Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தசாவதாரம் என்ற குருவி பார்ட் - 2 விமர்ச்சனம் !

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ... கமல் பத்து வேடத்துல நடிக்கிறார் , எழுபது கோடி பொருட் செலவு ... இருந்தாலும் எப்பவும் போல மற்ற எல்லா படங்களையும் போல இது ஒரு சாதா தமிழ் படம் தான் .

இப்படி எக்க சக்கமா செலவு பண்ணி 'உலக தரம்' வாய்ந்த படம் கொடுக்க மெனக்கெடும் நடிகரோ அல்லது டயரடக்கரோ எதற்காக கமலுக்கு பத்து கதா பாத்திரம் கொடுக்க வேண்டும். கமலை தவிர வேற யாருக்கும் நடிக்க வராதா???... சும்மா எல்லாத்தையும் நாமே செய்வோம்-தர வெட்டி பெருமைய தவிர வேறொன்றும் இல்லை.

உதாரணம், படம் முடிவில் கடைசியாக உணர்ச்சிவச பட்டு பேசும் தொன்நூத்தி அஞ்சு வயசு பாட்டி மனம் உருகும் பேச்சு கூட - அந்த பாட்டி கமல் தான் என்பதால் அந்த கட்சி மனதை சற்றும் பாதிக்கவில்லை. அதுவே மற்றொரு உண்மையான தொன்நூத்தி அஞ்சு வயசு பாட்டியா இருந்தால் நம்மிடம் அது ஏற்படுத்தும் உணர்ச்சிகள மிகவும் அதிகமாக இருந்திருக்கும்.

படத்தில் வரும் மற்றொரு பாட்டி - அசின். அவர் சதா லொட லொட என்று பேசி-கொன்றிருக்கிறார். அவர் வரும் பேச்சுகள் சலிப்பை தருகின்றன.

கமல் அமரிக்காவில் அம்பது அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து குதிக்க்றார்; விழும்பொழுது சரக்கு ஏற்றி செல்லும் லாரி மேல் விழுகிறார். அந்த சரக்குடன் அவர் விமானத்தில் சரக்கு ஏற்றப்படும் பகுதியில் ஏற்றபடுகிறார். கேபின் பிரஷர், ஆக்சிஜன் எதுவும் இல்லாமல் அதிலிலேயே அமெரிக்கா வில் இருந்து இந்திய வரை பயணிக்கிறார். பின்னர் அவர் வில்லனிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்து ஓடும் பொழுது, பாலத்தில் இருந்து குதிக்கிறார். மீண்டும் அவர் விழும் இடம் - மற்றொரு லாரி. அப்புறம் அவர் வில்லனால் வண்டியில் துரத்தப்படும் பொழுது, தள்ளு வண்டியில் பயணிக்கிறார். அந்தோ பரிதாபம், எப்பவும் போல, தள்ளு வண்டி சென்றவுடன் ரயில் வே கேட் பூட்டபடுகிறது. வில்லன் ஆவலுடம் காத்திருக்க, கமல் அசின் மற்றும் சாமி சிலை உடன் ஓடும் ரயிலில் தொற்றுகிறார். பின் ஓடும் ரயிலில் இருந்து குதிக்கிறார். மற்றொரு முறை கமல் அசினுடன் மோட்டார் பைக்கில் பயணிக்க, அது மோதி லாரிக்கு அட்டையில் பயணம் செய்கிறார். நான் குருவி படம் பாக்குற தேட்டருக்கு வந்துட்ட்னானு ஒரு நிமிஷம் எனக்கு டவுட் ஆய்டிச்சு.

படத்தில் ஒரு காட்சியில் கமல் குரங்கை வைத்து ஆராய்ச்சி செய்கிறார். எனது பக்கத்து சீட் குழந்தை அதன் அம்மாவிடம் "அம்மா இந்த குரங்கும் கமலாமா?" என்று கேட்டதை கேட்டு அரங்கமே சிரித்தது .

அமெரிக்காவில் ஒருவர், கமல் கண்டுபிடிக்கும் விச மருந்து திட்டத்தை வாங்க லஞ்சம் கொடுக்கிறார். அங்கும் லஞ்சம் பெட்டியில் வைத்து கட்டு கட்டாக அமெரிக்க டாலராக கொடுக்க படுகிறது !!!

நூறு பேர் சேர்ந்து அசினை கற்பழிக்க முயல்வது, அவர்களை கமல் பந்தாடுவது, லிப்ட் டில் கமல் வைத்த்ருக்கும் பெட்டியை மற்றொருவர் தவறுதலாக அவருக்கே தெரியாமல் எடுத்து செல்லுவது , வில்லன் கமல் நூறு கிலோ மீட்டர் ஓடினாலும், பைக், கார் எல்லாவற்றை ஒட்டி மோதினாலும், நூறு மாடியில் இருந்து குதித்தாலும் அனாயசம்க எந்த அடியும் இல்லாமல் - முக்கியமா சன் கிளாஸ் கூட கீழே விழுகாமல் ஜாலியாக அடுத்த அடிக்கு ரெடி ஆவது ....இப்படி எந்த வகையிலும் இது மற்ற மசாலா படங்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் கடுப்படிக்கிறது .

அதுவும் வில்லன் கமல் - அபோகாளிப்டோ - காட்சிகளை நினைவு படுத்துகிறார். ஓடி ஓடி விஞ்ஞானி கமலை துரத்துகிறார். தான் செத்தாலும் பரவாயில்லை என, விரட்டுகிறார்.

விஞ்ஞானி கமல்: "இந்த மருந்து தப்பி கொஞ்சம் சூட இருக்கு. அத கொஞ்சம் குளிரான எடத்துல வைக்கணும். எதாவது ஐடியா கொடேன்

பெண்: பிரிஜ்ள வச்சிடலாமே .

விஞ்ஞானி கமல்: வெறி குட் ஐடியா.

மொத அஞ்சு பத்து நிமிசம் மட்டும் படம் சூப்பருங்க !

அப்புறம் தெலுகு மாதிரி தமிழ் பேசும் கமல் கலக்கல்.

அப்புறம் ஒரு கமல் முஸ்லீம், ஒரு கமல் சீக், ஒரு கமல் ஹிந்து, ஒரு கமல் கிறிஸ்டியன் ...இப்படி மத நல்லிணக்க மேட்டர் வேற. அப்புறம் ஜார்ஜ் புஷ் அமெரிக்காவில் காரில் பயணம் செய்யும் பொழுது ரோட்டில் ரெண்டு பக்கமும் மக்கள் கூட்டமாக நின்று அவருக்காக கை அசைக்கிறார்கள். ஜார்ஜ் புசுக்கு நம்ம ஊர் கலாச்சாரம் கூட கற்று கொடுக்கப்பட்டு விட்டது ...

இப்படி பத்து கமல் இருக்குரதாலா, எல்லா கமலுக்கும் ஜோடியா, மொத்தம் பத்து பொண்ணுங்க இருந்தா படம் நல்லா இருந்திருக்கும் !!

http://manvettiyan.blogspot.com/2008/06/2.html

தசாவதாரத்தில் கதை இல்லை-கமல்

தசாவதாரம் படத்தில் கதை இருப்பதாக நான் ஒன்றும் சொல்லவேயில்லையே... நான் போட்ட பத்து வேடங்களுக்காக உருவாக்கப்பட்ட படம்தான் தசாவதாரம், என்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன்.

தசாவதாரம் படத்துக்கான பப்ளிசிட்டி விசிட்டாக சமீபத்தில் கேரளாவுக்கு வந்த கமல்ஹாசன், கொச்சியில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவர் கூறியதாவது:

தசாவதாரம் படத்தில் கதை இல்லை எனக் குறைபட்டுக் கொள்வபவர்களுக்காக ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். இந்தப் படத்துக்காக கதை என்று எதையும் நான் எழுதவில்லை. கதையே இல்லாத படம்தான் தசாவதாரம்.

எனது பத்து வேடங்களுக்காக எடுக்கப்பட்ட படம் தசாவதாரம். முதலில் என் மனதுக்குள் 10 வேடங்கள் வந்தன. அதை அப்படியே டெவலப் செய்தோம். ஒரு பொதுவான லிங்க் கிடைத்தது. அதை கதை என்றும் சொல்லலாம். பின்னர் மாதக் கணக்கில் இந்தக் கேரக்டர்களை செம்மைப் படுத்தினோம். இடையில் இதற்காக நாங்கள் பட்ட கஷ்டங்கள் ஏராளம். படம் வெளியாகிவிட்டது. நீங்களும் சந்தோஷமாக இருக்கிறீர்கள். அது போதும்...

இந்தப் படத்தில் பஞ்தசாபி பாடகர் கேரக்டர் பற்றி நிறைய விமர்சனங்கள். ஒரு துப்பாக்கி குண்டு எப்படி அவரது தொண்டையிலிருந்த கேன்சரை அகற்றும் என்று. இந்த விஷயத்தை நான் பிடித்ததே எங்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய வாழ்க்கைச் சம்பவத்திலிருந்துதான்.

எம்ஜிஆர் அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட போது அவருக்கு குரல் போய்விடும் என்றார்கள். ஆனால் அவர் முன்னிலும் வேகமாகப் பேசவில்லையா, நடிக்கவில்லையா...

அதுபோன்ற ஒரு நிகழ்வு இது என்று எடுத்துக் கொள்ளுங்களேன்...

இந்தக் காட்சியைப் பற்றி வேறு ஒரு இயக்குநரிடம் முதலில் சொல்லி ஆலோசனைக் கேட்டேன். ஆனால் அவர் இதை ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் என் நண்பரும் படத்தின் இயக்குநருமான கே.எஸ். ரவிக்குமார் ஒப்புக் கொண்டார். இந்த ஐடியா பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகும் என்றார். அப்படியே நடந்த்து.

இந்தப் படத்தின் வசூல் நிலவரம் குறித்து நான் என்னவென்று சொல்வது... என் வாழ்க்கையில் இதுவரை இப்படியொரு பெரிய வசூலைக் கண்டதே இல்லை.

இனி என் அடுத்த இலக்கு மர்மயோகி. இந்தப்படம் முழுக்க முழுக்க டிஜிட்டலில் எடுக்கப்பட உள்ளது. வெளிநாட்டுக் கலைஞர்கள் பலர் பங்கேற்கும் மிகப் பெரிய படம் இது, என்றார் கமல்.

மலையாளத் திரையுலகில் தற்போது நிலவும் சண்டைகள், குழப்பங்கள் குறித்து பல நிருபர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பிய வண்ணமிருந்தனர்.

அதற்கு பதிலளித்த கமல், தொடர்ந்து படம் எடுத்தால்தான் இதுபோன்ற அமைப்புகள் உயிருடன் இருக்க முடியும் அதைப் புரிந்து கொண்டால் சரி, என்றார் தன் ஸ்டைலில்.

நெத்தியடி!

http://thatstamil.oneindia.in/movies/inter...aram-kamal.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.