Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனநாயகமும் அதனை ஆளுகின்ற பணநாயகங்களும் - சாண்டில்யன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதி காலத்தில் ஒரு அரசன் எப்படி உருவாகின்றான்? சமுதாயத்தில் ஒரு வல்லவன், தாதா, கொள்ளைக்காறன், மக்களிடம் கொள்ளையடித்து, அதைச் சான்றியிருக்கின்ற ஊரைக் கொள்ளையடித்து, பணம் குவிந்தவுடன் தன்னைப்போல் உள்ள தோழர்களை சேர்த்து, அந்த ஊரின் மக்களை அடிமைப்படுத்துகின்றான். நாளடைவில் இந்த நாணயக்கேடு பிடித்தவன் தானே சட்டங்களை உருவாக்கி, தானே அரசன் என்று பிரகடனப்படுத்துகின்றான். மக்களோ வாழ வழி தேடி அச்சம் கொண்டு அவனையே அரசானக ஏற்றுக்கொள்கின்றார்கள். நாளடைவில் இந்தப் பயம் / அச்சம் பயபக்தியாக மாறுகின்றது. சற்றுத் தெளிவாகச் சிந்தித்தால், கொள்ளைக்காரன்/சண்டியன்/தாதா, அரசனாவதற்கு எல்லா தகுதியும் பெறுகின்றான். சரித்திரம் சொல்லும், வேறு நாட்டை ஆண்டவர்கள், அந்த நாட்டில் எவ்வளவு செல்வங்களைக் கொள்ளை அடித்துத் தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றிருக்கின்றார்கள் என்று. காலம் செல்லச் செல்ல, நாளடைவில், அரசனைக் சூழ்ந்துள்ளவர்கள் / சொந்தங்கள் அரச பரம்பரையென்று பாமர மக்களால் கௌரவிக்கப்படுகின்றார்கள். அரச பரம்பரை சமுதாயத்தில் / ஒரு இனத்தில், ஒரு பெரிய மதிப்பிற்குரிய, மக்களால் வணங்கப்படுகின்ற குடும்பமாக மாறுகின்றது. மக்களுக்காக நீதியோடு அரசாண்ட மன்னர் ஒரு சிலரை ஆண்டவன் என்று மக்கள் வணங்கத் தொடங்கி ஆண்டவன் என்ற பெயர் சூட்டப்பட்டு மக்களால் வணங்கப்படுகின்றார்கள். ஆனால், ஆய்வு செய்து பார்த்தால், இந்த அரச பரம்பரையின் அடிவேர் / ஆணிவேர், ஒரு கொள்ளைக்கூட்டமே.!

இன்றய காலகட்டத்திலும், யாழில், அன்றய மணியகாறரோ, உடையாரோ, அல்லது கவுண்டரின் பூட்டனைப் பெரிய சாதியென்று மதிப்புக் கொடுக்கின்றோமே தவிர, அவரின் தொழில் தான் அது என்று சிந்திப்பதில்லை. 20ம் நூற்றாண்டு விதானைக்கு மதிப்புக் கொடுப்போமா?. இல்லை! அவன் எந்தச் சாதியென்றுதான் ஆராய்வோம்.

உதாரணத்திற்கு: இன்றய காலகட்டத்தில், மதுரையிலோ, அல்லது தூத்துக்குடியிலோ காவல் நிலயமோ, நீதிமன்றமோ, அல்லது, மக்கள் ஆட்சி இல்லையென்றால், யார் அந்த ஊரை ஆள்வார்கள்? அந்த ஊரில் இருக்கும் அதி உயர் தாதா தான் தன்னை ஒரு குட்டி அரசனாகப் பிரகடனப்படுத்துவான். இவை ஆதி காலத்திற்கு ஒப்ப! காரணம் அவன் வாழ்வது கப்பம் சேர்க்கும் பணத்தில்தான். அவனிடம் பணம் சேர்வது, கப்பத்தினால்தான்! இதற்குத் தற்காலத்தின் வார்த்தை - தாதாவின் பாதுகாப்பு நிதி.

இலங்கையை இப்பொழுது பார்ப்போமானால்: ஆள்கடத்தி மீட்புப் பணம் கோருதல், கொள்ளை அடித்தல், பணம் வசுலித்தவுடன் கொலை செய்வது, இப்படிச் சம்பவம் நடைபெறுகின்றது. உலகத்திற்கே இவைகள் நடைபெறுகின்றது தெரியும். ஆனால் கண்டும், காணாததுபோல இலங்கை அரசாங்கம் இருக்கின்றது. சர்வ தேசமும் மௌனமாக இருக்கின்றது. காரணம் என்னவோ? சர்வதேசமே கொள்ளைக்கூட்டமா?

கருணா, பிள்ளையான், பரம்பரைப் பணக்காரரா? கருணாவிடம் கோடிக்கணக்கில் பணம் சேர்ந்தது எந்த வழியில்? இவர்கள் என்ன தொழில் புரிந்தார்கள். ஒரு பார்வையில் இவர்கள் கொள்ளை தான் அடித்தார்கள். இவர்கள் மேலே கூறியது போல கொள்ளைக்காரர்கள். எவராலும் இந்தக் கூற்றை மறுக்க முடியாது. பணம் சேர்ந்தவுடன் திருவாளர் பிள்ளையான் கிழக்கு மாகாண முதல் மந்திரி?

இன்றய மக்கள் ஆட்சியைப் பார்ப்போமா?

காமராஜர்ஜி தமிழகத்தை ஆண்ட காலம் ஒரு சரித்திரம். ஏபிரஹாம் லிங்கன் அமெரிக்காவை ஆண்ட காலம் ஒரு சரித்திரம். இன்றய காலகட்டத்தில், யாரால் ஒரு அரசியல் கட்சிக்குள் நுளைய முடியும்? பாமர யாழ் மக்கள் எதைப் பார்த்தார்கள். அரசியல் வாதியாக இருப்பதற்கு அவர் ஒரு சட்டத்தரணியாகவோ அல்லது பட்டதாரியாக இருக்கவேண்டும். அது மாத்திரம் போதுமான அலங்காரமல்ல! அவரிடம் போதுமான பொருள், பணம் இருக்கவேண்டும். அதாவது அவர் ஒரு பல லட்சம் கொண்ட ஒரு லட்சாதிபதியாக இருக்கவேண்டும்.

பண்பு, குணம், ஒப்படைப்பு, மக்களுக்காக சேவை செய்கின்ற பொறுப்புணர்ச்சி, இவை இன்றய காலகட்டத்தில் தேவையற்றது.

தமிழக அரசியலைப் படித்தால்: இங்கு அரசியலுக்குள் நுளைவதற்கு படிப்பு தேவையற்ற ஒன்று. பெரும்பான்மையான குடிமக்கள் படிப்பறிவற்றவர்கள். விழிப்புணர்ச்சியற்றவர்கள். பாமர மனித மந்தைக் கூட்டமென்று கூடச் சொல்லலாம். ஜனநாயகம்- அதிக பட்சமாக இது என்னவென்று தெரியாதவர்கள் தான் அரசியல்வாதிகளை தெரிந்தெடுக்கின்றார்கள். மக்கள் தங்களுடைய வாக்கின் மதிப்பு எவ்வளவு என்று தெரியாதவர்கள். மக்களுடைய கொள்கை என்ன? பணமோ பொருளோ எவர் கொடுக்கின்றாரோ, அவருக்குத் தன்னுடைய வாக்கு. அத்தோடு, ஒரு சண்டியன், தாதா போன்றவன்தான் அரசியலுக்குள் நுளைவதற்கு தகுதி பெறுகின்றான். எல்லா அரசியல் வாதிகளையும் இப்படி கூற முடியாது. ஆனால், பெரும்பான்மை அரசியல் வாதிகள் அப்படித்தான். முடிவில் அரசியலுக்குத் தேவையானது பணம் தான். ஆனால், படித்தவர்களிடம் பணம் இருக்குமா? உதாரணம் - ஒரு பொறியியலாளரிடம் பணம் இருக்குமா? ஒரு கணக்காளரிடம் பணம் இருக்குமா? இல்லவே இல்லை.

ஆனால், வியாபாரம் செய்பவரிடம், அதிக அளவில் பணம் இருக்கும். பெரும்பான்மை வியாபாரிகள் பல லட்சத்திற்கு அதிபதிகள். ஆனால், இவர்கள் அரசியலுக்குள் நுளையாமல் அரசியல்வாதிகளின் செல்வாக்குடன் மேலும் செல்வத்தை அடைவதுதான் இவர்கள் நோக்கம்.

தமிழ் மக்களிடம் கொண்டிருக்கும் ஒரு பெரிய பலவீனம் என்ன? கேளிக்கைகளும், சினிமாவிலிருக்கும் மோகமும். சினிமாதான் வாழ்க்கையென்று எத்தனையோ பாமர மக்கள் இன்றும் வாழ்கின்றார்கள். சினிமாவில் நடக்கும் கற்பனைகள் உண்மையென்று வாழ்பவர்கள் பல கோடி மக்கள். சினிமாவில் நடிப்பவர் ஒருவரை மக்கள் விரும்பி அந்தச் சினிமாவில் வைத்திருக்கும் மோகம், நாளடைவில் அந்த நடிகர் மீது பக்தியாக மாறுகின்றது. உதாரணம்:- N.T.ராமராவ், இவரைக் கிருஷ்ண பகவான் என்று சிலை வைத்துக் வணங்கியவர்களும் இந்திய மாநில மக்கள்தான். அந்த நடிகர் அரசியலுக்குள் நுளைந்தவுடன், பதவி கிடைத்தவுடன் மேலும் பணம் சேர்ப்பதுதான் அவர் நோக்கம். சில அரசியல்வாதிகள் பதவியிலிருக்கும் பொழுது மக்களுக்காகவே வாழ்ந்து, மக்களுக்குத் தேவையானவற்றை திட்டங்கள் மூலம் செயல் படுத்தியிருக்கின்றார்கள். ஆனால், பெரும் பான்மையானவர்கள், தங்களுடைய தேவைக்கு மேலே, குடும்பத்திற்காக பொருளையும், பணத்தையும் சேர்த்திருக்கின்றார்கள், சேர்க்கின்றார்கள்.

இதனால் நடப்பதென்ன? அரசியல் மோகம் கொண்டவர்கள், ஆண்டியாக இருப்பவர்கள், முதல் மந்திரியாகவோ, MLA / MP யாக வருவதற்கு என்ன வழியைச் சாடுகின்றார்கள். சினிமாவுக்குள் நுளைகின்றார்கள். போதிய பணம் சேர்ந்தவுடன், ஒரு அரசியல் கட்சியை அமைத்து, வேட்பாளராகி பதவியைக் கைப்பற்றுகின்றான். சினிமாவிற்குள் நுளைவதே பணம் சேர்ப்பதற்கும் அரசியலில் நுளைவதற்கும்தான். அதன் பின் முதல்வராகும் நோக்குடன் செயல் படுகின்றார்கள். தமிழக அரசியலை ஆராய்ந்தால் சினிமாதான் தமிழகத்தை பல வருடமாக ஆண்டு கொண்டிருக்கின்றது.

சரி, இப்பொழுது, புலம் பெயர்ந்து வாழ் தமிழ் மக்களைப் பார்ப்போம். பல சங்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதனுடைய அங்கத்தவர்கள் யாரைத் தலைவராக தெரிந்தெடுக்கின்றார்கள். டாக்டரோ, ஒரு கலாநிதியையோ தலைவராகத் தெரிந்தெடுக்கின்றார்கள். ஆனால், இதற்கு, முன் நிபந்தனை என்ன? இவரிடம் இரண்டடுக்கு மாளிகையும் பல வாகனங்களும் அதோடு அவர் செல்வந்தராகவும் இருக்கவேண்டும்.

ஆனால், இந்தத் தலைவர், மக்டொணால்ட்: இங்கு வாங்கும் உணவிற்குக் கொடுக்கும் பணத்தையும் சங்கக் கணக்கில் போட்டுவிடுவார். பார்த்தீர்களா, பணம் செய்யும் வல்லமையை?

இன்று ஆலயங்களைக் கட்டி எழுப்பி, அந்த ஆலயங்களே, ஒரு வியாபார நிலயமாகிவிட்டது.

இன்று அமெரிக்காவில் தெளிவு, அறிவு, பொறுப்புணர்ச்சியுள்ள, படித்த ஏழை ஒருவர் ஜனாதிபதியாக முடியுமா?

இன்று இந்தியாவில் தெளிவு, அறிவு, பொறுப்புணர்ச்சியுள்ள, படித்த ஏழை ஒருவர் பிரதம மந்திரியாக முடியுமா?

இன்று இலங்கையில் தெளிவு, அறிவு, பொறுப்புணர்ச்சியுள்ள, படித்த ஏழை ஒருவர் ஜனாதிபதியாக முடியுமா, பிரதம மந்திரியாக முடியுமா?

இறுதியில் நாம் பார்ப்பது, அனுபவிப்பது என்ன? ஜனநாயகம் என்று கூறி அந்த ஜனநாயகத்தை ஆளுவது யார்? பணநாயகங்களே. இதற்குக் காரண கர்த்தாக்கள் யார்? சிந்திக்க இயலாத, விழிப்புணர்ச்சியல்லாத மந்தைக் கூட்டங்களாகிய மக்களே.

நன்றி வணக்கம் !

சாண்டில்யன் - 31-07-2008

Edited by Sandilyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.