Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊடக அடக்குமுறை அராஜகம் ஜனநாயகத்துக்குச் சாவுமணி

Featured Replies

ஜனநாயகத்தின் பெயரால் அராஜகம் அளவு மீறி அரங் கேறும் தேசமாக மாறி வருகின்றது இலங்கைத் தீவு.

ஜனநாயகத்தின் நான்காவது காவலர்கள் என்று கூறப்படும் ஊடகவியலாளர்களை, வன்முறை அராஜ கங்கள் மூலம் குரூரமாக அடக்கி, அவர்களின் குரல் வளையை ஒடுக்கும் திட்டமிட்ட "அரச பயங்கரவாதம்' இந்தத் தேசத்தின் அன்றாட வழக்கமாகி விட்டது.

இம்முறை இலங்கைப் பத்திரிகை நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரும், இராணுவ விடயங்கள் பற்றிய உள்வீட்டுத் தகவல்களை நடுநிலையில் நின்று கட்டுரைகளாக வரைபவரும், பல தரப்பினராலும் அதி கம் மதிக்கப்படுகின்றவருமான நாமல் பெரேரா இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றார். அவருடன் கூட அச்சமயம் பயணம் செய்த பிரிட்டிஷ் தூதரகத்தில் அரசியல் அலுவலராகப் பணிபுரிகின்ற மகேந்திர ரட்ணவீரவும் கடும் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கின்றார். இவரும் பத்திரிகை வட்டாரங்களில் ஒரு நடுநிலை ஊடகவிய லாளராக மதிக்கப்படுகின்றவர்.

ஜனசந்தடி மிக்க கொழும்பு நகரின் மத்தியில் அலுவலக நேரம் முடிந்து, வீதிகளில் ஆள்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருக்கையில் வெள்ளை வானிலும், மோட்டார் சைக்கிள்களிலும் கூட்டமாக வந்து ஓர் ஊடகவியலாளரைப் பலரும் பார்த்திருக்கக் கடத்த முயலும் அட்டகாசம் இடம்பெற்றிருக்கின்றது. சம்பந்தப் பட்ட ஊடகவியலாளர் பயணம் செய்த காரின் கதவுகள் இறுக்கி மூடப்பட்டிருந்தமையால் அவற்றைத் திறக்க முடியாத குண்டர்கள் காரின் கண்ணாடிகளை உடைத்து அதன் வழியாக அவரை இழுத்தெடுக்கப் பார்த்திருக் கின்றார்கள். சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் மசியாத தால் அவரைத் தாக்கிக் காயப்படுத்திவிட்டுத் தாம் வந்த வாகனங்களிலேயே தப்பிச் சென்றிருக்கிறார்கள். இவ் வளவு கொடூரங்களையும் புரிந்தவர்கள் எங்கும் வழி மறிக் கப்படாமல் சாவகாசமாகத் திரும்பி விட்டனர்.

தெற்கில் குறிப்பாகக் கொழும்பில் ஊடகங்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பெரும் அடக்கு முறையின் மற்றொரு அங்கமே இது.

வழமைபோல, குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் போகும், தொடர் வன்முறைக் கொடூரத்தின் ஓர் அத்தியாயமாக இந்தத் தாக்குதலும் பதிவு செய்யப்படுவதுடன் விடயம் அடங் கிப் போகும். அவ்வளவுதான்.

அதேசமயம், ஊடகவியலாளர்களின் குரலை அடக் கும் மற்றொரு கொடூரம் இன்னொரு புறத்தில் தொடரும்.

"பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்று பாஞ்சாலி சபதத்தில் பாரதி கூறியமை போல

ஆட்சி பீடத்தின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களுக்கு இதுதான் கதி என்ற சாத்திரம் இந்தத் தேசத்தில்.

இப்படி ஆட்சி அதிகாரத்தின் அராஜகங்களை அட் டூழியங்களை அவலங்களை ஊழல், தவறுகளை பரகசியப்படுத்தும் ஊடகவியலாளரை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடியாத அதற்குத் திராணியற்ற அதற் கான அடிப்படை நியாயம் ஏதும் கொண்டிராத ஆட்சித் தரப்பு, அவர்களை வன்முறை அராஜகம் மூலம் அழித் தொழித்து, அடக்கும் அட்டகாசத்திலும், அட்டூழியத்தி லும் இறங்கியிருக்கின்றது.

தென்னிலங்கையில் அடுத்தடுத்து ஊடகங்களுக்கு எதிராகக் கட்டவிழும் வன்முறைகளைச் சீர்தூக்கிப் பார்ப் பவர்களுக்கு இந்தக் கொடூரத்தின் பின்னால் இருப்ப வர்களை பேனாக்களை ஆயுதமுனையில், அதுவும், தங்களை உருக்காட்டாமல் ஒளிந்தபடி அடக்கமுனை யும் "வீரமற்ற கோழைகள்' யார் என்பதை ஊகித்தறி வது அப்படி ஒன்றும் கஷ்டமல்ல.

இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொரு விடயத்தையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானது.

ஊடகவியலாளர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடூரங்களை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் மட்ட உபகுழு என்ற ஒன்றை ஆரவார மாக நியமித்து சர்வதேசத்தின் காதில் பூச்சுற்ற அரசு அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.

அந்த அமைச்சர்கள் மட்ட உபகுழு 24 மணி நேரமும் தனது அலுவலகத்தைத் திறந்து வைத்துக்கொண்டு பணியாற்றுவதாகக் கூறுகின்றது. அந்த உபகுழு இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் காத்திரமான என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது என்பதை சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டுகின்றமை போல அனைத் துத் தரப்பினரும் கண்ணுக்குள் எண்ணெய் விட்டுக் கொண்டு பார்த்திருக்கின்றார்கள்.

இப்படித்தான் நாட்டில் ஆள்கள் வல்வந்தமாகக் கடத்தப்படுதல், காணாமற் போகச் செய்யப்படுதல், கப்பம் அறவிடல் போன்ற அட்டூழியங்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் மட்ட உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதுவும் பத்தோடு பதினொன்றாக உயிர்வாழும் அமைப்பாகத் தன்னைக் காட்டிக்கொண்ட தைத் தவிர இவ்விடயத்தில் வேறு பயனுள்ள எந்த நடவடிக்கையையும் எடுத்ததாக இல்லை. அதுவும் கூட, சர்வதேசத்தின் கண்ணில் மண்ணைத் தூவும் வகையில் அத்தகைய ஆள்கடத்தல் கொடூரங்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்க அரசுப்பீடம் முனைப்பாக உள்ளது என்று சர்வதேச சமூகத்தின் காதில் பூச்சுற்றுவதற்கு மட் டும் உதவும் வகையில் அமைந்ததோடு போய்விட்டது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான இத்தகைய அடக்குமுறைக்கு ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு அரச பயங்கரவாதத்துக்கு ஆப்பு வைப்பது எப்படி என்று தெரியாமல் நாகரிக சமுதாயம் தடுமாறிக் கொண்டி ருக்கின்றது.

நன்றி உதயன் இணையம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.