Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எந்த நாட்டுச் சட்டத்துக்கும் விரோதமாக நாம் திரளவில்லை என்ற செய்தியுடன் எமது உரிமையை ஓங்கி ஒலிப்போம்: யோ.செ.யோகி

Featured Replies

எந்த நாட்டுச் சட்டத்துக்கும் விரோதமாக நாம் திரளவில்லை என்ற செய்தியுடன் எமது உரிமையை ஓங்கி ஒலிப்போம்: யோ.செ.யோகி

[சனிக்கிழமை, 05 யூலை 2008, 05:09 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]

எந்த நாட்டுச் சட்டத்துக்கும் விரோதமாக நாம் திரளவில்லை என்ற செய்தியுடன் எமது உரிமையை ஓங்கி ஒலிக்கச் செய்வோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் கடந்த செவ்வாய்க்கிழமை (01.07.08) ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு அவர் வழங்கிய நேர்காணல்:

பொங்கு தமிழ் நிகழ்வுகள் புலம்பெயர் தமிழர்கள் வசிக்கும் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஒரு விடுதலைப் போராட்டத்தில் பரப்புரை என்பது எவ்வளவு தூரம் முக்கியத்துவம் வாய்ந்தது?

பொங்கு தமிழ் நிகழ்வு இரண்டு பரிமாணங்களைக் கொண்டது. வெவ்வேறு நாடுகளில் நடத்தப்படினும்கூட உலகத்திலுள்ள தமிழர்கள் ஒன்றுகூடி தங்களுடைய பலத்தை தாங்களே அறிந்துகொள்ளும் ஒரு நிகழ்வாக - ஒரு விடயத்தில் எவ்வளவு தூரத்திற்கு ஒன்றுபட்டு நிற்கின்றோம் என்பதை அறிந்துகொள்ளும் நிகழ்வாக - இதனை பார்க்கமுடியும். அடுத்து, இவர்கள் தமது பலத்தை உலகத்திற்கு அறிவிக்கும் நிகழ்வாகவும் இது பார்க்கப்படுகிறது.

பரப்புரையை மேற்கொள்பவர்கள் அதனை மீண்டும் மீண்டும் செய்யும்போதுதான் - அது அரசாக இருந்தாலும் சரி அல்லது நாட்டு மக்களாக இருந்தாலும் சரி அல்லது பொதுவாக ஒரு நாடு குறித்த திட்டத்தை தொகுப்பவர்களாக இருந்தாலும் சரி - அவர்களது கவனத்தை ஈர்க்கின்றனர்.

நாங்கள் இத்தகைய பரப்புரையை தொடர்ச்சியாக மேற்கொள்ளவேண்டிய தேவையிருக்கிறது. இத்தகைய பரப்புரையை மேற்கொள்ளும்போது - நாங்கள் ஒன்றுபட்டு, ஒருகுரலாக எழுந்து நிற்கிறோம் என்பதைக் காட்டுகின்றபோது - உலகம் நிச்சயமாக அதனை கவனத்தில் கொள்ளும். உலகம் மட்டுமில்லை, எமது அயல்நாடுகளும் கவனத்தில் கொள்ளும்.

அதேநேரம், இத்தகைய பரப்புரைகள் தமிழீழத்தில் இருக்கும் மக்களுக்கு புத்தூக்கத்தை தருகின்ற ஒரு நிகழ்ச்சியாக, எங்களோடு எங்கள் மக்களும் எங்களுக்கு பின்னால் - சிக்கல்களுக்கு மத்தியில் - ஒன்றுபட்டு நிற்கிறார்கள் என்ற உணர்வைத் தருகின்ற ஒரு நிகழ்ச்சியாக அமைகின்றது.

அந்தவகையில் இது ஒரு சிறப்பான நிகழ்ச்சி, பொதுவான நிகழ்ச்சி, எல்லோருக்கும் பொதுவாக தமிழ்மக்களுக்கு பயன்தரும் நிகழ்ச்சி என்றே நாங்கள் பார்க்கின்றோம்.

பொங்கு தமிழ் நிகழ்வு முதன்முதலில் என்ன காரணத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது?

எங்களுடைய தன்னுரிமைக்கான கோரிக்கையை முன்வைத்து, தமிழீழ விடுதலைப் புலிகள்தான் மக்களுடைய காவலர்கள், அவர்கள் ஒரு விடுதலை அமைப்பு என்பதை உலகம் முழுவதும் உணர்த்துவதற்காகவும் அதற்கும் அப்பால் இந்த மண்ணில் மிகப்பெரியதொரு இனப்படுகொலை நடக்கிறது என்பதை உணர்த்துவதற்காகவும் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

உலகத்தைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலைப் புலிகளை அது கொச்சைப்படுத்துவதை இன்று பார்க்கிறோம், தன்னுரிமையை மறுத்து நிற்பதை பார்க்கின்றோம்.

நெல்சன் மண்டேலாவைக்கூட அண்மையில்தான் பயங்கரவாதப்பட்டியலில் இருந்து நீக்கினார்கள். இப்படியான செயற்பாடுகள் வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துவதாகவே உள்ளன.

தமிழ் மக்கள் தன்னுரிமையை வேண்டுகிறார்களா இல்லையா என்பது குறித்து வேண்டுமானால் ஒரு கருத்துக்கணிப்பை நடத்திப் பார்க்கட்டும். எழுந்தமானத்திற்கு பேசுவதைவிட்டு, விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் பேராளர்களா? இல்லையா என்பதை ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி பார்க்கட்டும்.

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் உரிமைக்காகத்தான் போராடுகிறோம். ஆகவே, தமிழீழ விடுதலைப் புலிகள்தான் எங்களுடைய காவலர்கள் என்பதை நாங்கள் ஒன்றுபட்டு கூறும் ஒரு நிகழ்வாகத்தான் பொங்கு தமிழ் நிகழ்வை பார்க்க வேண்டும்.

களத்திலுள்ளவர்களின் பரப்புரைக்கான வீச்செல்லை மட்டுப்படுத்தப்பட்டுள்ளபோத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.