Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்கள் மீதான தாக்குதல்கள் ஐ.நா போரியல் விதிகளுக்கு முற்றிலும் முரணானது - ஜெயானந்தமூர்த்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை மீதும் அதனைச் சுற்றியுள்ள குடிமனைகள் மீதும் சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ள கண்மூடித்தனமான எறிகணைத்தாக்குதல் ஐக்கியநாடுகள் சபையின் போரியல் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதுடன் இத்தாக்குதலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக சர்வதேச ஊடகமொன்றுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: “வன்னி பெருநிலப்பரப்பை கைப்பற்றப்போவதாகக் கூறிக்கொண்டு படை நடவடிக்கையை மேற்கொண்டுள்ள சிறிலங்கா படை தற்போது அங்கு விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது தாக்குவதாகக் கூறிக் கொண்டு மக்கள் குடியிருப்புகள், வைத்தியசாலை பாடசாலைகள், சிறுவர் இல்லங்கள், மற்றும் அரச அலுவலகங்கள் மீதே தாக்குதலை நடத்தி வருகின்றனர். இவ்வாறான தாக்குதல்கள் அங்கு புதிதானதல்ல. கடந்த 2006 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் இரு வருடங்களுக்கு மேலாக வான்வழித் தாக்குதலாக இவ்வாறான தாக்குதல்களே இடம் பெற்று வருகின்றன. இதனால் அப்பாவி பொதுமக்களே பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விடுதலைப்புலிகளின் நிலைகள் மீதே தாம் தாக்குதல் நடத்தியதாக அரசு பொய் பிரச்சாரம் செய்து வருகின்றது.

இந்நிலையில் தற்போது வன்னி பிரதேசத்தில் படை நடவடிக்கையை மேற்கொண்டு வரும் படையினர் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை இலக்கு வைத்து பல்குழல் எறிகணைத் தாக்குதல்களையும் நடத்த ஆரம்பித்துள்ளனர். இதனால் மன்னார் மாவட்டம் மற்றும் ஏனைய எல்லைப்புறக் கிராமங்களைச்சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். எனினும் அவர்களுக்கான உணவு மற்றும் வைத்தியவசதிகள் என்பன மறுக்கப்பட்ட நிலையில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் அம்மக்கள் மரநிழலிலும் தற்காலிக சிறு குடிசைகள் அமைத்தும் தங்கியுள்ளனர்.

இவ்வாறு பொதுமக்களைக் கேடயமாக வைத்து தாக்குதலை நடத்தி வரும் சிறிலங்கா படையினர் வியாழக்கிழமை நள்ளிரவு முல்லைத்தீவு வைத்தியசாலை மற்றும் அதனை அண்டிய மக்கள் குடியிருப்புகள் மீது இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் படையினர் நிலை கொண்டுள்ள மணலாறு பகுதியிலிருந்து பல்குழல் பீரங்கிகள் மூலம் நடத்தப்பட்டுள்ளன. இதனால் வைத்தியசாலை, அரச அலுவலகங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒண்டரை வயது சிறுவன் பலியானதுடன் அரசாங்க அதிபர், வைத்திய அதிகாரி உபட்பட பதினாறு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

போரில் பலவீனமடைந்துள்ள படையினர் மக்களை கேடயமாக வைத்து இவ்வாறான தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இது ஐக்கியநாடுகள் சபையின் போரியல் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணான செயலாகும். கடந்த வருடத்தில் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் வான்வெளித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதிலும் வைத்தியசாலைக் கட்டிடங்கள் சேதமடைந்ததுடன் நோயாளிகளும் பாதிக்கப்பட்டனர்.

தற்போது மக்களை கேடயமாக வைத்து தாக்குதல் நடத்துவதன் மூலம் மக்களை விடுதலைப்புலிகளின் பகுதியிலிருந்து வெளியேற்றலாம் அல்லது வெறுப்படைய வைக்கலாம் என்ற திட்டத்தில் இத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறான தாக்குதல்கள் மூலம் சிறிலங்கா அரசோ அன்றில் படைகளோ எதையும் சாதித்துவிடப்போவதில்லை. மாறாக பாரிய விளைவுகளையே படையினர் சந்திக்க வேண்டி ஏற்படும். கிழக்கில் மக்கள் குடியிருப்புகள் மீது தாக்குதலை நடத்தி மக்களை வெளியேற்றிவிட்டு படை நடவடிக்கையின் மூலம் இடங்களைப் பிடித்ததாக செய்த பிரச்சாரம் போல் வன்னி பிரதேசத்தில் அவ்வாறான திட்டங்களை சாதித்து விடமுடியாது அவ்வாறான திட்டம் நிட்சயம் படையினருக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியே தீரும்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்

http://www.pathivu.com/?p=2760

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.