Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொறுப்புணர்ந்து இப்போதாகிலும் பொங்கி எழுவாரா கருணாநிதி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2008-07-06

பொறுப்புணர்ந்து இப்போதாகிலும் பொங்கி எழுவாரா கருணாநிதி?

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தாம் உலகத்தமிழர்களின் தலைவர்தானா அல்லது இந்தி யாவில் ஒரு மாநிலத்தில் அவ்வப்போது ஆட்சிக்கு வந்து போகும் வெறும் சராசரி அரசியல்வாதியா என் பதைத் தெளிவுபடுத்துவதற்கு ஓர் அமிலச்சோதனை யைப் பிரேரித்திருக்கின்றார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்.

பிறதமிழக அரசியல் கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஆத ரிக்க கலைஞர் முன்வரவேண்டும் என்ற கோரிக் கையைத் தமிழகத்தின் முன்னணி சஞ்சிகையான குமுதத்தின் ஊடாக முன்வைத்ததன் மூலமே இந்த அமிலச் சோதனையை அவர் பிரேரித்திருக்கின்றார்.

ஈழத்தமிழர்களின் இருப்புக்கான கௌரவ வாழ்வுக் கான நியாயமான உரிமைகளுக்கான இந்த நீதியான போராட்டத்திற்கு தார்மீக ஆதரவுக் குரல் கொடுக்க வேண்டிய கடப்பாடு தமிழக முதல்வருக்கு உண்டு என்ற பொறுப்பை இந்தப் பேட்டியில் நாசூக்காகச் சுட்டிக் காட்டியிருக்கின்றார் நடேசன்.

கலைஞர் கருணாநிதியின் தமிழுணர்வு சந்தேகத் துக்கு அப்பாற்பட்டது என்பதையும் ஈழத்தமிழர் மீது கரிசனை உடையவர் கலைஞர் கருணாநிதி என் பதையும் புலிகளின் அரசியற் பொறுப்பாளர் வெளிப் படுத்துகின்றார்.

இப்படி கலைஞர் குறித்து, குறிப்பிடுவதற்கு உரி மையும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பொங்கிட எழுங்கள் என்ற அவரைப் பார்த்துக் கோருவதற்கான நெருக்கமும் உடையவர் நடேசன் என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

எண்பதுகளின் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழகத்திலும் செயற்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகள் சார்பில் கலைஞருடன் தொடர்பாடல் நடத்தி வந்த முக்கிய புலிகளின் பிரமுகர் நடேசன் அப்போது தமிழக எதிர்க்கட்சித் தலைவராக விருந்த கலைஞருக்கு மிகநெருக்கமானவராகவும், விருப்புக்குரியவராகவும் இருந்தார் நடேசன்.

அதுமட்டுமல்ல தொண்ணூறுகளின் முற்பகுதி யில் ராஜீவ் படுகொலைக்கு முன்னர்இந்தியப் படைகள் இலங்கையிலிருந்து திரும்பிய பின்னர் அச்சமயம் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியோடு புலிகள் சார்புப் பிரதிநிதியாக நேரடிப் பேச்சுகளிலும், தொடர்பாடல்களிலும் ஈடுபட் டவர் நடேசன். அந்தவகையில் கலைஞருக்கு நன்கு பரிச்சயமானவரான நடேசன் இக்கோரிக்கையை முன் வைத்திருக்கின்றமை ஒரு முக்கிய விடயமாகும்.

தமிழுணர்வுமிக்க கருணாநிதி ஈழத்தமிழர் மீது கரிசனை உடையவர் என்று குறிப்பிடும் நடேசன், அத்தகையவர் இந்தியத் தேசிய அரசியல், மாநில அரசியல் என்ற எல்லைகளைக் கடந்து வந்து ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு உதவ வேண்டியது அத்தி யாவசியம், அந்த யதார்த்தத்துக்குக் கலைஞர் முதலிடம் கொடுக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டுகின்றார். இந்த உண்மையை உணராமல் மாநில, மத்திய அரசி யல் சகதிக்குள் சிக்கிக்கொண்டு உலகத் தமிழினத்தின் பால் உங்களுக்கு உள்ள கடமையையும் பொறுப்பை யும் தட்டிக் கழித்து விடாதீர்கள் என்று மென்மையான வார்த்தைகளில் இடித்துரைக்கின்றார் புலிகளின் அரசி யல் பொறுப்பாளர்.

சுமார் ஆயிரம் பிறை கண்டு, தமது வாழ்வின் முதிர்ச் சியில் நிற்கின்றார் கலைஞர். எண்பத்தி ஐந்தாவது அகவையைப் பூர்த்தி செய்து, எழுபது ஆண்டு காலப் பொதுவாழ்வைத் தாண்டிய கலைஞரின் காவியப் பயணத்தில் அவர் இன்னும் ஈழத்தமிழருக்கு நியாயம் செய்யாதமை ஈழத்தமிழர்களுக்காக மனவுறுதி யோடும் உத்வேகத்துடனும் குரல் எழுப்பிப் போராடி நீதி பெற்றுக் கொடுக்காமை என்ற பெருங் குறைபாடு நீடிக்கின்றது. அந்தக் குறைவை நிறைவு செய்யக் கூடிய அரசியல் சூழ்நிலைகளும், அதிகார வரம்புகளும், சூழ் நிலை வரப்பிரசாதங்களும் இன்று கலைஞருக்கு வாய்த்திருக்கின்றன.

இந்தச் சந்தர்ப்பத்திலும் அந்த வரலாற்றுக் கடமையை நிறைவு செய்து முயற்சிக்காமல் உரிய எத்தனம் எடுக் காமல் மாநில, மத்திய அரசியல் சகதிக்குள்ளிருந்து வெளியே வரமுடியாத சராசரி அரசியல்வாதியாக அவர் இயங்குவாராயின் சரித்திரம் அவரைப் போற்றத்தவறும்; உலகத் தமிழினத் தலைவராக உயர்வதற்குக் கிட்டிய வரலாற்றுச் சந்தர்ப்பங்களைக் குறுகிய அரசியல் இலக்கு களுக்காகக் கோட்டைவிட்ட அரசியல் சந்தர்ப்பவாதி யாக அவரை அடையாளம் கண்டு தூற்றும்.

இலங்கை விவகாரத்தில் உண்மையான நண்பன் யார், கெட்ட எதிரி யார் என்ற யதார்த்தத்தைப் புரியாமல் இந்திய மத்திய அரசு தொடர்ந்தும் தவறிழைத்துக் கொண் டிருக்கின்றது என்பதே ஈழத் தமிழர்களின் பெரும் ஆதங்கம்.

இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசை தெளி வான பாதையில் இடித்துரைத்து, வழி நடத்தும் அதி காரமும், செல்வாக்கும், அரசியல் அந்தஸ்தும் இருந்தும் கூட, வளாவிருக்கும் கலைஞரின் போக்கும் ஈழத்தமிழர் களுக்கு விசனம் தருகின்றது.

அரசியல் பயன் எதிர்பாராமல் ஈழத்தமிழர்களுக்காக வும், பொங்கி எழுவாரா இந்தக் காவிய நாயகர் கலை ஞர்? அதன்மூலம் உலகத்தமிழினத்தின் தலைவர் தாமே என்பதை நிரூபிப்பாரா அவர்?

http://www.uthayan.com/தனைச் செய்ய அவருக்குள்ள காலம் குறுகியது. அது போனால் மீளாது.

  • கருத்துக்கள உறவுகள்

திரு எம் ஜி இராமச்சந்திரன் அவர்கள் உயிருடன் இருந்த போது, ஈழத்தமிழர்கள் திரு எம் ஜி இராமச்சந்திரன் அவர்களுடன் மிக நெருக்கமாக இருந்தார்கள். திரு எம் ஜி இராமச்சந்திரன், திரு கருணாநிதியின் முக்கியமான அரசியல் போட்டியாளர்.

திரு எம் ஜி இராமச்சந்திரன் காலமான பிறகு, ஈழத்தமிழர்கள் திரு வை கோபாலசாமி அவர்களுடன் மிக நெருக்கமாக இருக்கிறார்கள். திரு கருணாநிதிக்கு, திரு வை கோபாலசாமி பெரும் சவாலாக இருந்து வந்தார். ஈழத்தமிழர்கள் திரு எம் ஜி இராமச்சந்திரனையும் திரு வை கோபாலசாமியையும் விரும்பி ஆதரித்த அளவுக்கு, திரு கருணாநிதி அவர்களை விரும்பி ஆதரித்ததாக தெரியவில்லை.

திரு கருணாநிதி அவர்கள், தன்னை அடுத்து தனது வாரிசுகளான திரு ஸ்ராலினும் மதிப்பிற்குரிய கனிமொழியும் தமிழக அரசியலில் முதன்மை பெற வேண்டும் என்று விரும்புவதாக தெரிகிறது. ஈழத்தமிழர் மத்தியில் திரு வை கோபலசாமிக்கு உள்ள ஆதரவு, திரு ஸ்ராலினுக்கோ மதிப்பிற்குரிய கனிமொழிக்கோ இருப்பதாக தெரியவில்லை. உதாரணமாக, ஈழத்தமிழர்கள் பல்வேறு நாடுகளிலும் தமது நிகழ்வுகளுக்கு திரு வை கோபலசாமி அவர்களை பல முறை அழைத்திருக்கிறார்கள். திரு கருணாநிதிக்கோ திரு ஸ்ராலினுக்கோ மதிப்பிற்குரிய கனிமொழிக்கோ இவ்வாறான அழைப்புகள் விரும்பி விடுக்கப்பட்டதா?

"ஆடுற மாட்டை ஆடிக்கறக்க வேண்டும், பாடுற மாட்டை பாடிக்கறக்க வேண்டும்" என்பது அர்த்தமுள்ள தமிழ் பழமொழி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

. உதாரணமாக, ஈழத்தமிழர்கள் பல்வேறு நாடுகளிலும் தமது நிகழ்வுகளுக்கு திரு வை கோபலசாமி அவர்களை பல முறை அழைத்திருக்கிறார்கள். திரு கருணாநிதிக்கோ திரு ஸ்ராலினுக்கோ மதிப்பிற்குரிய கனிமொழிக்கோ இவ்வாறான அழைப்புகள் விரும்பி விடுக்கப்பட்டதா?

"ஆடுற மாட்டை ஆடிக்கறக்க வேண்டும், பாடுற மாட்டை பாடிக்கறக்க வேண்டும்" என்பது அர்த்தமுள்ள தமிழ் பழமொழி.

ஒ ஒ அப்புறம் ...... அழைப்புவிடுத்தால் மட்டும் போய் கிழித்துவிடுவார்களா? :( சரி எங்களுக்கு எதுவும் செய்யவேண்டாம் உங்களுக்கு வாக்களித்து முதலமைச்சராக்கிய மீனவர்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தால் கொல்லப்படுகிறார்கள் அதுக்கு ஏதாவது செய்யுங்கோ பார்ப்பம்? அதுவுமில்லை கதைதான் இப்ப இல்லாத குறை :wub: . அதுஎன்ன மதிப்புக்குரிய கனிமொழி ? :) இவ எப்ப முளைத்தவ? அரசியலில் என்ன அனுபவம்? தமிழர்களுக்கு என்ன செய்தா ? ஏன் இவவை நாங்கள் கூப்பிடவேனும்? மனம் இருந்தால் எதையும் செய்யலாம் பொருத்தமான பழமொழி மனம் உண்டானால் இடம் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.