Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழருக்கு எங்கும் பாதுகாப்பில்லை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசுக்கு பாதுகாப்பளிக்க 3000 இந்திய ஜவான்களும் அவர்களின் படைக்கலங்களும் கொழும்புக்கு விரைந்துள்ள நேரத்தில்..

இந்திய இறையாண்மைக்குள் வாழும் தமிழர்களுக்கு இக்கதி...

---------------

இலங்கை கடற்படை தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர் படுகாயம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரின் சித்திரவதையில் சிக்கி ராமேஸ்வரம் ம்ீனவர் படுகாயமடைந்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் மீண்டும் ஒரு கண்ணீர் கதை. இயற்கை மரணம் என்பதை விட இலங்கை கடற்படையின் வெறிக் கரங்களில் சிக்கி இறக்கும் நிலையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நேற்று மேலும் ஒரு அடி விழுந்தது.

ராமேஸ்வரத்திலிருந்து 722 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். மீனவர்களை சுற்றி வளைத்தனர்.

சரமாரியாக மீனவர்களை நோக்கி சுட்டனர். இதில் ஒரு குண்டு படகின் மீது பட்டு, மாரீஸ் என்பவரின் முதுகில் பாய்ந்தது. இதில் அவர்காயமடைந்தார்.

அத்தோடு நிற்காத கடற்படையினர், மாரீஸ் இருந்த படகில் இறங்கி அங்கு மீன்களை அள்ள பயன்படுத்தப்படும் கட்டைகளால் மாரீஸ் உள்ளிட்ட மீனவர்களை சரமாரியாக தாக்கினர். ஒரு வெறி பிடித்த வீரர், தனது பூட்ஸ் காலால் மாரீஸை தாறுமாறாக மிதித்தார். இதில் மாரீஸ் படுகாயமடைந்தார்.

பின்னர் அந்தப் படகில் இருந்த நான்கு மீனவர்களையும் கடலில் குதிக்குமாறு துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர். இதையடுத்து நான்கு பேரும் கடலில்குதித்தனர். நடுக்கடலில் பரிதவிப்புடன் அவர்கள் நீச்சலடித்தபடி போராடினர்.

அதன் பின்னர் நான்கு பேரையும் படகில் ஏற்றிய கடற்படையினர் இனிமேல் இந்தப் பக்கம் வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினர். அதன் பின்னர் மாரீஸுடன் மீனவர்கள் கரைக்கு விரைந்தனர். ராமேஸ்வரம் மருத்துவமனையில் தற்போது மாரீஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

தட்ஸ்ரமிழ்.கொம்

Edited by nedukkalapoovan

உங்களுக்கு வேற வேலையில்லை.

நாராயணன் மலையாளி, மேனன் மலையாளி, அவர்கள் ஏன் தமிழர்களை பற்றி கவலைப்படுகிறார். அதுவும் கலைஞர் மாதிரி மௌனமாக இருக்கும் ஒரு தலைவர் தமிழனுக்கு கிடைத்த பின்னர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.