தேடிவரும் காலம் வெகுவிரைவில் உருவாகும். என மட்டு. த.தே.கூட்டமைப்பின் பா.உ எஸ்.ஜெயனந்தமூர்த்தி ஜேர்மனியில் பொங்குதமிழ் நிகழ்வில் தெரிவித்தார்.

போரியல் விதிகளை மீறி தமிழர் பகுதிகளுக்குள் செல்லும் அரச படைகளுக்கும் அதனை வழி நடாத்திச் செல்லும் உயர்அதிகாரிகளுக்கும் தகுந்த பாடம் புகட்டுவதற்கு விடுதலைப் புலிகளின் தாக்குதல் படையணி தயார் நிலையில் உள்ளது.

இன்னும் 27 கிலோமீற்றர், 18 கீ.மிற்றர் என நீளங்களை அளவிடும் இராணுத் தளபதி மறுபுறத்தில் விடுதலைப் புலிகள் மதவாச்சி நோக்கி செல்ல இருக்கும் கிலோ மீற்றரின் தூரத்தை கணக்குப் போட தவறிவிட்டார்.

பொறுமையோடு, நீண்ட கால அமைதியைக் காத்துவிட்டோம். இந்த அமைதி நிச்சயமாக ஒரு பயங்கர போராக வெடிக்கப்போகின்றது. கிழக்கு மாகாணத்தை கைப்பற்றியது போன்று வன்னிப் பிரதேசத்தையும் கைப்பற்றி விடலாம் என்ற அரசினதும், படைத்தரப்பினதும் கனவு பொடிப்பொடியாக சிதறும் காலம் மிகவும் அண்மையில் நெருங்கிவிட்டது.

மணலாறு தொடக்கம் மன்னர் வரையும் மற்றும் முகமாலை, நாகர்கோவில் பகுதிகளில் கடும் போர் இடம்பெற்று வருகிறது. விடுதலைப்புலிகளின் பொறிக்குள் அகப்பட்டுள்ள படையினர் கண்பிதுங்கி தவிக்கின்றனர். அத்துடன், தன்னைத் தானே சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்துச் செல்வதனையும் காணலாம்.

இராணுவ நடவடிக்கையின் போது எப்பகுதியிலும் சண்டை செய்ய முடியாத நிலையிலும் முன்னேற முடியாத நிலயிலும் உள்ள படைத்தரப்பினருக்கு கடந்த காலங்களிலும் சரி தற்போதைய அரசும் சரி இராணுவ உதவிகளையும், நிதி உதவிகளையும் இராணுவத் தளபாடங்கள், தொழில் நுட்பங்களைக் கோரி உலக நாடுகளை கையேந்துவது வழக்கமாகிவிட்டது.

ஆனால், எமது போராட்டம் எங்களுடைய தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் வன்னி மண்ணில் நின்று சகல படைக் கட்டுமானங்களையும் நன்கு பயிற்சி பெற்ற படையணிகளையும் கொண்டு இராணுவத்திற்கு மாத்திரமல்ல உலக வல்லரசுகளுடன் போராடிக் கொண்டுள்ளதை நாங்கள் நன்குணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழர்களின் போராட்டத்தின் அடிநாதமாக விளங்குபவாகள் புலம் பெயர்ந்த தமிழ் உறவுகள் என்பதைச் சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகின்றேன். உலகில் உள்ள விடுதலைப் போராட்ட அமைப்புகள் எதுவாக இருந்தாலும் தனியான விமானப்படை ஒன்றை அமைத்து போராட்டத்தை முன்னெடுக்கின்றது என்றால் அது விடுதலைப்புலிகளையே சாரும். இதனையிட்டு நாங்கள் பெருமிதம் கொள்ள வேண்டும். இதற்கு புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களின் பங்பகளிப்பு இன்றிமையாதது.

எங்களுடைய தனியரசை சர்வதேசம் கட்டாயம் அங்கீகரக்க வேண்டும். அவ்வாறின்றி சர்வதேசம் தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, இழுத்தடிக்கும போக்கைக் கடைப்பிடிக்குமானால் நாம் எமது தேசியத் தலைவரின் காலத்தில் தனியாகப் பிரிந்து செல்வதைத்தவிர வேறுவழியில்;;லை. அதன் பின்னர் தமிழர்களை சர்வதேசம் தேடிவரும் காலம் உருவாகும் என்பதை நான் இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்

போர் முனையில் உள்ள போராளிகள் தலைவரின் உத்தரவுக்காக காத்திருக்கின்றனர். நாளை உத்தரவு பிறப்பிக்கப்படுமானால் மறுநாள் தமிழீழம் மலரும். அதே போன்ற வென்றெடுக்கும் தமிழீழத்தை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வெளிநாடுகளில் உள்ள புலம் பெயர்ந்து வாழ்கின்ற உறவுகள் இவ்வாறான பொங்கு தமிழ் நிகழ்வுகள் மூலமாக பொங்கி எழுந்து வெளிக்காட்ட வேண்டும்.

ஜேர்மனி கூட ஆரம்ப காலத்தில் பல நாடுகளின் மீது தனது ஏகாதிபத்தியத்தை செலுத்தியது. எனவே, விடுதலைப் போராட்டத்தைப் பற்றி நன்கு தெரிந்தவை இந்நாட்டு சட்டத்திற்கு இணைவாக பெசயல்பட்டு அரச படையினரதும், அரசினதும் தமிழர்க்கு எதிராக இழைக்கப்படும் துன்புறுத்தல்கள், மனித உரிமை மீறல்கள். கொலைகள், கடத்தல்கள், போன்றவற்றை இந்நாட்டு மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறி தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். என மேலும் தெரிவித்தார்.

நன்றி தினக்குரல்

சும்மா சும்மா எங்கட ஆட்களை ஊசுப்பி விடுகிற வேலைக்கு மேலால சிங்களவன் போல சர்வதேசத்திற்கும் சீண்டுற வேலையை நிறுத்தி ஆக வேண்டியதை பாhக்க வேண்டும் அதை விடுத்து

சிங்களவன்ர அமைச்சர்கள் மாதிரி சர்வதேசத்தை சீண்டி ஏற்கனவே இருக்கிற நிலமையை மோசமாக்கிற முட்டாள்தனமான வேலைகளை நிறுத்திறது நல்லது.

இப்பிடித் தான் 2002 - 2005 ஆண்டு வரை இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுகளில் உணர்ச்சியின் உச்சத்தில் ஏறி இந்தா பிடிக்கிறம் அங்க வெட்டுவம் இஞ்ச வெட்டுவம் நடுவில சுழண்டு அடிப்பம் என்று ஊசுப்பேத்தி போட்டு அவரவர் பொக வேண்டிய இடத்திற்கு பக்குவமாய் போட்டியனம் இடையில நின்று இப்பிடிபேச்சுக்களை நம்பி ஆமிக்கு கல்லெறிந்தவர்களை தெருவில் வீட்டு வாசலில் நாயை சுடுவது போல சுட்டு தள்ளிய அனுபவம் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனை தான்.

சும்மா சும்மா எங்கட ஆட்களை ஊசுப்பி விடுகிற வேலைக்கு மேலால சிங்களவன் போல சர்வதேசத்திற்கும் சீண்டுற வேலையை நிறுத்தி ஆக வேண்டியதை பாhக்க வேண்டும் அதை விடுத்து

சிங்களவன்ர அமைச்சர்கள் மாதிரி சர்வதேசத்தை சீண்டி ஏற்கனவே இருக்கிற நிலமையை மோசமாக்கிற முட்டாள்தனமான வேலைகளை நிறுத்திறது நல்லது.

தினக்குரல் ஞாயிறு வாரமலரில் மறுபக்கம் பகுதியில் கோகர்ணன் அவர்கள் எழுதிய ஆக்கத்தை இங்கு தருகிறேன் அன்பான உறவுகளே ஒரு தரம் வாசியுங்கள்

marupakkamjg2.jpg

தமிழன்பன் உண்மையிலே ஞாயிற்றுக்கிழமை வாசித்தேன் ஆனால் அதை இணைப்பதற்குரிய முறை தெரியவில்லை இணைத்தமைக்கு நன்றி !

அத்துடன் எம்மில் பலபேர் நம்மில் உள்ள பிழைகள் அல்லது தவறுகள் பற்றி கதைப்பதற்கு அல்லது அதுசம்பந்தமாக முடிவnடுப்பதற்கு தயங்குகின்றார்கள் குறிப்பாக சில ஊடகங்கள் நம்பிக்கை ஊடு;டுவதற்கு பதிலாக அதீத நம்பிக்கை ஊட்டுவது எந்த விதத்திலும் நன்றாக இருக்காது.

ஏன் இன்னமும் சர்வதேசம் தமிழத்தை அங்கீகரிப்பதற்கான வாசல்படியில் வந்து நிற்பதாகவே கற்பனையில் மிதந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நிலமைகள் வேறாக இருப்பது வேதனைக்குரியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.