Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவே! இந்தக் கொடுமை ஏனோ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2008-07-09

இந்தியாவே! இந்தக் கொடுமை ஏனோ?

"குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும்' பொறுப்பற்ற போக்கில் இந்தியா செயற்படுகின்றது என்று விசனப்படு கிறார்கள் ஈழத் தமிழர்கள். இப்படி ஐந்து வாரங்களுக்கு முன்னர் இப்பத்தியில் எழுதியிருந்தோம்.

அதை உறுதிப்படுத்துவது போல நடந்து கொள்கின் றது பாரத தேசம்.

இந்தியா தனது உயர்மட்ட அதிகாரிகள் மூவரைக் கடந்த மாதம் மூன்றாம் வாரத்தில் திடுதிப்பென சத்தம் சந்தடி யின்றி விசேட விமானத்தில் கொழும்புக்கு அனுப்பிய போது, அதை அறிந்து ஆரம்பத்தில் ஈழத் தமிழர்கள் மன தில் மகிழ்ந்துதான் போனார்கள்.

தென்னிலங்கைச் சிங்களத்தின் பேரினவாதப் பிடியில் சிக்கிப் பெரும் கோரயுத்த அழிவை எதிர்கெண்டு நிற்கும் ஈழத் தமிழினத்துக்காகக் குரல் எழுப்பும் நன்னோக்கோடு, இந்தியா காய் நகர்த்துகின்றது; கடைசியாகப் புதுடில்லி ஈழத் தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை நீதிக்கண் ணோடு நோக்கத் தயாராகி விட்டது, என்றெல்லாம் ஈழத் தமிழர்கள் புளகாங்கிதம் கொண்டனர்.

ஆனால், "சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை' என் பது இப்போதுதான் அம்பலத்துக்கு வந்திருக்கின்றது. அதை உணர்ந்து, ஈழத் தமிழர்கள் வெறுப்பும், விசனமும், எரிச்சலும், ஆத்திரமும் அடைந்திருக்கின்றார்கள்.

நியாயமான வாழ்வுக்கும் நீதியோடு கூடிய உரிமைகளுக்காகவும் குரல் எழுப்பிய ஈழத் தமிழர்களை ஆயுதப் போராட்டத்தின்பால் திசை திருப்பிவிட்டு, அவர்களுக்கு அரைகுறை ஆயுதப் பயிற்சிகளை வழங்கி, பல விடுதலை இயக்கங்களை ஒரே சமயத்தில் ஒன்றுக்கொன்று போட்டியோடும் உள் முரண்பாடுகளோடும் உருவாக்கி உலவ விட்டதிலிருந்து

அரைகுறை அவியலாக இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் மாகாண சபை என்ற மாய மானைத் தோற்றுவித்து, அதைக் காட்டி, அந்தத் திட்டத்தைத் தமிழர்கள் மீது வல் வந்தமாகத் திணித்தமை முதல்கொண்டு

இப்போது உயர்மட்டக் குழுவைக் கொழும்புக்கு அனுப்பி தற்போதைய இலங்கை அரசுத் தலைமைக்கு "செமடோஸ்' கொடுத்ததாகக் காட்டிக் கொண்டமை வரை யில்

இலங்கை விவகாரத்தில் புதுடில்லி செய்தவை எல்லாமே பித்தலாட்டம். தன்னுடைய பூகோள அரசியல் நலன்களை எட்டுவதற்காகவும், அவற்றை நிலைப்படுத்தி ஸ்திரப் படுத்துவதற்காகவும் அருகில் இருந்த சிறிய தேசத்திலும், அதில் வசிக்கும் சிறுபான்மையினர் உட்பட தேசிய இனங் கள் மீதும் மிளகாய் அரைத்த வேலையையே இந்தியா செய்திருக்கின்றது; தொடர்ந்தும் செய்தும் வருகின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஆயுதத் தள பாடக் கொள்வனவுக்கு இலங்கை அரசு சீனாவினதும் பாகிஸ் தானினதும் பக்கம் சாய்வதாகக் கூறி அதனைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் பண்ணிய இந்தியா, அந்த விடயத்தை வைத்துக்கொண்டே, இதுவரை சீனாவிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டிருந்த மன்னார் எண்ணெய் வள ஆய்வை மெல்லப் பிடுங்கிச் "சுவாஹா' செய்துகொண்டு விட்டது.

கொழும்புக்கு வந்த இந்திய உயர்மட்டக்குழு ஈழத் தமி ழர் பிரச்சினை குறித்து அவர்களின் நலன் குறித்து கொழும்புடன் ஆர்வம் காட்டிப் பேசுவதாக வெளியே நடிப் புக் காட்டிக்கொண்டு, தனது காரியத்தைச் சாதித்துக் கொண்டுள்ளது. எண்ணெய் வள ஆய்வு மற்றும் அகழ் வுப் பணிக்கான உரிமையைப் பிடுங்கிக்கொண்டு, தமிழர் தாயகப் பிரதேசத்தின் வளத்தைச் சுரண்டி, சூறையாடி, ஏப் பம் விடும் திட்டத்தைக் கனகச்சிதமாக முன்னெடுக்கின்றது.

இலங்கையில் இனப்போர் உக்கிரமாக நீடித்துக் கொண் டிருக்கின்றது. சம்பந்தப்பட்ட தரப்புகள் தங்களின் தாயகம் மீதான உரிமைக்கான நியாயத்தை யுத்த களத்தில் மோதி உரசிப்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இந்தச் சமயத்தில் பெரும் கொடூரப் போரின் ஆக்கிரமிப்புக்கும் அதனால் ஏற்பட்ட பேரழிவுகள் மற்றும் நலிவு களுக்கும் முகம் கொடுத்து, அடிமைத்தளையில் சிக்குண்டு அல்லற்பட்டு அவலப்பட்டபடி அந்தரிக்கின்றது ஒரு சிறு பான்மை இனம். அவர்களது தாயக பூமியிலிருந்து அவர்கள் வல்வந்தமாக விரட்டியடிக்கப்பட்ட நிலையில் அவர்களின் உள்ளூர் வளங்களைச் சூறையாடும் விதத்தில் சுரண்டல் நோக்கோடு அந்நிய சக்திகள் இதற்குள் தலையை நீட்டுவது மோசமான இழி செயலாகும். ஈன நட வடிக்கையாகும். "எரியும் வீட்டில் பிடுங்குவது லாபம்' என்ற கணக்கில் அமைந்த கொடூரமாகும்.

மன்னாரில் எண்ணெய் அகழ்வு என்ற பெயரிலும், சம் பூரில் அனல் மின் நிலையத் திட்டம் என்ற நாமத்திலும், புல்மோட்டையில் இல்மனைட் கனிவள அகழ்வு என்ற வடிவிலும் இக்கட்டுச் சமயத்தில் ஈழத் தமிழர்களின் மூல வளங்களைச் சூறையாடுவதும்

ஈழத் தமிழர்களின் தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கும் பௌத்த சிங்கள ஆட்சிப் பீடத்துடன் பேரம் பேசி, ஈழத் தமிழரின் தாயக மூலவளத்தை அபகரிப்பதும்

அதுவும் தமது தாயகத்தைக் காப்பதற்கான வாழ்வா, சாவாப் போராட்டத்தில் ஈழத் தமிழினம் அழுந்திக் கொண் டிருக்கையில் அந்தச் சுரண்டலை மேற்கொள்வதும்

நாம் முன்னர் கூறியபடி, தவிச்ச முயலடிக்கும் நடவடிக்கைதான். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் ஈனத் தனம்தான். எரிந்த வீட்டில் பிடுங்கும் அபகரிப் புத்தான். கொள்ளையிட்ட பொருளை கொள்ளைக்கார னோடு ஒப்பந்தம் செய்து கொள்வனவு செய்யும் அபத்தம் தான்.

இந்தியாவே! நொந்து போயிருக்கும் ஈழத் தமிழர்க ளுக்கு நியாயம் செய்யவேண்டிய நீதியை மறந்து, அவர்க ளது தாயக வளத்தை அவர்களது சம்மதமோ, இணக் கமோ, உடன்பாடோ இன்றி அவர்களின் இந்த நலிவு சம யத்தைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்புத் தரப்புடன் சேர்ந்து அபகரிக்கும் கொடுமை ஏனோ உனக்கு?

வர்த்தக ஒப்பந்தம், கூட்டு வியாபார முயற்சி என்ற பெயர்களில் கொழும்புடன் புதுடில்லி செய்யும் இந்த உடன்பாடும் அதைத் தொடரும் நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் பல விபரீதங்களுக்கு வித்திடும் மற்றொரு வரலாற்றுத் தவறின் ஆரம்பமாக அமைந்தாலும் ஆச்ச ரியப்படுவதற்கில்லை.

http://www.uthayan.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கையாலாகாத இந்தியா இதைதவிர வேறு என்ன செய்யும் இவர்கள் வல்லரசா :wub::) ? குள்ளநரிக்கூட்டம்

"வயித்து வலியை நம்பினாலும் --------------------- நம்பாதே"

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான தலையங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தனது உயர்மட்ட அதிகாரிகள் மூவரைக் கடந்த மாதம் மூன்றாம் வாரத்தில் திடுதிப்பென சத்தம் சந்தடி யின்றி விசேட விமானத்தில் கொழும்புக்கு அனுப்பிய போது, அதை அறிந்து ஆரம்பத்தில் ஈழத் தமிழர்கள் மன தில் மகிழ்ந்துதான் போனார்கள்.

தென்னிலங்கைச் சிங்களத்தின் பேரினவாதப் பிடியில் சிக்கிப் பெரும் கோரயுத்த அழிவை எதிர்கெண்டு நிற்கும் ஈழத் தமிழினத்துக்காகக் குரல் எழுப்பும் நன்னோக்கோடு, இந்தியா காய் நகர்த்துகின்றது; கடைசியாகப் புதுடில்லி ஈழத் தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை நீதிக்கண் ணோடு நோக்கத் தயாராகி விட்டது, என்றெல்லாம் ஈழத் தமிழர்கள் புளகாங்கிதம் கொண்டனர்.

எப்போது ஈழத்தமிழர்கள் இவரிடம் இப்படிக் கூறினார்கள்? தனது நம்பிக்கைகளையும், கனவுகளையும், ஆசைகளையும், அதன் பின்னால் வந்த ஏமாற்றத்தையும் எதற்குத் தமிழர் தலையில் கட்டப் பார்ர்க்கிறார். ஈழத்தமிழர் எவருமே இந்திய அதிகாரிகளின் வருகையை தமக்குச் சார்பானதாக பார்க்க முற்படாதபோது இவர் எதை வைத்துக்கொண்டு இப்படி எழுதுகிறார் என்று தெரியவில்லை !??????

இந்தியாவிடம் புதிதாகப் பாடம் கற்றுக்கொண்ட இவருக்கு இப்பத்தான் இந்தியாவின் உண்மை முகம் தெரிகிறது போல. இதுவரை காலமும் இவர் இந்தியா வந்து தனிநாடு பெற்றுத்தரும் என்று கனவுதான் கண்டு கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். அப்பாடா, இப்பவாவது புரிந்ததே!

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் திருந்திவிட்டினம் என்று நினைக்கவேண்டாம்

மீண்டும் யாரும் இந்தியாவிலிருந்து போயினம் என்றால்

ஆ............வென்று ...........எழுதுவினம்..........

இதெல்லாம் தன்னம்பிக்கையில்லாமல் ............

மற்றவர்கள் எடுத்து தங்கத்தட்டில் வைத்து தருவினம் வாங்குவம் என்றுநினைக்கிற ஆட்கள்.......

தன்னம்பிக்கை வரும் மட்டும் ...............

பொறுத்திருப்பம்??????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் யார் ஆட்சி செய்தாலும் ஈழத்தமிழரின் பிரச்சனையை தீர்க்க விரும்ப மாட்டார்கள். முயல்வது போல் பாசாங்கு காட்டுவார்களே ஒழிய உண்மையான மனச்சுத்தி கடுகளவும் கிடையாது. தங்களின் பதவிகளை மட்டும் தக்க வைத்துக் கொள்வார்கள்.

இந்திய அரசாங்கம் உண்மையாக ஈழத்தமிழரிற்கு விடுதலை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று விரும்பியிருந்தால் அது எப்போதோ கிடைத்திருக்கும்.

சோழியன் குடுமி சும்மா ஆடுமா???????

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தனது உயர்மட்ட அதிகாரிகள் மூவரைக் கடந்த மாதம் மூன்றாம் வாரத்தில் திடுதிப்பென சத்தம் சந்தடி யின்றி விசேட விமானத்தில் கொழும்புக்கு அனுப்பிய போது, அதை அறிந்து ஆரம்பத்தில் ஈழத் தமிழர்கள் மன தில் மகிழ்ந்துதான் போனார்கள்.

தென்னிலங்கைச் சிங்களத்தின் பேரினவாதப் பிடியில் சிக்கிப் பெரும் கோரயுத்த அழிவை எதிர்கெண்டு நிற்கும் ஈழத் தமிழினத்துக்காகக் குரல் எழுப்பும் நன்னோக்கோடு, இந்தியா காய் நகர்த்துகின்றது; கடைசியாகப் புதுடில்லி ஈழத் தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை நீதிக்கண் ணோடு நோக்கத் தயாராகி விட்டது, என்றெல்லாம் ஈழத் தமிழர்கள் புளகாங்கிதம் கொண்டனர்.

ஈழத்தமிழர்கள் 87க்குப் பிறகு அகிம்சை என்று உலகுக்குக் காட்டிக் கொண்டு உண்மையில் அகிம்சைக்கு எதிரான நாடு இந்தியா என்றதையும், உலகில் சனநாயகம் பேசிக்கொண்டு கீழ்த்தரமான வேலைகளைச் செய்யும் நாடு இந்தியா என்றதையும் உணர்ந்துள்ளார்கள். இரகுநாதன் சொல்வது போல உதயன், இவ்வளவு பட்டும் இந்தியாவை நம்பிக் கொண்டிருக்கிறதே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.