Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முல்லை வைத்தியசாலை பகுதியை அமைதிவலயமாக்க கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லை வைத்தியசாலை பகுதியை அமைதிவலயமாக்க கோரிக்கை

10.08.2008 / நிருபர் வானதி

முல்லைத்தீவு வைத்தியசாலையிலிருந்து 300 மீற்றர் சுற்றுவட்ட பிரதேசத்தை மோதலற்ற அமைதிவலயமாக பேணுமாறு இராணுவத்தை அரசாங்கம் அறிவுறுத்த வேண்டும் என தாம் கோருவதாக முல்லைத்தீவு

வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் வி.சண்முகராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சகல தரப்பினரிடமிருந்தும் மீள் உத்தரவாதத்தை நான் எதிர்பார்க்கிறேன். வைத்தியசாலை பாதுகாப்பாக இயங்குவதற்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு வைத்தியசாலையை அண்டிய பகுதியில் இடம் பெற்ற ஷெல் தாக்குதல்களைத் தொடர்ந்தே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி தாக்குதலில் மாவட்ட செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார், மருத்துவ அத்தி யட்சர் வி. சண்முகராஜாவின் மனைவி, மகன் ஆகியோரும் காயங்களுக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதல் குறித்து மருத்துவ அத்தியட்சகர் சண்முகராஜா தகவல் தெரிவிக்கையில் ""இத்தாக்குதலால் ஒரு குழந்தை பலியானது. 18 பேர் காயமடைந்தனர். கர்ப்பிணியொருவரும் காயமடைந்தார். முதியவர்கள் மூவருக்கு முறிவுகள் ஏற்பட்டன. அவர்களில் ஒருவரின் கை அகற்றப்பட நேர்ந்தது. காயமடைந்தவர்களில் குழந்தையொன்றும் அடங்கும். காய மடைந்த கர்ப்பிணியின் வயிற்றுப்பகுதி மயிரிழையில் காயங்களிலிருந்து தப்பியது. இத்தாக்குதல்களிலிருந்து பலர் தப்பியமை அதிசயமானது.

6 நோயாளிகள் இவ்வைத்தியசாலையிலிருந்து இடம்மாற்றப்பட்டனர் '' என்றார். ""தாக்குதல் இடம்பெற்ற வேளையில் வைத்தியசாலையில் சுமார் 100 நோயாளிகள் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட செயலாளர் திருமதி இமெல்டா தகவல் தெரிவிக்கையில் 25 ஷெல்கள் வைத்தியசாலையிலிருந்து 300 மீற்றர் சுற்றுப்பரப்புக்குள் விழுந்ததாக தெரிவித்துள்ளார். ""குறைந்த பட்சம் 6 ஷெல்கள் வீடுகளுக்குள் வீழ்ந்து வெடித்தன. குறைந்தபட்சம் 2 நிமிடத்திற்கொரு தடவை ஷெல்கள் விழுந்தன. இதேவேளை, இடம்பெயர்ந்த மக்கள் இலக்கு வைக்கப்படாதிருப்பதையும் இராணுவ இலக்குகளுக்கு அருகில் தங்க வைக்கப்படாதிருப்பதையும் உறுதிப்படுத்துமாறு தாம் வலியுறுத்துவதாக அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது.

""பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தற்போதைய நடவடிக்கைகளையடுத்து பாதுகாப்பு தேடி இடம்பெயரும் மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு அனுமதிக்குமாறும் கோருகிறோம்'' என அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகரலயத்தின் பேச்சாளர் ரொன் ரெட்மொன்ட் தெரிவித்துள்ளார்.

சங்கதி

இதனையும் விடுதலைப்புலிகள் யுத்தநிறுத்தம் கோரி விடுத்த அறிக்கையாகக் கருதி அரசு மறுத்துவிடப் போகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.